இறையருளால் முழுமையாக நிரப்பப்பெற்ற முழுமையின் தாயே! எம் அன்னை மரியே! நீர் வாழ்க! இவ்வுலகில் வாழுகின்ற எமக்கு, அடைக்கலமும் ஆதரவும் நீரே. உம் மகனாம் எம் மீட்பர் இயேசுவை, அன்பு செய்ய அவர் நினைவாக வாழ, அவர் சொல்படி நடக்க பலம் தாரும் அம்மா. புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின், ஆன்மீகப் பிள்ளைகளாகிய நாங்கள், ஆன்ம உடல் நலத்தோடு உலகை வென்றிட, ஆற்றல் தாரும் அம்மா. மகிழ்ச்சியையும் அமைதியையும், அருள் மழையாக பொழிந்தருளும் தாயே. இம்மண்ணில் நிறை அமைதியும், இறைபிரசன்னமும் நிலைக்கட்டும். பாவிகளாகிய எங்களுக்காக உம் மகன் இயேசுவிடம் மன்றாடும் அம்மா, ஆமென்.





