கன்னியின் காட்சிகள்


கி.பி. 1858 பிப்ரவரி 11 - ஜூலை 16:

பிரான்சிஸ் நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார்.   பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார்.  மரியன்னை பெர்னதெத்திடம், ‘நானே அமல உற்பவம்.  எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுதப்பட வேண்டும்.  பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் ஜெபமும் தவமும் செய்ய வேண்டும்.  ’ என்று கூறினார்.   அன்னை, நாளுக்கு ஒருமறையுண்மை என்ற வகையில் ஜெபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை ஜெபிக்கச் செய்தார்.   அன்னை மரியாவின் காட்சிக்கு அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றியது.  

கி.  பி.   1917 மே 13 - அக்டோபர் 13:

போர்ச்சுகல் நாட்டின் பாத்திமா நகரில் புதர் ஒன்றின்மீது அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார்.  லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் மூன்று சிறாருக்கு அன்னையின் காட்சியைப் பார்க்கும் பேறுகிடைத்தது.   அன்னை அவர்களிடம், ‘நான் ஜெபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தியமைக்கவேண்டும்.   தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்.   எல்லோரும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.   பாவிகளின் மனமாற்றத்திற்காக ஜெபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   உலகம் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்‘ என்று கூறினார்.  நரகத்தின் காட்சியைச் சிறுவர்களுக்குக் காண்பித்த மரியன்னை, நரகவேதனைக்கு உட்படாதவாறு ஜெபிக்கவும் கற்றுக் கொடுத்தார்.   இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவின் மனந்திருப்பல், திருச்சபைக்கு வரும் துன்பம் ஆகியவற்றை அன்னை முன்னறிவித்தார்.   அக்டோபர் 13ஆம் தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியின்போது அங்குமிங்கும் தள்ளாடிய அதிசயத்தைப் பாத்திமாவில்  கூடியிருந்த சுமார் முப்பதாயிரம் பேர் கண்டு சாட்சிகளாயினர்.  

கி.  பி.   16 ஆம் நூற்றாண்டு 

தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார்.   பால்கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்குத் தோன்றிய அன்னை,  பால் பொங்கி வழியும்அற்புதத்தை நிகழ்த்தினார்.   மோர் விற்ற கால் ஊனமுற்ற  சிறுவனுக்குத் தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்துஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார்.   அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்குத் தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர்ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.   அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம்முதலில் கட்டப்பட்டது.   சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினார்.  

தூணில் கன்னி மரியாள் 

நமதாண்டவர் இயேசு கிறிஸ்து  இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த பின் அப்போஸ்தலர்கள் நற்செய்தி பரப்ப உலகின் பல திசைகளுக்குச்சென்றனர்.   அப்படி சென்றவர்களில் யாகப்பர் (துயஅநள) என்றவர் ஸ்பெயின் தேசத்திற்கு சென்றார்.   அவரது அப்போஸ்தல பணி சிறக்காமல் தோல்வியைத் தழுவியதால் மனம் உடைந்தவராய் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார்.  அந்நேரத்தில் அன்னை மரியாள் முதல் முறையாக அவர்முன் தோன்றினார்.   யாகப்பரின் கையில் தன் உருவம் கொண்ட ஒரு மரச் சுரூபத்தைக் கொடுத்தார்.   அதோடு ஜெஸ்பர் மரத்தாலான தூண் ஒன்றையும் கொடுத்து தமக்சுசர அகோசஸா என்னுமிடத்தில் ஓர் ஆலயம் எழுப்பச்சொன்னார்.   ‘இந்த இடம் என் இல்லமாகட்டும்.   இந்த சொரூபம்,  இந்த ஜெஸ்பர் மரத்தூணும் நீ கட்டும் இந்த ஆலயத்திற்குப் பீடமாகவும், பெயராகவும் அமையட்டும்.  ’ என்றார் அன்னை.   இன்றளவும் இந்த மரத்தாள் ஆன மாதாவின் சொரூபமும், ஜெஸ்பர் தூணும் இவ்வாலயத்தில் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திரு இரத்தத்தின் ஜெபமாலை


நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.

இதோ ! ஆண்டவரின் சிலுவை.   சத்துருகள் அகன்றுப் போகட்டும்.  இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும்.   யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார்.  !அல்லேலூயா (3)

எல்லோரும்: இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (2 முறை)
  1. ஒருவர் : இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே! எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  ) (5 முறை சொல்லவும்) 
  2. ஒருவர் : இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே(5) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.   (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  )  (5 முறை சொல்லவும்) 
  3. ஒருவர் : இயேசுவின் திருவிலாவிலிருந்து வழிந்தோடிய பரிசத்த இரத்தமும், தண்ணீருமே (5 முறை) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவின் அன்புக்கோட்டைக்குள்ளே .   .   .   .   . 
  4. ஒருவர்:  இயேசுவே! உமது திருக்கை, கால்களிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே   எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  )  (5 முறை சொல்லவும்) 
  5. ஒருவர் : இயேசுவின் அனைத்துக் காயங்களிலிருந்தும் வழிந்தோடிய பரிசுத்தஇரத்தமே (5 முறை)   எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவே! உமது அன்புக்கோட்டைக்குள்ளே .   .   .   .   .  

செபிப்போமாக : எங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரே ! எங்கள்பகைவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.   சகல அபாய மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மகா பாக்கியமான நல்ல மரணத்தையும், நித்திய பரலோக ஜீவியத்தையும் எங்களுக்குக் கட்டளை இட்டருளும்.   இரக்கம்நிறைந்த இயேசுவே! நீங்கள் சுமந்த பாரமான சிலுவையால் ஏற்பட்ட உம்தோளின் கொடூரக் காயத்தினையும் உம் ஐந்து திருக்காயங்களையும் பார்த்து, பாவிகளாகிய எங்கள் மேலும், பரிசுத்த சகல ஆத்துமாக்கள் மீதும் இரக்கமாயிரும்.   எங்களுக்காகப் பாடுகள் ஏற்ற இயேசுவே! அன்று புனிதத்துணியில் பதிந்த உம் திருமுகத்தை நாங்கள் தரிசிக்க இப்போதும் எப்போதும் எனக்கு வரம் அருளும்.   ஆமென் ! 

சகோ.   சிறிய புஷ்பம் தூய இதய ஆசிரியப் பயிற்சி நிறுவனம் , கடலூர்.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரக்கத்தின் பக்தி


இயேசுக் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் பக்தி திருச்சபையில் புதிதானதல்ல.   பழங்காலத் தொட்டே நிலவி வருகிறது.  இயேசுக்கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணையும் ஏற்படுத்திய புனித வியாழனன்றே ஏற்படுத்தப்பட்டது.   இயேசு பாடுபடுவதற்கு முந்திய இரவு அப்போஸ்தலர்களிடம், ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்.  எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்.   உணவு அருந்திய பின்பு, கிண்ணத்தை எடுத்து ‘இந்தக் கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை’ என்று கூறிய வார்த்தைகள்  உறுதிப்படுத்துகின்றன.  ‘கிறிஸ்துவின்  இரத்தம் மீட்பின் ஊற்று’ எனத் திருத்தந்தை ஜான் பால் 2  கூறியுள்ளார்.  
‘இரத்தமும், தண்ணீரும் பீறிட்டுவரும், ஓ! இயேசுவின் திரு இருதயமே’ எங்கள் மேல் இரக்கமாயிரும்.   நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்‘ எனச் செபிக்கிறோம்.   நம்முடைய பாவங்களுக்கும், உலகிலுள்ள அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக இயேசுவின் இரத்தத்தைக் காணிக்கையாக்குகிறோம். 

1995ஆம் வருடத்தில், இறை இரக்கத்தின் நேரமாகிய மதியம் 3மணியளவில் நைஜீரியாவில் எனுகு மாவட்டத்தில் ஒலோ என்ற ஊரிலுள்ளபர்ணபாஸ் நோயே என்பவருக்குக் காட்சியில் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை ஆராதித்து ஆறுதலளிக்கக் கேட்டுக் கொண்டார்.   இரண்டு வருடங்களுக்குப் பின், திரு இரத்தத்தின் ஜெபமாலையையும், இன்னும் பலபயனுள்ள ஜெபங்களையும் நேரடியாகக் கொடுத்துள்ளார்.  

இயேசுவின் உயிருள்ள உடலிலிருந்து இரத்தத்தைப் பிரிக்க முடியாது.  இப்பக்தி மிகச் சிறப்பானது.   இப்பக்தி தீய ஆவிகளையும், சாத்தானையும்அழிக்கும் கருவியாகும்.   இப்பக்தியை அனுசரிப்பவர்களைத் திடீர் மரணம், தீய ஆவி இன்னும் பலவிதமான நோய்களிலிருந்து  காப்பாற்றி,  இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்து பேரின் பத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதி கூறுகிறார். 

‘ஜெத்சமனியில் உலகிலுள்ள எல்லா மக்களுக்காகவும் நான் காத்திருக்கிறேன்.   பயங்கரமும்,  அச்சமும் நிறைந்த நேரம் அது’ என்று இயேசு பர்ணபாஸ் என்பவரிடம் கூறினார்.   ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 11மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 3 மணி வரை ஜெத்சமனி நேரமாகும். 

’இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் ஜெபமாலையைப்பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு விசேஷ அருள் வரங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசுவின் ஐந்து காயம் பெற்ற நறுமணத்தவர் தந்தை பியோ


கடிதத்திலிருந்து நாம் அறியும் சில உண்மைகள்

குருத்துவ வாழ்வின் ஆரம்ப நிலையில் கூட, பிந்தைய நாட்களில்அவரை மிகவும் சிறப்புப் பெற்று விளங்கியச் செய்தியாக வெளிப்படையானகாயங்களைப் பற்றிய சில அடையாளங்களை அவர் அனுபவித்து வந்ததாக தந்தை பியோவின் கடிதங்களிலிருந்து தெரியவருகிறது.  

1911ஆம் ஆண்டு தந்தை பியோ தனது ஆன்மிக ஆலோசகர், லாமிஸில் (Lamis))  உள்ள சான் மார்கோவைச் (San Marco)  சார்ந்த அருட்தந்தை பெனடிற்றோ (Benedetto))  என்பவருக்கு எழுதியகடிதத்திலே ஒரு வருடமாக அவர் அனுபவித்துக் கொண்டிருந்த ஒன்றைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.  ‘நேற்றைய இரவிலே நான் விளக்கிச் சொல்ல முடியாததும் புரிந்துகொள்ள முடியாததுமான ஏதோ ஒன்று நிகழ்ந்நது.   என் உள்ளங்கைகளின் நடுவிலே ஒரு பென்னி ( நீல)  நாணயம் அளவிலே சிறப்புநிற அடையாளம் தோன்றியது.   அதைத் தொடர்ந்து அந்தச்சிவப்பு அடையாளத்தின் நடுவிலே அந்த வலி மிகவும்குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருந்தது, எவ்வளவு என்றால் அந்த வலியை இன்றும் உணர முடிகிறது.   மேலும் பாதத்தில்அடியில் இன்னும் கொஞ்சம் வலியை உணர முடிகின்றது.  

அவரது நெருங்கிய நண்பர் அருட்தந்தை அகுஸ்தினோ 1915ஆம் ஆண்டு எழுதியதில், அவரிடம் சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.   அதிலே 
  1. எப்போது காட்சிகள் பற்றிய அனுபவம் ஏற்பட்டது.   
  2. ஐந்து காய வரம் அருளப்பட்டிருக்கிறதா?   
  3. இயேசுவின் திருப்பாடுகளின் வேதனையை அவரால் உணர முடிந்ததா?   அதாவது முள்மூடி சூடப்பட்டது, கசையால் அடிபட்டது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டனவா?   


இந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதிய தந்தை பியோ இவ்வாறு எழுதியிருக்கிறார்.   1903 முதல் 1904 ஆண்டு வரையிலும் நவ சந்நியாசமடத்தில் இருந்த காலத்திலிருந்தே காட்சி வரம் அருளப்பட்டுள்ளது.  காயங்கள் பற்றி எழுதும் போது, ஏற்கனவே ஐந்து திருக்காய வரம் கொடுக்கப்பட்டுவிட்டாலும்,  அது குறித்து அவர் கலங்கியதால் அந்தவரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார்.   அதனால் ஏற்பட்ட வலி  நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளவில்லை.   அந்த வெளிப்படையான காயங்களை மட்டுமே அகற்றவேண்டினார்.   அதனை விவரிக்க இயலாத பெரும்பாலும் தாங்கவே முடியாத அவமானமாகவே அவர் அவற்றைக் கருதினார்.   அந்த வெளிப்படையான காயங்கள் உடனே மறைந்துவிட்டாலும் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்பவும் தோன்றி விட்டது.   மேலும் வலி தொடர்ந்து இருந்தது என்றும்மிகவும் குறிப்பிடத்தக்க நாட்களிலே,  சில சூழ்நிலைகளிலே வலி மிகவும்அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.   அவரது முள்முடியின் வேதனையையும் கசையால் அடிபட்ட வேதனையையும்,  அவர் அனுபவித்துக்கொண்டுதான் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   இந்த அனுபவம் எவ்வளவு இடைவெளிகளுக்கு ஒருமுறை இருந்தது என்று மிகச்சரியாகச் சொல்லமுடியாவிட்டாலும் பல ஆண்டுகளாக வாரத்திற்கு ஒருமுறை அந்த வேதனையைஅனுபவித்து வந்ததாகச் சொல்லியிருந்தார்.  
அந்தக் காயங்கள் காரணமாக உடல்நலம் குன்றியதால் அவரதுவீட்டில் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   அவரது மடத்திலிருந்து வெளியே தங்கியிருந்தாலும் துறவியின் வாழ்வைத் தொடர விரும்பியதால்தினசரி திருப்பலி நிறைவேற்றி பள்ளியில் பயிற்றுவித்து வந்தார்.  

ஜூலை 1918இல் முதல் உலகமகாயுத்தம் நடந்து கொண்டிருந்ததால் திருத்தந்தை 15ஆம் பெனடிக், ‘ஐரோப்பியாவின் தற்கொலை’ என்று அவர் அழைத்த அந்த உலகப்போர் முடிவுக்கு வர வேண்டும் என்று எல்லா கிறிஸ்தவர்களும் இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டுமென்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.   ஜூலை 27ஆம் தேதி தந்தை பியோ இந்த உலகப்போர் முடிவுக்கு வருவதற்காக தன்னையே காணிக்கையாக ஒப்படைத்தார்.   நாட்கள் நகர்ந்தன.   ஆகஸ்ட் 5 லிருந்து 7ஆம் தேதிக்குள் ஒருநாள் இயேசு தந்தை பியோவிற்குக் காட்சியில் தோன்றிஅவரது விலாப்பகுதியைக் குத்தி திறந்தது போன்று காட்சிக் கிடைத்தது.  அதன் விளைவாக,  தந்தை பியோவிற்கு விலாப்பகுதியில் காயம் ஒன்றுஏற்பட்டது.   ஐந்தாவது காயங்களின் தோற்றம் அல்லது இதயம் குத்தித்திறக்கப்பட்டது இறையன்பின் சங்கமத்தைக் குறித்துக் காட்டுகிறது.  இதயம் குத்தித் திறக்கப்பட்டபோது வடிந்த இரத்தம் தாங்கிய துணியானது, சிக்காகோவிலுள்ள ஜான்கேன்டியுங் ஆலயத்தில் பொது மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 

காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் ஆன்மிகஆறுதலின்றி தவித்தார் புனித தந்தை பியோ.   அவருடன் இருந்த கப்புச்சின்சபையைச் சேர்ந்த ஓர் அருட் சகோதரர், இந்த நாட்களில் அவரது தோற்றமேஇறந்து போனவரது தோற்றம் போன்று இருந்தது.   அவர் தொடர்ந்து கண்ணீர்சிந்தி கொண்டும் ஏக்கபெருமூச்சு விட்டுக் கொண்டும் கடவுள் என்னைக்கைவிட்டு விட்டார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  

ஆகஸ்ட் 21, 1918ஆம் ஆண்டில் அருட்தந்தை பெனடிற்றோவிற்கு7 நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள் ( 1 தெச 5- 21) புனித தந்தை பியோ எழுதிய கடிதத்திலே ஐந்துகாலம் தோன்றிய காலங்களில்அனுபவித்த வேதனைகளைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.   ‘ ஆகஸ்ட் 5 ஆம்தேதி ஒரு சிறுவனுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி கொண்டிருந்த போது, என் மனக்கண்முன்னால் தோன்றிய உருவத்தைப் பார்த்து திடீரென்றுஅதிர்ச்சிக்குள்ளானேன்.   நெருப்பு கக்கிய நீண்ட கூர்மையான இரும்புக்கத்தியைப் போன்ற கருவி ஒன்றை கையில் வைத்திருந்தார்.   அதைப் பார்த்தமாத்திரத்தில் அவரது பலத்தையெல்லாம் சேர்த்து அந்தக் கருவியை என்ஆன்மாவில் குத்தியதை நான் உணர்ந்தேன்.   நான் வேதனையில் அலறினேன்.  இறப்பதைப்போல உணர்ந்தேன்.   தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனம் வழங்கஆற்றல் இல்லாததுபோல பலவீனமாகத் தோன்றிதால் அந்தச் சிறுவனைபோகச் சொல்லிவிட்டேன்.   அப்போதிலிருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை வேதனை தொடர்ந்து நீடித்தது.   இந்தக் கொடூரமான வேதனை காலத்திலேஅனுபவித்த துன்பத்தை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது.  உள் உறுப்புகள் எல்லாம் கிழிக்கப்பட்டது.   அந்தக் கருவிக்கு ஒன்றுமேதப்பவில்லை.   அந்த நாளிலிருந்து  மரணவேதனை அனுபவித்தேன்.   ஆன்மாஎப்போதும் ஆழமாகக் குத்தித் திறக்கப்பட்டிருப்பது போல உணர்வும்அதனால் ஏற்பட்ட தொடர் வேதனையும் இருந்து  கொண்டே இருந்தது’என்று எழுதி இருக்கிறார்.  
செப்டம்பர் 20, 1918 இல் ஐந்து காயங்களும் மறந்து விட்டதாகவும் தந்தை பியோ ஆழ்ந்த அமைதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.  இரக்கத்தின் இராக்கினி ஆலயத்தில் பாடகர் குழுவினர் இருக்கும் பகுதியில் தந்தை பியோ ஆழ்ந்த ஜெபத்தில் இருந்த போது காயப்பட்ட கிறிஸ்துவின்தோற்றத்தில் மீண்டும் தோன்றி ஐந்து காயத்தைக் கொடுத்திருக்கிறார்.   தந்தை பியோவிற்கு முன்பு ஏற்பட்டது போன்ற அனுபவம் மீண்டும் தோன்றியிருக்கிறது.   அந்தக் காட்சி முடிந்தவுடன் கிறிஸ்துவின் ஐந்து, வெளிப்படையான காயங்கள் தந்தை பியோ உடலில் தோன்றின.   இந்தமுறை தோன்றிய காயங்கள் ஐம்பது வருடங்கள் தொடர்ந்து அவரிலேயே நிலைத்திருந்ததன.   லாமிஸ் நாட்டிலுள்ளசான்மார்க்கோ என்ற ஊரிலிருந்து அக்டோபர் 2 அன்று தந்தை பியோ, அவரது சுப்பீரியரும் ஆன்மிக ஆலோசகருமான தந்தை பெனடிற்றோவிற்கு எழுதிய கடிதத்திலேஇவ்வாறு விவரமாக எழுதியுள்ளார்.  

‘சென்ற மாதம் 20ஆம் தேதி காலையில்பாடகர் குழு இருக்கும் இடத்திலே திருப்பலிக்குப் பிறகுஅமர்ந்திருந்தபோது ஆழ்ந்த உறக்கத்தை ஒத்த மயக்கநிலை ஏற்பட்டது.  ஆகஸ்ட் 5ம் தேதி பார்த்ததைப் போன்ற அதிசய மனிதர் ஒருவரைப் பார்த்தேன்.  8 தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.   ( 1 தெச.   5 -19) இந்த முறை பார்த்த நபரில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவரது கைகளிலும் கால்களிலும் விலா பகுதியிலும் இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.  அதிர்ச்சிக்குள்ளான நான்,  அந்த நிமிடத்தில் இருந்த உணர்வு நிலை விவரிக்கஇயலாத நிலைக்கு ஆளானேன்.   விலாவை விட்டு வெடித்து வெளியேறி விடும்போன்ற இதயத்தை ஆண்டவர் இடைப்பட்டுப் பலப்படுத்தியிருக்காவிட்டால்நான் இறந்து போயிருப்பேன் என்று நினைக்கிறேன்.   காட்சி மறைந்தது.   என்கைகளிலும் கால்களிலும் விலாவிலும் இரத்தம் வழிவதை நான் உணர்ந்தேன்.  அன்று அனுபவித்த வேதனையும் இன்னும் அனுதினம் தொடரும் வேதனையையும் கற்பனை செய்து பாருங்கள்.   இதயத்தின் காயத்தில் வியாழன் முதல்சனி வரை தொடர்ந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.  

அன்புத் தந்தையே காயங்களில் வேதனையாலும் ஆன்மாவில் ஆழ்ந்துஉணர்ந்த உணர்வினால் இறந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.   இந்தநிலையை மாற்றும் எனும் வேண்டுதலை ஆண்டவர் கேட்டிருக்காவிட்டால் இரத்தம் சிந்தியே இறந்து போயிருப்பேன்.  

மிகவும் நல்ல இயேசு இந்த அருளினை எனக்குக் கொடுத்திருக்கிறாரா?  வெளி அடையாளங்களைக் கொண்டிருப்பதனால் உண்டான அவமானத்திலிருந்து விடுவிப்பாரா?   எனக்கு ஏற்படும் அவமானத்தையும் தாங்க முடியாத நிந்தையையும் ஏற்படுத்தும் வெளி அடையாளம் நீக்கும் வரையில்குரலை நிறுத்தாமல் இறைவனிடம் இரக்கத்திற்காக மன்றாடுவேன்.  காயத்தையோ வலியையோ அல்லது வெளித் தோற்றத்தையோ மாற்றும்படிவேண்டுவேன்‘என்று எழுதியுள்ளார்.   மேலும், ‘ நான் சிலுவையில் இறப்பதுபோன்று உணரும் அளவு வேதனை அதிகமாக இருந்தது’ என்று மேற்கோள்காட்டியுள்ளார்.  

தந்தை பியோ 1919 தொடக்கத்தில் அமைதியாக வேதனை அனுபவிக்க விரும்பிருந்தாலும் அவருக்கு ஐந்து காயம் இருந்தது எல்லாப் பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.   பல மருந்துவர்களும் மக்கள் பலரும் வந்து தந்தை பியோவின் காயத்தைப் பரிசோதிக்கவும் பார்க்கவும் செய்தனர்.  முதல் உலகப் போருக்குப் பிறகு தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப விரும்பிய மக்களுக்கு ‘நம்பிக்கை அடையாளமாக’ தந்தை பியோ விளங்கினார்.  அப்போது முதல் குணமளிக்கும் வரம்,  ஒரே நேரத்தில் இரண்டு நேரத்தில் தோற்றம் அளித்தல், ஆகாயத்தில் மிதத்தல், இறைவாக்கு வரம், நல்ல செயல் செய்யும் ஆற்றல்,  நீண்ட இடைவெளியில் உணவும் உறக்கமும் இன்றி இருத்தல் மற்றவர் மனத்தில் இருப்பதை அறியும் ஆற்றல் (20 நாட்கள்) , பலமொழி பேசும் வரம், மனமாற்றம் செய்ய வைக்கும் கொடை, காயங்களில் வரும் நறுமணம் போன்ற பல அதிசயங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது அருமையானவர்களே!


கடவுளின் அன்பு பிள்ளைகளே,‘ஆசிர்பெற்ற கன்னி மரியாவை அன்பு செய்யுங்கள்.  மற்றவர்களும் அவளை அன்பு செய்ய உதவுங்கள்.  ’தந்தை புனித பியோ எல்லோரிடமும் சொல்லிய இந்த வார்த்தைகள் அவர் பரலோக அம்மாவிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்திக்கு என்றும்சாட்சியாக விளங்குகிறது.   ஏழை மனிதன் அசிசி புனித பிரான்சிஸ் பெயர் தாங்கி, அவரை போலவே அன்னையின் மேல் கொண்ட பக்திக்கு நிகரான தந்தை பியோ, பியட்ரல்சினாவில் சம்மனசுகளின் ராக்கினி புனித மரியாளின் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றதிலிருந்து எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் பக்தி, அவரது மிக மென்மையான இதயத்தில் பயிராக வளரத்தொடங்கியது.   மேலும் அவர் மரணம் வரை எஞ்சியிருந்த காலமெல்லாம் சான் ஜியோவானிரொத்தோந்தோ தூய அருள் அன்னை ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து, இன்று வரை அவரது அழியாத உடல் அங்கேயே ஓய்வு கொள்ள கடவுள் கருணை புரிந்ததார்.   அவரது வாழ்க்கை மற்றும் அவரது இறைப்பணி அனைத்தும் அன்பு அன்னையின் பண்பான பார்வையின் கீழும் அவளின்ஆற்றல் மிகுந்த பரிந்துரையின் கீழும் இனிதாகவும் நேர்த்தியாகவும்நடந்திருக்கிறது.   உடல் நலமற்றோரின் சுகாதார இல்லமான Casa Sollievo della sofferenza  கூட, அன்னை மரியாவின் வேலையாகவே அவர்கருதினார்.   ஆகவே, அன்பு பிள்ளைகளே நீங்களும் இன்று தந்தை பியோவின் எடுத்துக்காட்டை நினைவில் கொண்டு கடவுளின் அன்னையினுடையதாய்மையின் பாதுகாப்புக்குள் உங்களையே ஒப்படையுங்கள்.   நானும் உங்கள்ஒவ்வொருவரையும் அன்னையின் அரவனைப்புக்குள் ஒப்படைக்கிறேன்.  சிறப்பாக நான் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தையும், பியோ குரல் இதழை நடத்துகிற ஒவ்வொருவரையும், உங்களில் நோய் வாய்ப்பட்டுள்ளஒவ்வொருவரையும், நீங்கள் யாருக்கெல்லாம் ஜெபிக்க கடமைப்பட்டுள்ளீர்களோ அவர்களையும் நம் அன்பு அம்மாவின் ஆற்றல் மிகுந்தபாதுகாப்புக்குள் இன்று ஒப்படைக்கிறேன்.  

அன்பான பிள்ளைகளே,  ஆகஸ்ட் 10,  1910 மிகவும் ஆவலோடுஎதிர்பார்க்கப்பட்ட அந்த நாள் வந்தது அன்று பியோ தனது இருபத்திமூன்றாம் வயதில் பெனெவெண்டோ பேராலயத்தில் பேராயர் பவுலோசின்னோசி அவர்களால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.   நான்கு நாட்களுக்குப் பின்னர், அவர் தனது ஊர் பங்கு ஆலயமான சம்மனசுகளின் எனது அருமையானவர்களே ராக்கினி புனித மரியாளின் தேவாலயத்தில் முதல் திருப்பலியை ஒப்புகொடுத்து இறைவனை மகிமைபடுத்தினார்.   அந்த நாளில் நீங்களும்உங்களையும் உங்களோடு தொடர்புள்ள குருக்களையும் ஒப்பிக்கொடுத்து ஜெபியுங்கள்.  ஜூலை மாதம் 16 ஆம் நாள் புனித கார்மே அன்னை திருநாள்.   ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் புனித கன்னி மரியா ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பெருவிழா.  இந்த நாட்களில் பாவ மன்னிப்பு பெற்று உங்களையும் இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள்.   ஜெபமே நமது வெற்றி.  ஜெபமாலையே நமக்கு வெற்றி மாலை.   எப்போதும் கடவுளின் பின் நிலைத்திருக்க உங்களுக்கு எனதுஆசீர்.  

- அருட்திரு அ.   செல்வராஜ் க.   ச.   ஓமன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்


ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதை கட்டுவோரின்உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள்விழித்திருப்பதும் வீணாகும்.   (திரு.   பா.   127- 1) 
என் பெயர் குமார்.   நான் வெளிநாட்டில் வேலைப் பார்க்கிறேன்.   என்சொந்த ஊர் தஞ்சைக்கு அருகில் வல்லம் என்னும் ஊர்.   நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் பொழுது பல கஷ்டமும், பிரச்சினைகளும் இருந்தது.  லோன் கிடைக்காமல் வீடும் கட்ட முடியாமல் ஒரு வருடமாக இருந்தது.  எங்களுக்கு தெரிந்த அருட்சகோதரியிடம் கஷ்டத்தை எடுத்துக் கூறினேன்.  அவர்கள் மேற்கூறிய (திரு.   பா.   127 - 1)  என்கிற வசனத்தைத் தினமும் சொல்லி ஜெபி என்றார்கள்.   நானும் ஜெபித்தேன்.   பிறகு நான் இருக்கும் நாட்டில் என்அம்மாச்சி உள்ளார்கள்.   அவர்கள் பியோ குரல் இதழைக் கொடுத்துப் படி,விசுவாசத்தோடு ஜெபம் செய், ஜெபமாலை சொல் என்றார்கள்.   அவ்வாறே ஜெபித்து வந்தேன்.   நான் என் அம்மாச்சியிடம் என் பிரச்சினைகளும் வீடும்நல்லபடியாக கட்டி முடித்தால் பியோ குரல் இதழில் சாட்சி எழுதுகிறேன்.  பியோ இல்லம் என்ற பெயரும் வைப்பேன் என்றேன்.   நான் இறை வசனத்திலும்அதிக நம்பிக்கையோடும், ஜெபமாலையும் ஒப்புக் கொடுப்பேன்.   எனக்குலோன் கிடைத்தது.   நல்லபடியாக வீடு கட்டி முடித்தேன்.   பிரச்சினைகளும் நீங்கிற்று.   என் விசுவாச ஜெபம் எனக்கு பலன் அளித்தது.   இயேசுவுக்கே புகழ்!மரியே வாழ்க! புனித தந்தை பியோவுக்கு நன்றி நன்றி.  

இப்படிக்கு,

குமார், சிங்கப்பூர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்


இயேசுவின் திரு இருதயம், புனித பியோ எங்கள் குடும்பத்திற்குச் செய்து வரும் நன்மைகளுக்கு நன்றி கூறுகிறோம்.  

கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.  கடவுளே உமது பெயரைப் போற்றுகிறோம்.   உம் வியத்தகுசெயல்களை எடுத்துரைக்கின்றோம்.   (திரு.   பா.   75- 1) எங்கள் வாழ்வில் கடவுள் செய்த வியத்தகு செயல்களை எழுதுகிறேன்.  

என் கணவர் பீட்டருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது.   அவ்வப்போது சோதனை செய்து மருந்து  சாப்பிட்டு வருகிறார்.   சென்ற ஆண்டு ஒருமுறை மருத்துவரிடம் சென்றபோது பல சோதனைகள் செய்து விட்டு அஞ்சியோகிராம் எடுக்க வேண்டும் என்றார்.   ஹைதராபாத்தில் பணிபுரிவதால் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை சென்றோம்.   மிகவும் பயந்துதான் சென்றோம்.   இருப்பினும் இயேசுவின் திரு இருதயம் புனித பியோ இவர்கள் மீது நம்பிக்கை வைத்து மருத்துவமனையை அடைந்தோம். 
 அஞ்சியோகிராம் முடிந்து, அடைப்புகள் இருப்பதாகவும், எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சைசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்துஅடைப்புகளை நீக்க வேண்டும் என்றும் மருத்துவர்சொல்லிவிட்டார்.   காலம் தாழ்த்தவும் முடியாது.   அதேநேரம் அறுவை சிகிச்சை எப்படி இருக்குமோ என்ற பயம்.  இருப்பினும் இயேசுவின் திரு இருதயத்தின் அருளாலும்புனித பியோவின் புதுமையாலும் என் கணவரின்அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நல்லசுகத்துடன் வெளிவந்தார்.   மூன்று மாதங்கள் ஓய்வெடுத்தபின் தற்போது ஹைதராபாத்தில் தம் பணியைத்தொடர்கிறார்.  

இயேசுவின் திரு இருதயத்துக்கு கோடான கோடிநன்றி ! புனித பியோவுக்கு எங்கள் குடும்பம் முழுதும்நன்றி கூறுகிறது.  நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்புடன்,

கல்பனா பீட்டர், ஹைதராபாத்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


தவமே தவம் ! தவத்தினால்ஒருவர் தனது உடல் உள்ளம் ஆன்மா அனைத்தையும் தூய்மை ஆக்குகிறார். மனித உணர்வுகள் பாவத்திற்கும் அடிமையாகின்ற போது உடல், உள்ளம், ஆன்மா அனைத்துமே கறைபடிந்து சிதைய தொடங்குகிறது. கவனம் இல்லை என்றால் அவை அழிந்தே விடும். இ.ந்த அழிவை மனிதனே தேடிக் கொள்கிறான். ஆகவே பாவத்திற்கு கிடைக்கும் கூலி சாவு. (உரோ - 6 : 23). சாவு ஒரு நிரந்தரமான அழிவு. தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் சக மனிதரிடமிருந்தும் நிரந்தரமான பிரிவு. அந்தோ, பரிதாபம் யாராலும் அவனுக்கு உதவிடவே முடியாது. ஆனால் கடவுள் பல வாய்ப்புகளை வழங்கி திருந்தி வாழ நிலை வாழ்வை உரிமை மாக்கிக் கொள்ள அழைக்கிறார்.

அதற்குத் தகுந்த காலமே தவக்காலம். இதுவே தகுந்த காலம். நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கின்றோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே ‘கடவுளோடு ஒப்புரவாகுங்கள்’ என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். இதுவே மீட்பின் நாள்’ (2 கொரி 5 : 20, 6 : 2) என்று புனித பவுலடியார் அழைக்கிறார். உலகினரின் பாவங்களை பொருட்படுத்தாமல் கடவுள் அவர்களை கிறிஸ்துவின் வழியாக தம்மோடு ஒப்புரவாக்கினார். (2 கொரி 5 : 19) கடவுளோடு ஒப்புரவாக இந்த அருமை யான காலத்தைதத் தவற விடாமல் பயன்படுத்துவதான் விவேகமானது.

இக்காலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? இறைவாக்கினார் யோவே 2 : 12-13ல் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு, என்னிடம் திரும்பி வாருங்கள்.” வெளியில் மற்றவர்கள் பார்க்கும்படி காட்டிக் கொள்ளாமல் உள்ளத்திலே உங்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்படி தவம் செய்யுங்கள். உடைகளை அல்ல உள்ளதைதைக் கிழித்துக் கொண்டு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். 

இக்காலத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கிறிஸ்துவின் உண்மையான சீடராக இருப்பதுதான். ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டு.ம். (மாற்கு 8 34) என்கிறார் இயேசு. பல நேரங்களில் சிலுவைகளைக் கண்டு துன்பங்களைக் கண்டு மிகவும் அஞ்சுகிறோம். புனித பியோ கூறுகிறார், ‘நம்மை அழிக்கும் அளவுக்குத் தொடர்ந்து நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது, மாறாக மறைவாய் இருக்கிற உங்க தந்தைக்கு மட்டுமே தெரியும் (மத். 6-18) பயமுறுத்துகின்ற கொந்தளிக்கும் கடலை கடக்காமல் மீட்பை அடைய முடியாது. கல்வாரிதான் புனிதர்களின் மலை. ஆனால் அங்கிருந்துதான் மற்றொரு மலைக்கு (விண்ணகம்) கடந்து செல்கிறோம்’. அந்த நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். அதுதான் கடவுள் நீதி
வழங்கும் நாள்.

அவர் மீண்டும் கூறுகிறார்: ‘சிலுவையின் அடியில்தான் ஒருவர் அன்பு செய்ய
கற்றுக் கொள்கிறார்’. ‘எனது அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிவது என்னவென்றால் நமது மீட்புக்காக விரும்பி சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு அவரது சிலுவையில் சாய்ந்து கொண்டால் தோல்விகளைத் தவிர்க்கலாம்.’ “ஆண்டவர் நம்மீது சுமைகளைச் சுமத்துகிறார், நம் சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறார். தன்னால் தேர்ந்து கொள்ளப்பட்டவர் மீது அவர் தம் சிலுவையை சுமத்துகின்றபோது அவரது கடினமான சிலுவையும் எளிதாகின்ற வகையில் அவரது ஆன்மாவை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே பியோவின் அன்பு பிள்ளைகளே அம்மாவின் அற்புதமான குழந்தைகளே, இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு நிகழ்வுகளைத் தகுந்த முறையில் கொண்டாட சிறப்பான தவமுயற்சிகளை மேற்கொண்டு அதன் பலனைப் பெறுங்கள். இத் தவக் காலத்தில் நம் அன்னை தம் மகன் சிலுவைப்பாடுகள் குறித்து எவ்வளவு வேதனைக்கு உள்ளாகியிருப்பார் எனத் தியானியுங்கள். இயேசுக்கு எவ்வளவு உதவியாக இருந்தார் என்றால் கல்வாரி சிலுவையடி வரைச் சென்றார். எனவே நீங்களும் சிலவைகளைச் சுமக்கும் வீரர்களாகவும் உயிர்ப்பின் சொந்தங்களாகவும் வாழ எனது வாழ்த்துகளும் ஆசீரும்!

- ஓமனிலிருந்து அருட்தந்தை A. செல்வராஜ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பதையும் – தெய்வீக மணம் பரப்புவதையும் அற்புத கொடையாக பெற்றவர் புனித தந்தை பியோ அவர்களே. அவருக்கு கிடைத்த இந்த கொடை மிக, மிக அரிய கொடையாகும். இவரின் இந்த அற்புத தோற்றத்தை, இரண்டு இடங்களில் தோன்றுவதை பலர் பல இடங்களில் கண்கூடாக கண்டுள்ளனர். அவரின் ஆன்ம வருகையை ரோஜா மலரின் மணத்தால், புகைஇலையின் மணத்தால் உணர்ந்துள்ளனர். இந்த அரிய தெய்வீக மணம் அவரின் காயங்கிளின் வழி வெளியாகும் இரத்தத்தில் இருந்து வருவதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இன்னும் ஓர் முக்கிய செய்தி என்ன வெனில் தந்தை அவர்கள் நறுமண வாசனை திரவியங்களை பயன்படுத்துவதே இல்லை. இந்த தெய்வீக மணமாகப்பட்டது, எப்பொழுது ஒரு விசுவாசி தந்தையை நினைத்து மனமுறுகி அவரிடம் மன்றாடும் நேரத்தில் இந்த அறிய நறுமணம் வெளிப்படுமாம். இந்நிகழ்வு இன்றளவும் நடக்கின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது. பலர் இந்நிகழ்வை பற்றி சாட்சி பகர்ந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று, இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிகழ்ந்ததாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது தென் இத்தாலி, ஜெர்மனி இட்லரின் நாசிபடையின் கையில் அடிமைப்பட்டு இருந்தது. அப்போது நேசப்படைகள், அமெரிக்க ஆகாய குண்டு வீச்சு படையினரிடம் சென் கொவாணி ரொட்டெண்டோ நகரை தாக்கும் பொருப்பினை ஒப்டைத்திருந்தார்கள். அமெரிக்க விமான படையினர் ரொட்டெண்டோ நகரின் மேல் விண்வெளியில் தோன்றி குண்டுகளைப் பொழிய இருந்த நேரத்தில், ஆகாயத்தில் அமெரிக்க விமானத்தின் முன் சாக்கலேட் நிற அங்கி அணிந்த துறவி ஒருவர் தோன்றினார். அவரின் தோற்றத்தினால் குண்டுகள் பொழியும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதன் வழி தந்தை பியோ யுத்தத்துக்கு முன் ரொட்டெண்டோ குடிமக்களுக்குச் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறியது. யுத்தத்தின் போது ரொட்டெண்டோ நகரம் யுத்தத்தின் அழிவிலிருந்து காக்கப்படும் என்பதாகும். 

சில காலங்களுக்கு பின் ரொட்டெண்டோவுக்கு பக்கத்தில் சில மைல்களுக்கு அப்பால் ஃபோகியா என்ற இடத்தில் அமெரிக்க படையின் விமானத்தளம் ஒன்று நிறுவப்பட்டது. அதில் பணிபுரிந்த விமானி ஒருவர் ரொட்டெண்டோவில் துறவிகள் இருந்த மடத்திற்கு வந்திருந்தார். அங்கே அவர் கண்ட ஆச்சரியம்! யுத்தத்தின் போது ரொட்டெண்டோவில் இருந்த நாசிப் படைகளை அழித்தொழிக்க விண்ணில் குண்டுகள் தாங்கிய விமானத்தில் வந்த போது விண்ணில் கண்ட அந்த துறவியைக் அங்கே கண்டார். அவர்தான் தந்தை பியோ என அறிந்து அவரிடம் விளக்கம் கேட்டார். அப்போது தந்தை அவர்கள் சொன்ன பதில் இறைவனின் துணையுடன் தான் இவ்வகையான அறியச் செயலை செய்ய முடிந்தது என்றார். இறைவன் அளித்துள்ள அநேக கொடைகளில் ஒன்று, இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றும் காட்சி. இரண்டு இடங்களில் தோன்றும் இந்த முறையை யாரும் தவறாக புரிந்துக் கொண்டு நீக்கமற எவ்விடத்திலும் இருக்கிறவர் என்று நினைக்கக்கூடாது. நீக்கமற எவ்விடத்திலும் இருப்பவர் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கு மாத்திரமே உரியது.
-Anthony,Singapore.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருத்தந்தையின் தவக்கால செய்தி


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவருக்குப் ”பாதுகாவலர்களாக” இருக்குமாறு 07-2-2012 அன்று அழைப்பு விடுத்தார். இம்மாதம் 22ம் தேதி திருநீற்றுப் புதனுக்காக ஆரம்பிக்கும் தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் அன்புக்கும் விசுவாச வாழ்வுக்கும் நற்சான்றுகளாய் இருப்பதற்குச் சவால் விடுக்கப்படும் இவ்வுலகில், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரே உடலின் உறுப்பினர்கள் என்ற உணர்வில், பிறரன்பு, சேவை, நற்பணி ஆகியவற்றில் ஒருவர் ஒருவருக்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

சகோதரத்துவம் சமூகத்தன்மை கொண்டது என்பதால், இது, பிறரின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், சகோதரத்துவத் திருத்தத்திற்கு இட்டுச் செல்லும் ஆன்மீக வாழ்க்கை மீது கருத்தாய் இருப்பதிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலுள்ள, “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக(எபி.10,24)” என்ற பகுதியைத் தலைப்பாக வைத்து தவக்காலச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, தனியாள் மற்றும் சமூகத்தின் விசுவாசப் பயணத்தில் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

பிறர்மீது கருத்தாய் இருப்பதென்பது, பிறரின் உடல், நன்னெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நன்மையான அனைத்தையும் செய்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இக்காலத்திய கலாச்சாரம், நன்மை, தீமை இவை பற்றிய உணர்வை இழந்து விட்டது போல் தெரிகிறது, எனினும், நன்மை உலகில் இருக்கிறது, அது தீமையை மேற்கொண்டுவிடும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிறரிடம் பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது, பிறரின் நன்மையை விரும்பி, அதற்காக உழைப்பது என்ற திருத்தந்தை, தீமையின் முன்னர் நாம் மௌனம் காக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். கிறிஸ்தவ சகோதரத்துவத் திருத்தம், எப்பொழுதும் அன்பையும் இரக்கத்தையும் கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறியுள்ள திருத்தந்தை, சகோதரத்துவத் திருத்தம் நாம் அனைவரும் சேர்ந்து தூய்மையான வாழ்வு நோக்கிப் பயணம் செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கன்னியின் காட்சிகள்


கி.பி. 1061 செப்டம்பர் 24: இங்கிலாந்து நாட்டின் வால்ஷின்காம் நகரில் வாழ்ந்த ரிசல்ட்டின் தே பவர் செஸ் என்ற பெண்மணிக்கு கி.பி. 1061ஆம் ஆண்டு அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை அவரிடம், ”நாசரேத் இல்லம் கி.பி. 

1531 டிசம்பர் 9-12: மெக்சிக்கோ நாட்டின் குவாடலூப் நகரில் வாழ்ந்த யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு கி.பி. 1531ஆம் ஆண்டு அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை, ”வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்” என்று மொழிந்தார்.

அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக யுவான் போன்று, இங்கு எனக்கு ஓர் இல்லம் எழுப்பப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அன்னை மரியாவின் வேண்டுகோளை ஏற்று அப்பெண்மணி அன்னைக்கு அந்த இடத்தில் நாசரேத் இல்லத்தைப் போன்று ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. தொடரும் .. .. ..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோவின் வாழ்க்கை முறை


மக்கள் புனிதர் இவர்:  புனித தந்தை பியோ ஓர் ஏழைப் பெற்றோருக்கு எட்டாவது தவப் புதல்வராகப். பிறந்த இவர், எட்டாவது நாளிலே தன் பணி வாழ்வின் வாழ்க்கை முறை என்ன வென்று காட்டியுள்ளார். பரிந்துரை செய்வதே தனது பணி, அதுவும் ஆன்ம மீட்பிற்கான பணி ஆர்வமே அவரது வாழ்வை உந்தித்தள்ளியது. எண்பத்தோறு ஆண்டுகள் இதே பணியைச் செய்து வாழ்வை நிறைவு செய்தாலும் அவர் இறப்பிற்குப் பிறது செய்யப் போவதாகச் சொல்லிச் பணிவாழ்வை முழுமையாக நிறைவு செய்துவிட்டுப் போனதன் அளவுகோல் என்னவென்று கொள்ளலாம்? போக்குவரத்து வசதியே இல்லாத நிலையிலும் செப்டம்பர் 23, 1968 ஆம் ஆண்டிலே ஓர் இலட்சத்திற்கும் மேல் அவரது இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தனர்.. இவரின் மகிமையின் விழாக்களான முத்திப்பேறு பட்டம், புனிதர் பட்டம் அளிக்கும் விழாக்களில் உரோமை நகரிலுள்ள புனித பேதுரு பேராலயதில் மட்டுமல்ல அகில உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தது. மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தப் பெரும் விழாக்களில் கலந்து கொண்டார்கள் என்றால் என்ன மக்கள் இவர் மேல் வைத்துள்ள பற்று, பாசம், அன்பு. இவரது பரிந்துரையில் உள்ள மேலான நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு செய்து வாழ்ந்த வாழ்க்கை முறை தான் என்னவென்று தியானிப்போம்.

விகாரமான தோற்றத்துடனும் தன்னால் ஒன்றுமே செய்ய இயலாமல் இருந்த பத்து வயது சிறுவனின் தாய் ஆலயத்தில் கீழ் நின்று கண்ணீர் விட்டு சென்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “After my death of will do more my real mission will begin after my death“  ‘நான் இறந்த பிறகு இன்னும் அதிகம் செய்வேன். என் உண்மையான பணி என் இறப்பிற்குப் பிறகே தொடங்கும்’ என்று அவரே கூறி இருக்கிறார்.”

அவரது பணி வாழ்வின் தனிச்சிறப்பைப் பறைசாற்றுகிறது இந்த வாக்கியம். அவரது மிகச்சிறந்த அறிவுரை ‘இறைவேண்டல் செய், நம்பு, கவலைப்படாதே! ‘இந்தத் தாரக மந்திரமே அவர் அனுபவித்து வாழ்ந்த வாழ்வின் சாராம்சம் எனலாம். “Pray, Hope and Don’t Worry”‘வேண்டு, நம்பு , கவலைக் கொள்ளாதே’ ஆம் இறைவேண்டல் செய்து நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டால் கவலைக்கே இடமிருக்கக்கூடாது. கவலை இருக்குமானால் நம்பிக்கை இல்லை என்றே சொல்ல வேண்டும். நம்பிக்கை என்றாலே ஒளிதான். ஒளியேற்றிய பின் கவலையாகிய இருளுக்கு இடமிருக்க முடியாது தானே !  அழுவதைக் கண்டு அந்தத் திருத்தலப் புனிதரிடம் சிறுவன் பிரான்சிஸ்கோ (புனித பியோ) கெஞ்சி மன்றாடினார். என்ன ஆச்சிரியம் பத்து ஆண்டுகள் ஒன்றுமே செய்ய இயலாமல் தாவர வாழ்வு வாழ்ந்து வந்த சிறுவன் பூரண குணமடைந்து தம் தாயுடன் வீடு சென்றான். அன்றே தொடங்கியது இந்தப் பரிந்துரை பிறரன்புச் செயல். 

இந்ததச் சிறப்பு வாய்ந்த பரிந்துரையாளர் தன் வாழ்வு முழுவதுமே பல விதமான தொல்லைகள் நோய் முதலியவற்றால் வாடி வதைக்கப் பட்டாலும் அவரது பெற்றோர் உடன் பிறந்தோரின் பரிந்துரையால் பதினைந்தாம் ஆண்டு கிராமப் பள்ளி படிப்பை முடித்து கப்புச்சின் குரு மடத்தில் சேர்ந்தார். ஆண்டவரின் அருள் துணையை மண்டியிட்டு வேண்டி மன்றாடியே தனது குருத்துவக் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி குருவாக திரு நிலைப்படுத்திய அன்றே தன்னையே முழுமையாகக் கையளித்து விட்டார்..

உம்மை பலியாய் எனக்குத் தந்தாய் என்னை முழுவதும் உமக்கே தந்தேன் என்னும் பாணியில் அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார். அவர் பணி வாழ்வின் ஆயுதங்கள் திருப்பலி ஜெபமாலை, ஒப்புரவு, அருட்சாதனம்.  இயேசுவின் சிலவைப்பாடுகளை எப்போதும் தியானிப்பார்.

கடவுளின் அன்பைத் துன்பத்திலிருந்து பிரிக்க முடியாது என்றும் கடவுளுக்காக எல்லா துன்பங்களையும் அனுவிப்பதே ஆன்மா கடவுளை அடையும் வழி என்றும் புனித தந்தை பியோ நம்பினார். அவரது ஆன்மா துன்பத்தை அனுபவிக்கும் போது ஆழமான நரகக் குழியில் இருப்பது போல முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தது போல கொடிய வேதனை அடைந்திருக்கிறார். இத்தகைய துயர நேரத்தில் உடலிலும் ஆன்மாவிலும் சாத்தான் அவரைத் தாக்கியதாக அவரைப் பின்பற்றியவர்கள் நம்பினர். ஒளியின் தூதனாக நடித்து அவரைத் துன்பப்படுத்தினான். அவர் எழுதிய கடிதங்களை மாற்றி எழுதச் செய்து அல்லது அவற்றைச் சேதப்படுத்தி துன்பங்கள் பல கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

இயேசுவுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வந்த வாழ்வு, அவரது பாடுகளைத் தியானித்து வந்ததால் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சிலுவையில் மூன்று ஆணிகளில் தொங்கியதாலும் விலாகுத்தி திறக்கப்பட்டதாலும் உண்டான ஐந்து காயங்களையும் தன் உடலில் சுமக்கும் முதல் அருட்பணியாளர் ஆகிறார். இந்த ஐந்து திருக்காயங்களையும் ஐம்பது ஆண்டுகள் தமது உடலிலும் உள்ளத்திலும் சுமந்து மக்களின் சுமையை  விரும்பி சுமக்கும் சுமைதாங்கி ஆனார். தினமும் 15 மணி அல்லது 16 மணி நேரம் மக்களின் பாவங்களை மன்னித்து இறை தந்தையோடு ஒப்புரவு செய்து கொண்டே வந்தார். உயிரளிக்கும் நற்கருணை நாதரைப் பலியிடும் பொருளாகவே மாற்றி அல்லது இயேசுவோடு ஒன்றித்து மணிக்கணக்காக இறைவேண்டலில் நிலைத்திருந்தார். இயேசுவின் பாடுகளைத் தன் உடலில் தாங்கிய அருட்பணியாளர் திருப்பலி நிறைவேற்றுவதில் பங்குபெற அதி காலை 2 மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டாந்தரையில் காத்துக் கொண்டே இருப்பார்கள். பிறகு திருப்பலியில் பங்கேற்று அவரின் உருக்கமான பக்தி பரவசம் ஊட்டும் திருப்பலியின் அருளைப் பெற்றுச் செல்வர். ‘மக்களுக்காக செபிக்கும் ஒரு ஏழ்மை கப்புச்சின் குரு’ வின் புகழ் எங்கும் பரவி வரத் தொடங்கியது. புகழ் மணம் வீச வீச பொறாமையும் காய்மாகரமும் வளர்ந்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடத்திற்கு, உரோமை மாநகருக்குச் செய்தி எட்டியது. 

இந்தக் கப்புச்சின் குருவை சோதிக்கவும் ஒரு முன்னெச்சரிக்கையாகவும் மக்கள் முன் திருப்பலி நிறைவேற்றவோ, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கவோ கூடாது. அடைப்பட்ட வாழ்வுதான் வாழ வேண்டும் என்று ஆணை கொடுக்கப்பட்டது. கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டை மனமுவந்து ஏற்றுக் கொண்ட நம் தந்தை பியோ. திருத்தந்தையின் கட்டளையை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஆசிரமத்திற்குள்ளே அடைப்பட்ட வாழ்வு வாழ்ந்தார். இந்த நேரத்தில் தன் நேரத்தை எல்லாம் இறைவேண்டலிலும், .திரு.விலியம் மற்றும் ஞான நூல்கள் வாசிப்பதிலும் குறிப்பெடுப்பதிலும் செலவு செய்தார். ஆசிரமத்தில் சிறுசிறு பணிகளைச் செய்வதிலும் தம் நேரத்தைப் பயன்படுத்தினார். இந்தக் கீழ்ப்படிதல்தான் இவரை வெற்றிக்குக் கொண்டு செல்லும் ஏணிப்படியாக மாற்றியது. இதனால்தான் ‘மக்கள் புனிதர்’ என்று எந்த மனிதருக்கும் கிடைக்காத புதிய பட்டம் பெற்றுத் தொடர்ந்து தம் பரிந்துரைப் பணியைச் செய்து கொண்டே வருகின்றார். மக்கள் இவர்மேல் வைத்து உள்ள பற்றுப்பாசம் அன்பு இவரின் பரிந்துரையில் உள்ள நம்பிக்கையை என்னவென்று சொல்வது? இத்தகைய பற்றும் பாசமும் அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. அதற்குக் காரணம் விண்ணக வாழ்விற்குக் கடந்து சென்ற பின்னும் அவரது ஆத்ம தாகம் அதிமாகி ஆன்மா மீட்கப்படுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

துன்பத்தை ஏற்கும் துணிவு: தந்தை பியோ இளமையில் இருந்த பலவீனமான தோற்றம் மாறிவிட்டது. சிலுவையின் சின்னம் அவரில் நிலைத்துவிட்ட நிலையில், சாத்தானின் சோதனைகளைத் துணிவோடு ஏற்க துணிந்துவிட்டார். ஒரு தடவை, ‘இப்பொழுது இயேசு சாத்ததகளின் கோபத்தினை என்மீது காட்ட  அனுமதித்ததிலிருந்து இருபத்தி இரண்டு நாட்கள் கடந்துபோய் விட்டது. என் தந்தையே, என் உடல் முழுவதும் நம்முடைய எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட அடிகளால் சிதைந்து காயப்பட்டிருக்கிறது. பலமுறைகள், அவைகள் என் சட்டையைக் கிழி.த்திருக்கின்றன. அப்போதுதானே என் வெளியே தெரியும் சதையின் மீது அடிக்கொடுக்க முடியும்’ என்று ஒரு அருட்தந்தையிடம் சொல்லியிருக்கிறார். 
வத்திக்கான் நகரத்தில் பேயோட்டக் கூடிய அனுபவம் உள்ள அருட்தந்தை கபிரியேல் அமோர்த் என்பவர் .புனித தந்தை பியோவிடம் நடந்த இன்டர்வியூவின்போது அறிந்த உண்மையை இவ்வாறு எடுத்துரைக்கிறார்.

உருவத் தோற்றங்கள் வெளிப்படும்போது, இயேசுவைப் போல, மரியா மற்றும் புனிதர்களைப் போலத் தோன்றி அலகை ஏமாற்றும் போது கூட அவை உண்மையான தோற்றங்களா அல்லது சாத்தான் உருவாக்கிய ஏமாற்றுத் தோற்றங்களா என்று பொறுமையாக காத்திருந்து அப்போது இருக்கும் மனநிலைகளை ஆராய்ந்து கவனமாய் அறிந்து கொள்வதன் மூலமும், அந்த உருவத்தோற்றங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஒரு கடிதத்தில், ‘சோதனை வேளையில் இயேசு மரியா என்று காவல் தூதர், புனித யோசேப்பு மற்றும் புனித பிரான்சிஸ் எப்போதும் அவரோடு இருந்ததாலும், எப்போதும் உதவி செய்ததாலும் அவரால் சோதனையின் நடுவிலும் அவர் பொறுமையோடிருக்க முடிந்தது என்று எழுதியிருந்தார்.

எந்தச் சோதனையையும் இறைவன் அனுமதிக்காமல் நம்மிடம் வந்து சேர்வதே இல்லை. நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை, சிறு காலம்தான் நீடிக்கும் (2 கோரி 4 – 17) என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். துன்பங்கள் ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கும் என உறுதியாய் அறிந்திருந்தார். காண்பவற்றை அல்ல காணாதவற்றையே எதிர்நோக்கி வந்தால் துன்பத்தில் இறுதிவரை துணிவோடிருந்தார், ஆம் காண்பவை நிலையற்றவை காணாதவை என்றென்றும் நிலைதிருப்பவை. துன்பங்கள் கடந்துபோகும் என்ற உறுதியிருந்தால் அதைத் தாங்கும் உறுதியும் மனத்துணிவும் இறுதிவரை புனித தந்தை பியோவிடம் இருந்தது. 
தொடரும் .. .. ..

போராசிரியை இம்மாகுலேட் பிலிப்
கணிதவியல் திருச்சிலுவை கல்லூரி, நாகர்கோவில்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pio Kural March - April 2012



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்

1960ல் எனது திருமணத்திற்குப் பின் இலங்கை வாழ் எனது சித்தி லூர்து செபமாலை முறாயிஸ் அவர்கள் வழியாக பியோ சுவாமி அவர்களின் வரலாறு அறிய வந்தேன். எனக்குத் தலைகுழந்தை பிறந்து இறந்த சோகமான நேரம் அது. 5 காயங்கள் பெற்றவர்கள், அவர் நம் மன்றாட்டை இறைவனிடம் கேட்டுப் பெற்றுத் தருவார், என்ற அசையாத நம்பிக்கையை என் உள்ளத்தில் பதிய வைத்தவர்கள் என் சித்தி, அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடையட்டும்.

1962ல் என் மாமா திடீரென்று இறந்த பின்பு சுவாமியவர்களுக்கு அவருடைய ஆன்மா சாந்தியடைய பலிபூசை ஒப்புக் கொடுக்குமாறு மடல் ஒன்று எழுதியிருந்தேன். வெகுநாட்களாக பதில் எதுவும் கிட்டவில்லை. ஒரு மாதம் சென்று ஒரு கனவு வந்தது. அதாவது கருப்பு ஆயத்தம் அணிந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கிறமாதிரி பியோ சுவாமியவர்களைப் பீடத்தில் கண்டேன். ஒருவாரம் சென்று சுவாமியவர்கள் நீங்கள் விரும்பியபடி மாமாவுக்காக திருப்பலி ஒப்புக் கொடுத்தார்கள் என்று அவரது கையொப்பத்துடன் அவரது உதவியாளர் எனக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தார். எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என மன்றாடினேன்.

1967ல் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்குப் பியோ என்னும் பெயரையே சூட்டினேன். குருவானவர் ஆக வேண்டும் எனவும் மன்றாடினேன்.

ஆனால் அவர் திருமணம் செய்து கொண்டான், பியோவின் ஆசியில் பிள்ளைகளும் பெற்றுக் கொண்டான். பின்னர் அசிசிரியர் சபையில் சேர்ந்து ஆபிஸ் வேலை நேரம் போக மற்ற நாட்களில் செபத்திலும், தவத்திலும் இயேசுவை அறியாத மக்களை அணுகி அவர்களை இறைவனுக்குள் கொண்டு வருவதிலும், இயேசுவில் மிகுந்த ஈடுபாடும் கொண்டு இப்போது வாழ்ந்து வாழ்கின்றான். எல்லா மகிமையும் புகழும் இறைவனுக்கே!

-பிரான்சிஸ்கா ராயன்,SFO, Chennai.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்

அன்பும் பாசமும் நிறைந்த அன்பு இறை யேசுவே,

உமக்காக வாழ்ந்து உமக்காகவே உயிர்விட்ட புனிர்தர்களை அதிகமாக நேசிக்கின்றீர். எங்கள் குடும்பத்திற்குப் புனித பியோ செய்த புதுமைகளை இங்கு நன்றியுடன் வரைகின்றேன்.

எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் முதல் குழந்தை லீனாபெர்பின், 2வது குழந்தை நிஷாபிரபா, 3வது குழந்தை அபிஷாபெர்பினா. முதல் மகள் லீனாவுக்கு 7.1.1999 இல் திருமணம் நடந்தது. 3.11.2000இல் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது மகள் நிஷாபிரபாவிற்கு 21.7.2004இல் திருமணம் நடந்தது. 5வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. மனவேதனையும் கவலையும் எல்லோருக்கும் இருந்தது. புதுமைகள் நடந்து கொண்டு இருக்கும் தேவாலயங்களிலும் நேர்ச்சைகள் நேர்ந்து கொண்டோம். மகள் நிஷா. கணவர் எட்வர்ட்கிபி இருவரும் 25.1.2009இல் வேளாங்கண்ணி தேவாலயத்திற்குச் சென்று இருந்தார்கள். அன்னை வேளை நகரில் தான் புதுமை நடந்தது. தீடீர் என மகள் நிஷா வின் உடல நிலை சரி இல்லாமல் போனது. மருமகன் கிபி ஆலய வளாகத்திலே கன்னியர்களால் நடத்தப்படும்

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடலை பரிசோதனை செய்தசிஸ்டர் எலுஷா காயச்ச்லுககுரிய மருந்தைக் கொடுத்தார்கள். 5ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத விஷயத்தை சிஸ்டர் இடம் சொன்னார்கள். உடனே தந்தை பியோவின் அற்புதங்களை எடுத்துச் சொன்னது

மட்டுமல்லாமல் ஐந்து திருக்காயங்களைக் கொண்ட போட்டோ அவர் ஜெபங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டு தினம் தினம் ஜெபத்தைப் பக்தியுடன் செய்யவும் அடுத்த ஆண்டு வேளை நகருக்கு வரும்போது குழந்தையுடன் ஆலயத்திற்கு வருவீர்கள் என்று நம்பிக்கையுடன் மகளிடம்
கூறினார்கள். அத்துடன் மார்ச் மாதம் நல்ல செய்தி எனக்குத் தெரிவிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லி அனுப்பினார்கள். இறை யேசுவின் அருளாலும் மாதா பரிந்துரையாலும் புனித பியோவின் ஆசிராலும் பிப்ரவரி மாதமே சிஷ்டர் எலுசா அன்னைக்கு சந்தோஷ செய்தி தெரிவித்தோம். 4.11.2009இல் பியோ தந்தையின் முகசாயலில் அழகான ஆண் குழந்தையைக் கடவுள் கொடுத்தார்.

எங்கள் குடும்பம் அனைத்தும் இறையேசுவிற்கும் அன்னை மரியாளுக்கும் தந்தை பியோவிற்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

C. சூசைநாயகம் டென்சலின்
குளச்சல். கன்னியாகுமரி மாவட்டம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS