வத்திக்கான் செய்திகள்

சுவராக இல்லாமல், அன்பின் சமூகமாக மாறுவோம்.

குழந்தைகளை இயேசு வரவேற்று ஏற்றுக்கொண்டது போல அன்புடன் பெற்றோரும்  ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
பசியால் வாடுகின்ற கைவிடப்பட்ட, சுரண்டலுக்கு ஈடுபடுத்தப்படுகின்ற அன்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் இந்தச் சமூகம் வரவேற்க வேண்டும்.
ஏழ்மையாலும் மோதல்களாலும் துன்புறும் குழந்தைகளைக் காண்பது மிகப்பொரும் வேதனையைத் தருகின்றது என்ற திருத்தந்தை தம் கதவுகளைத் தட்டும் இந்தக் குழந்தைகளுக்கு சுவராக இல்லாமல் அன்பின் சமூகமாக மாறு வோம் என்றார்.

குடும்பங்களுக்கு திருஅவையின் முழு ஆதரவு

குடும்பம் குறித்த ஆயர் மாமன்றம் இடம் பெற்றுவரும் இவ்வேளை பொது நலனுக்கு உதவுன்ற கண்ணோட்டத்தில் குடும்பத்திற்கும் திருஅவைக்கும் இடயே நிலவும் ஆழமான உறவின் சில கூறுகள் குறித்து நோக்குவோம். இறைவனின் பாதையில் குடும்பங்கள் பயணம் செய்யும்போது இறைஅன்பின் அடிப்படை சாட்சிகளாக அவை விளங்குகின்றன. குடும்பங்களுக்கு திருஅவையின் ஆதரவும் முழு அர்ப்பணமும் அத்தியாவசியமாக வழங்கப்பட வேண்டும். துன்ப வேளைகளில் கூட ஒருவன் ஒருவருக்கிடையேற்று மாறா உறுதிப்பாடு நேர்மை, நம்பிக்கை, ஒத்துழைப்பு, மற்றும் மதிப்பு ஆகிய பண்புகளில்  குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். சமூகத்தில் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்படுவது தும்பங்களில்தான். இருப்பினும் இன்றைய  அரசியல் மற்றம் பொருளாதார வாழ்வில்லா நேரங்களிலும் குடும்பங்களுக்கு  ஆதரவை வழங்குவதில்லை. அது மட்டுமல்ல குடும்ப மதிப்பீடுளை சமுக வாழ்வில் உள்புகுத்தி ஒன்றிணைக்கும் பலத்தையும் இழந்துவிட்டது. 
இங்கு திருஅவையும் இறைவனின் குடும்பமாக எவ்வளவு தூரம் வார்ந்து வருகின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அழைப்புப் பெற்றுள்ளது. தூய பேதுருவைப்போல் திருஅவையும் மனிதகளைப் பிடிக்கம் மீன்வராக மாற அழைப்பு பெற்றுள்ளது. இதற்கு ஒரு புது வகையான வலையும் தேவைப்படுகின்ற குடும்பங்களே நமக்கு விடுதலை வழங்குகின்றன. அதன் வழியாகவே இறை வனின் குழந்தைகளாக இருப்பதில் கிட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றnhம். பிடிக்கப்போகும் மீன்களின் அளவு மிகப்பெரிதாக இருகிட்டும் என்ற நம்பிக்கை மிக ஆழமாகப் பயணம் செய்யட்டும்.  தூய ஆவியாரால் தூண்டப்படும் ஆய மாமன்ற தந்தையர்களும் இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாசத்திலும் உறுதிப்பாட்டிலும்  திருஅவை தன் வலையை ஊக்கமளிப்பார்களாக.

உலகின் இருளின் மத்தியில் குடும்பம் எப்போதும் ஒளியாக உள்ளது.

இருளில் சிறிய மெழுகுதிரியை ஏற்றுவது எத்துணை நல்லது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருளை விரட்டுவதற்க இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றதா? இருளைப் போக்கமுடியுமா? என்ற கேள்விகளுடன் தன் மறையுரையைத் தொடங்கினார்.
வத்திக்கானில், 14வது ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, புனித பேதுரு பசிலிக்காய் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவன் நம் வாழ்வுக்காக வைத்துள்ள திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு அதை ஏற்பதற்குக் கற்றுக் கொள்ளும் இடம் குடும்பம் என்று கூறியத் திருத்தந்தை, நன்றியுணர்வு, உடன்பிறப்பு உணர்வின் பிரசன்னம் மற்றும் தோழமையின் இடம் குடும்பம் என்பதையும், பிறரை ஏற்கவும், மன்னிக்கவும், மன்னிப்புப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்பதையும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடும்பமும், அது எந்நிலையில் இருந்தாலும், இவ்வுலக இருளின் மத்தியில் எப்போதும் ஒளியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதை ஏற்று, குடும்பத்தில் உள்ள அழகு, நன்மை, புனிதம் ஆகியவற்றை மாமன்றத் தந்தையர் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரக்கத்தின் ஆண்டு

வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை விழாவன்று தொடங்கி 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடையும் இரக்கத்தின் புனித ஆண்டு, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அருளை வழங்கும் உண்மையான காலமாக அமையும் மற்றும் புதிய வழியில் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதற்கும், மேய்ப்புப் பணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கும் தூண்டுலாக இருக்கும் என்று கூறினார் பேராயர் Salvatore Fisichella இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Fisichella அவர்கள். திருஅவை இரக்கத்தையும், கருணையையும் வழங்குவதற்கு, தணியாத ஆர்வத்தில வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக