புனித பியோ நவநாள் ஜெப அட்டை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Photo Gallery 25/09/2022

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Video Gallary










 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நல்லவன் × கெட்டவன்

 நல்லவனாய் இருப்பதற்கும் கெட்டவனாய் இருப்பதற்கும் அவன் அவன் அதற்குப் பொறுப்பு. நல்லவன் மிகுந்த முயற்சிகள் எடுத்து நல்லவனாக இருக்கலாம். ஆனால் கெட்டவன் மிக சுலபமாக கெட்டவனாக மாறிவிடலாம். கெட்டவன் மனம் மாறி நல்லவனாக வாழ்கிறான் என்றால், அவன் கடவுளுடைய ஆசிர்வாதத்திற்கு சொந்தக்காரனாக மாறிவிடுகிறான். கடவுளும் பாவி மனம் மாறி வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார். பாவி ஒருவன் அழிந்து போக வேண்டும் என்று கடவுள் விரும்புவதில்லை. நல்லவனாக இருக்கிறவன் தவறுதலாக கெட்டுப் போகிற பொழுது, கடவுளின் சாபத்தை தான் பெற்றுக்கொள்கிறான் (எசேக் 18:23-25). அவன் நல்லவனாக இருந்தான் என்பதற்காக எந்த விதத்திலும் அவன் கடவுளிடம் வாழ்வை பெற்றுவிட முடியாது. அவனுக்கு அழிவு நிச்சயம். நல்லவனாக இருந்து கெட்டவனாக மாறுகிறவனுக்கு பெரிய ஆபத்து, தப்பிக்க முடியாத ஆபத்தில் போய் முடிந்து விடும். இயேசுவும் தனது சீடர்களிடத்திலே கேட்டுக் கொள்வது இதுதான், "மறை நூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்து இருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்" (மத் 5: 20). 

இன்று அதைதான் இயேசு கிறிஸ்தவர்களாகிய நமக்கு சொல்லுகிறார். நம்முடைய நெறி; நம்முடைய ஒழுக்கம் நிறைந்த வாழ்வு மிக மிக சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கடவுளின் அரசிற்கு அப்பாற்பட்டவர்களாக போய்விடுவோம். அவருடைய ஆட்சிக்குள் நுழையவே முடியாது. அழிவே நமக்கு இறுதியாகிவிடும். ஆகவே கடவுளின் சாபமும் ஆசிர்வாதமும் அவரவர் கையில் இருக்கிறது.

 இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவன் என்ற பொறுப்போடு வாழ்ந்து கடவுளுடைய ஆசீர்வாதத்தை நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விழிப்போடு ஜெபிப்போம், விழிப்போடு வாழ்வோம். நம்மை சுற்றி வான தூதர்கள் வந்து உதவி செய்வார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீரும் ஆகட்டும்.








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அறிவிப்பு

 புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் அன்பு சகோதர சகோதரிகளே, வணக்கம்.

 சில வருடங்களாக புனித ஜெபமாலை இயக்கத்திற்கான இரு மாத இதழ் "பியோ குரல்"  என்ற பெயரிலே வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கிய காலத்தில் இருந்து அந்த இதழ் நிறுத்தப்பட்டது. காரணம் அதற்குப் போதிய நிதி உதவி கிடைக்கவில்லை. ஆகவே, அதற்காக வருந்துகின்றேன். இனிவரும் காலங்களில் stpiorosarymovement என்ற bloggerஐ திரும்பவும் சீரமைப்பு செய்து அதன் வழியாக உங்களோடு தொடர்புகளை தொடரவும், நமது கத்தோலிக்க விசுவாசத்திற்கு தேவையான ஆன்மீக சிந்தனைகளை உங்களுக்கு வழங்கவும் ஆவலாய் இருக்கிறேன்.

 ஆகவே, இதில் உங்களுடைய படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு ஒத்துழைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த bloggerஐ பார்க்க விரும்புகிறவர்கள் பார்த்து பயனடையின்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இறைவன் உங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக!

மனித தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.

இப்படிக்கு,

 தந்தை A. செல்வராஜ் க.ச.

புனித பியோ ஜபமாலை இயக்க நிறுவனர் & வழிகாட்டி,.              பதோனி இல்லம்,                                      D- 127, 10வது கிராஸ் கிழக்கு,  தில்லை நகர், திருச்சி -18

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வத்திக்கான் செய்திகள்

சுவராக இல்லாமல், அன்பின் சமூகமாக மாறுவோம்.

குழந்தைகளை இயேசு வரவேற்று ஏற்றுக்கொண்டது போல அன்புடன் பெற்றோரும்  ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
பசியால் வாடுகின்ற கைவிடப்பட்ட, சுரண்டலுக்கு ஈடுபடுத்தப்படுகின்ற அன்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் இந்தச் சமூகம் வரவேற்க வேண்டும்.
ஏழ்மையாலும் மோதல்களாலும் துன்புறும் குழந்தைகளைக் காண்பது மிகப்பொரும் வேதனையைத் தருகின்றது என்ற திருத்தந்தை தம் கதவுகளைத் தட்டும் இந்தக் குழந்தைகளுக்கு சுவராக இல்லாமல் அன்பின் சமூகமாக மாறு வோம் என்றார்.

குடும்பங்களுக்கு திருஅவையின் முழு ஆதரவு

குடும்பம் குறித்த ஆயர் மாமன்றம் இடம் பெற்றுவரும் இவ்வேளை பொது நலனுக்கு உதவுன்ற கண்ணோட்டத்தில் குடும்பத்திற்கும் திருஅவைக்கும் இடயே நிலவும் ஆழமான உறவின் சில கூறுகள் குறித்து நோக்குவோம். இறைவனின் பாதையில் குடும்பங்கள் பயணம் செய்யும்போது இறைஅன்பின் அடிப்படை சாட்சிகளாக அவை விளங்குகின்றன. குடும்பங்களுக்கு திருஅவையின் ஆதரவும் முழு அர்ப்பணமும் அத்தியாவசியமாக வழங்கப்பட வேண்டும். துன்ப வேளைகளில் கூட ஒருவன் ஒருவருக்கிடையேற்று மாறா உறுதிப்பாடு நேர்மை, நம்பிக்கை, ஒத்துழைப்பு, மற்றும் மதிப்பு ஆகிய பண்புகளில்  குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். சமூகத்தில் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்படுவது தும்பங்களில்தான். இருப்பினும் இன்றைய  அரசியல் மற்றம் பொருளாதார வாழ்வில்லா நேரங்களிலும் குடும்பங்களுக்கு  ஆதரவை வழங்குவதில்லை. அது மட்டுமல்ல குடும்ப மதிப்பீடுளை சமுக வாழ்வில் உள்புகுத்தி ஒன்றிணைக்கும் பலத்தையும் இழந்துவிட்டது. 
இங்கு திருஅவையும் இறைவனின் குடும்பமாக எவ்வளவு தூரம் வார்ந்து வருகின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அழைப்புப் பெற்றுள்ளது. தூய பேதுருவைப்போல் திருஅவையும் மனிதகளைப் பிடிக்கம் மீன்வராக மாற அழைப்பு பெற்றுள்ளது. இதற்கு ஒரு புது வகையான வலையும் தேவைப்படுகின்ற குடும்பங்களே நமக்கு விடுதலை வழங்குகின்றன. அதன் வழியாகவே இறை வனின் குழந்தைகளாக இருப்பதில் கிட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றnhம். பிடிக்கப்போகும் மீன்களின் அளவு மிகப்பெரிதாக இருகிட்டும் என்ற நம்பிக்கை மிக ஆழமாகப் பயணம் செய்யட்டும்.  தூய ஆவியாரால் தூண்டப்படும் ஆய மாமன்ற தந்தையர்களும் இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாசத்திலும் உறுதிப்பாட்டிலும்  திருஅவை தன் வலையை ஊக்கமளிப்பார்களாக.

உலகின் இருளின் மத்தியில் குடும்பம் எப்போதும் ஒளியாக உள்ளது.

இருளில் சிறிய மெழுகுதிரியை ஏற்றுவது எத்துணை நல்லது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருளை விரட்டுவதற்க இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றதா? இருளைப் போக்கமுடியுமா? என்ற கேள்விகளுடன் தன் மறையுரையைத் தொடங்கினார்.
வத்திக்கானில், 14வது ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, புனித பேதுரு பசிலிக்காய் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவன் நம் வாழ்வுக்காக வைத்துள்ள திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு அதை ஏற்பதற்குக் கற்றுக் கொள்ளும் இடம் குடும்பம் என்று கூறியத் திருத்தந்தை, நன்றியுணர்வு, உடன்பிறப்பு உணர்வின் பிரசன்னம் மற்றும் தோழமையின் இடம் குடும்பம் என்பதையும், பிறரை ஏற்கவும், மன்னிக்கவும், மன்னிப்புப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்பதையும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடும்பமும், அது எந்நிலையில் இருந்தாலும், இவ்வுலக இருளின் மத்தியில் எப்போதும் ஒளியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதை ஏற்று, குடும்பத்தில் உள்ள அழகு, நன்மை, புனிதம் ஆகியவற்றை மாமன்றத் தந்தையர் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரக்கத்தின் ஆண்டு

வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை விழாவன்று தொடங்கி 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடையும் இரக்கத்தின் புனித ஆண்டு, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அருளை வழங்கும் உண்மையான காலமாக அமையும் மற்றும் புதிய வழியில் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதற்கும், மேய்ப்புப் பணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கும் தூண்டுலாக இருக்கும் என்று கூறினார் பேராயர் Salvatore Fisichella இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Fisichella அவர்கள். திருஅவை இரக்கத்தையும், கருணையையும் வழங்குவதற்கு, தணியாத ஆர்வத்தில வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகு குறிப்பு (முகம் ஒளி பெற)


போனேன், போகிறேன், போவேன் என்று முக்காலத்தையும் உணர்த்தினார் ஒரு மங்கை. எங்கே? என்றேன். Beauty parlour என்றார்.
ஏன் என்றேன்.
முகத்தில் வயதை மறைக்க என்றார்.
நானும் தேடினேன் முகத்தை விவிலியத்தில்

நானோ நேர்மையில் நிலைத்து
உமது முகம் காண்பேன்
விழித்தெழும்போது  உமது முகம் கண்டு
நிறைவு பெறுவேன்

ஆண்டவர் எளியோர்க்குத் தன் முகத்தை
மறைக்கவுமில்லை
வறியோருக்குத் தம் முகத்தை
திருப்பவுமில்லை.

ஆண்டவரின் முகம் தீமை செய்வோருக்கு
எதிராக இருக்கிறது.
ஆண்டவரின் முகம் பாவிகளை நோக்கி
இரக்கப் பார்வை பார்க்கிறது.

ஆண்டவரின் வார்த்ததையைக் கேட்டு அதன்படி நடக்காதவர்கள்
கண்ணாடியில் தம் முகம் பார்த்து பின்பு தான் எவ்வாறு இருந்தார்
என்பதை மறந்து விடும் ஒரு சாதாரண மனிதருக்கு ஒப்பாவார்.
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசச் செய்யும்.

இந்த முகம் இறைவனுக்குச் சொந்தம்
என்பதைக் கண்டு கொள்ளச் செய்யும்.
தந்தை பியோவும் இதை உணர்ந்து வாழ்ந்ததால்தான்

இறந்தபின்னும் அவர் முகத்தில் ஒளி.
அவர் முகம் அழியவில்லை.

ஆகவே பியோவின் வழியில் வாழ்ந்து
நமது முகத்தை  ஒளியாக்கவோம்.

எப்படி?
முகத்துக்கு  Beauty Tips  கொடுத்தேனா?

ன்னை மரியா..
சையுடன் பெற்ற மகன்
றப்பின் தருவாயில்...
ட்டியால் துளைக்கப்பட
றைந்து நிற்கின்றாள்
ரார் முகம் எங்கே?
ங்கே போயினரோ?
க்கத்துடனே அவள்
யோ மகனே என்கிறாள்
ன்று சொல்கிறோம்
டுகிறோம் உம் முகம் நோக்கி
தந்தை பியோ வழியாக....

அக்ஸிலியா ஜோசப் லியோன், தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS