வத்திக்கான் செய்திகள்

சுவராக இல்லாமல், அன்பின் சமூகமாக மாறுவோம்.

குழந்தைகளை இயேசு வரவேற்று ஏற்றுக்கொண்டது போல அன்புடன் பெற்றோரும்  ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
பசியால் வாடுகின்ற கைவிடப்பட்ட, சுரண்டலுக்கு ஈடுபடுத்தப்படுகின்ற அன்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் இந்தச் சமூகம் வரவேற்க வேண்டும்.
ஏழ்மையாலும் மோதல்களாலும் துன்புறும் குழந்தைகளைக் காண்பது மிகப்பொரும் வேதனையைத் தருகின்றது என்ற திருத்தந்தை தம் கதவுகளைத் தட்டும் இந்தக் குழந்தைகளுக்கு சுவராக இல்லாமல் அன்பின் சமூகமாக மாறு வோம் என்றார்.

குடும்பங்களுக்கு திருஅவையின் முழு ஆதரவு

குடும்பம் குறித்த ஆயர் மாமன்றம் இடம் பெற்றுவரும் இவ்வேளை பொது நலனுக்கு உதவுன்ற கண்ணோட்டத்தில் குடும்பத்திற்கும் திருஅவைக்கும் இடயே நிலவும் ஆழமான உறவின் சில கூறுகள் குறித்து நோக்குவோம். இறைவனின் பாதையில் குடும்பங்கள் பயணம் செய்யும்போது இறைஅன்பின் அடிப்படை சாட்சிகளாக அவை விளங்குகின்றன. குடும்பங்களுக்கு திருஅவையின் ஆதரவும் முழு அர்ப்பணமும் அத்தியாவசியமாக வழங்கப்பட வேண்டும். துன்ப வேளைகளில் கூட ஒருவன் ஒருவருக்கிடையேற்று மாறா உறுதிப்பாடு நேர்மை, நம்பிக்கை, ஒத்துழைப்பு, மற்றும் மதிப்பு ஆகிய பண்புகளில்  குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். சமூகத்தில் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்படுவது தும்பங்களில்தான். இருப்பினும் இன்றைய  அரசியல் மற்றம் பொருளாதார வாழ்வில்லா நேரங்களிலும் குடும்பங்களுக்கு  ஆதரவை வழங்குவதில்லை. அது மட்டுமல்ல குடும்ப மதிப்பீடுளை சமுக வாழ்வில் உள்புகுத்தி ஒன்றிணைக்கும் பலத்தையும் இழந்துவிட்டது. 
இங்கு திருஅவையும் இறைவனின் குடும்பமாக எவ்வளவு தூரம் வார்ந்து வருகின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அழைப்புப் பெற்றுள்ளது. தூய பேதுருவைப்போல் திருஅவையும் மனிதகளைப் பிடிக்கம் மீன்வராக மாற அழைப்பு பெற்றுள்ளது. இதற்கு ஒரு புது வகையான வலையும் தேவைப்படுகின்ற குடும்பங்களே நமக்கு விடுதலை வழங்குகின்றன. அதன் வழியாகவே இறை வனின் குழந்தைகளாக இருப்பதில் கிட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றnhம். பிடிக்கப்போகும் மீன்களின் அளவு மிகப்பெரிதாக இருகிட்டும் என்ற நம்பிக்கை மிக ஆழமாகப் பயணம் செய்யட்டும்.  தூய ஆவியாரால் தூண்டப்படும் ஆய மாமன்ற தந்தையர்களும் இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாசத்திலும் உறுதிப்பாட்டிலும்  திருஅவை தன் வலையை ஊக்கமளிப்பார்களாக.

உலகின் இருளின் மத்தியில் குடும்பம் எப்போதும் ஒளியாக உள்ளது.

இருளில் சிறிய மெழுகுதிரியை ஏற்றுவது எத்துணை நல்லது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருளை விரட்டுவதற்க இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றதா? இருளைப் போக்கமுடியுமா? என்ற கேள்விகளுடன் தன் மறையுரையைத் தொடங்கினார்.
வத்திக்கானில், 14வது ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, புனித பேதுரு பசிலிக்காய் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவன் நம் வாழ்வுக்காக வைத்துள்ள திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு அதை ஏற்பதற்குக் கற்றுக் கொள்ளும் இடம் குடும்பம் என்று கூறியத் திருத்தந்தை, நன்றியுணர்வு, உடன்பிறப்பு உணர்வின் பிரசன்னம் மற்றும் தோழமையின் இடம் குடும்பம் என்பதையும், பிறரை ஏற்கவும், மன்னிக்கவும், மன்னிப்புப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்பதையும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடும்பமும், அது எந்நிலையில் இருந்தாலும், இவ்வுலக இருளின் மத்தியில் எப்போதும் ஒளியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதை ஏற்று, குடும்பத்தில் உள்ள அழகு, நன்மை, புனிதம் ஆகியவற்றை மாமன்றத் தந்தையர் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரக்கத்தின் ஆண்டு

வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை விழாவன்று தொடங்கி 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடையும் இரக்கத்தின் புனித ஆண்டு, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அருளை வழங்கும் உண்மையான காலமாக அமையும் மற்றும் புதிய வழியில் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதற்கும், மேய்ப்புப் பணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கும் தூண்டுலாக இருக்கும் என்று கூறினார் பேராயர் Salvatore Fisichella இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Fisichella அவர்கள். திருஅவை இரக்கத்தையும், கருணையையும் வழங்குவதற்கு, தணியாத ஆர்வத்தில வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகு குறிப்பு (முகம் ஒளி பெற)


போனேன், போகிறேன், போவேன் என்று முக்காலத்தையும் உணர்த்தினார் ஒரு மங்கை. எங்கே? என்றேன். Beauty parlour என்றார்.
ஏன் என்றேன்.
முகத்தில் வயதை மறைக்க என்றார்.
நானும் தேடினேன் முகத்தை விவிலியத்தில்

நானோ நேர்மையில் நிலைத்து
உமது முகம் காண்பேன்
விழித்தெழும்போது  உமது முகம் கண்டு
நிறைவு பெறுவேன்

ஆண்டவர் எளியோர்க்குத் தன் முகத்தை
மறைக்கவுமில்லை
வறியோருக்குத் தம் முகத்தை
திருப்பவுமில்லை.

ஆண்டவரின் முகம் தீமை செய்வோருக்கு
எதிராக இருக்கிறது.
ஆண்டவரின் முகம் பாவிகளை நோக்கி
இரக்கப் பார்வை பார்க்கிறது.

ஆண்டவரின் வார்த்ததையைக் கேட்டு அதன்படி நடக்காதவர்கள்
கண்ணாடியில் தம் முகம் பார்த்து பின்பு தான் எவ்வாறு இருந்தார்
என்பதை மறந்து விடும் ஒரு சாதாரண மனிதருக்கு ஒப்பாவார்.
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசச் செய்யும்.

இந்த முகம் இறைவனுக்குச் சொந்தம்
என்பதைக் கண்டு கொள்ளச் செய்யும்.
தந்தை பியோவும் இதை உணர்ந்து வாழ்ந்ததால்தான்

இறந்தபின்னும் அவர் முகத்தில் ஒளி.
அவர் முகம் அழியவில்லை.

ஆகவே பியோவின் வழியில் வாழ்ந்து
நமது முகத்தை  ஒளியாக்கவோம்.

எப்படி?
முகத்துக்கு  Beauty Tips  கொடுத்தேனா?

ன்னை மரியா..
சையுடன் பெற்ற மகன்
றப்பின் தருவாயில்...
ட்டியால் துளைக்கப்பட
றைந்து நிற்கின்றாள்
ரார் முகம் எங்கே?
ங்கே போயினரோ?
க்கத்துடனே அவள்
யோ மகனே என்கிறாள்
ன்று சொல்கிறோம்
டுகிறோம் உம் முகம் நோக்கி
தந்தை பியோ வழியாக....

அக்ஸிலியா ஜோசப் லியோன், தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஜெபமாலையின் மேன்மை

ஜெபமாலை என்பது நம் ஆன்மா சுத்திகரிக்கும் ஓர் ‘‘அன்பின் கருவி’’ அன்னை மரியாள் ஓர் அன்பின் பிறப்பிடம். எனவேதான்  இறைவன் தன் மகனை பெற்றெடுக்கும் ‘‘ஓர் பெட்டகமாக’’ அன்னையை உருவாக்குகிறார். அன்னை மரியாள் எளிமையாக தன் வாழ்வை உருவாக்கி இறைவனாக தன்னில் உருவெடுக்க தன் உதிரத்தை தூய்மையாக்கியவள் என்பதை உணர்த்துகிறது. ஜெபமாலையில் அன்னை மரியாளுக்கு கபிரியேல் வானதூதர் ‘‘மகிழ்ச்சியான ஓர் செய்தியை’’ சொல்கிறார். அன்னை மரியாள் எலிசபெத் அம்மாவை சந்தித்து ‘மகிழ்ச்சியை பகிர்ந்து’’ கொள்கிறார். இறை மகனின் பிறப்பு இடையர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியில்  அறிவிக்கப்படுகிறது. இறை மகன்  இயேசு தன் 12 வது வயதினில் தன் தந்தையின் விருப்பம் என்ன? என்பதை அறிந்தவராய் சட்ட வல்லுநர்கள். பரிசேயர் சதுசேயர் அறிஞர்கள், மூப்பர்கள் மத்தியில் ‘‘இறைவார்த்தை மகிழ்ச்சியோடு விளக்கிக் கூறுகிறார். காணமாமல் போன தன் மகனை அலைந்து திரிந்து சோர்ந்து தேடிய தாய் தன் மகனை ஆலயத்தில் கண்டு அவர் விளக்கிக் கூறிக்கொண்டிருப்பதை உணர்ந்தவராய் பெருமகிழ்ச்சி அடைகிறார், இவ்வாறு ஜெபமாலை என்பதை நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லும்போது எல்லையில்லா ஆனந்தத்தை பெறுகிறோம்.
நாமும் நம்மை காக்கின்ற தெய்வம் எளிமையும் தூய்மையுமானவர் என்பதை அன்னை மரியாவைக் கண்டு அறிந்து தெளிந்த சிந்தனை கொள்வோம்.
உச்சியிலே நீ இருந்த -தாய்
உதிரத்தை பாலாக்கி
பக்தியிலே எமை வளர்த்து
சக்தியாய் நிற்பவளே
முக்தியை அடைந்திட முனைவோர்க்கு
முழுவதும் தன்னை தருபவளே  அன்னையே
இவ்வையத்தில் என்னை ஜனனம் பெற செய்தவளே
இச்சாம்ராஜ்யத்தில் நான் என் வழிதொடர
‘ஜெபமாலை என்னும் அருட்கருவியை’
தந்தவளே உம்மை போற்றுகிறேன். 
கிறிஸ்து பிறப்பு உலக மாந்தர்க்கே சிறப்பு’’ 
கிறிஸ்து உணர்த்தும் உன்னத கருவியை ‘தந்தவளே’
தாயே உம்மை போற்றுகிறேன்
ஜெபமாலை செய்வோம்
செம்மையான வாழ்வு வாழ்ந்து
இவ்வையத்தை  வெல்வோம்.
ஜெபமாலையை அருட்கருவியாய் கொண்டு
அவனியில் அமைதியை வளர்ப்போம்.

 S.கரோலின்மேரி  FIHM
திருக்கானூர்பட்டி
தஞ்சாவூர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்னையின் சங்கமம்


ஆதவனின் பொன் கீற்றுகளால் பின்னப்பட்டு பால்
ஒளியால் நிரப்பப்பட்டு நட்சத்திரப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
அழகு மிளிர்ந்த ஆன்மாவை அன்பரின் அருளால் நிரப்ப
ஆண்டவனையே கருத்தாங்கிய கன்னி இவள்

ஆரவாரமில்லா அமைதியில் இறையனுபவத்தைப் பெற்று
அனைவர் மனத்தையும் கொள்ளை கொள்ளும் கன்னியாய்
தரணியர் போற்றும் தாயாய் சீர்திருத்தவாதியாய்
தாராள உள்ளத்தோடு பிறரன்புப் பணியில் ஈடுபாடு கொண்ட தாயவள்

தன்னிகரில்லா அருட்கன்னியாய் அரசாட்சி புரிபவள்
காற்றை சுவாசிப்போர்க்கு மணமாகவும் சுகமாகவும் இருக்கும்
காற்றுக்கு உருவம் உண்டோ இல்லையோ- ஆனால்
அன்னை மரியளுக்கு என்றும் ஆண்டவனின் அருளுண்டு

இறைவன் கொடுத்த கனிஇவள் இறைமக்களால் சுவைக்கப்படுபவள்
பார் போற்றும் பாவை இவள் பரலோகப் பிதாவின் பக்தை இவள்
இறைவார்த்தையை இதயத்தில் சுமந்து இறைமக்களை மனத்தில் சுமந்து
இறைவழியில் என்றும் நாம் வாழ ஜெபிப்பவள் நம் அன்னை

தொடர் சந்திப்பு நெருக்கத்தை உருவாக்கும்
அருகாமை நெருக்கத்தை  வளர்த்தெடுக்கும்
உடனிருப்பு உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
இறைவனின் நெருக்கம் என்றும் நமக்கு ஆசியைப் பெற்றுத்தரும்

உம் வழியில் யாம் நடக்க உம் மகளாய் (மகனாய்)
யாம் மாறிட நிலம் பிளந்து உள்செல்லும் மழையாய்
இருள் கிழித்து ஊடுருவும் ஒளியாய் எம்முள்
உம் அருள் வேண்டும் உம்ஆசீர் எமை ஆள வேண்டும்  அன்னையே

கிறிஸ்துவில் பிரிய
சகோ. ஆலிஸ் (ரெஜி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேவ இரகசியங்களை அறிவோம்

மகிழ்ச்சி நிறை மறையுண்மை
4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்.
  
இயேசு பிறப்பின் நிகழ்ச்சிகள் அன்னை மரியாவின் அடிமனதில் இன்ப அலைகளாக எழுப்பிக் கொண்டேயிருந்துது. நாற்பது நாட்கள் 40 நொடிகளாக கடந்தன. தாயின் சுத்திகரச் சடங்கும், தலைச்சன் மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கவும் தயாராகிறார்கள். இச்சடங்கை எருசலேம் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.  எந்த இடத்திலும் உள்ள ஒரு யூதகுருவிடம் காணிக்கை செலுத்தி, இறைவனுக்கு உரிமையான தலைச்சன் குழந்தையை மீட்டுக்கொள்ளலாம். அன்னை மரியாவின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இறைமகனையே தன் மகனாக அளிக்க மரியா எடுத்துச் செல்கிறார். சீயோன் மகள் என்ற அடையாளத்தில் திருஅவையால் போற்றப்படும் மரியாவில் இஸ்ராயேல் இனம்  விருத்தசேதனத்தால் தன் இனத்தாராகி விட்ட இறைமகனை இறைவனுக்கு மிகவும் ஏற்ற காணிக்கையாக்க மகிழ்ச்சி பொங்க செல்கிறார்கள். இங்கு மூன்று முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன.

1. மரியாவின் தூய்மைப்படுத்தும் சடங்கு
2. தலைச்சன் குழந்தையை மீட்டல்
3. குழந்தை இயேசுவைக் காணிக்கையாகக் கொடுத்தல்.

பழைய ஏற்பாட்டில் :

லேவியர் 12 1-4, 6-8 பகுதியில் சொல்லப்பட்டுள்ளபடி ஒரு பெண். ஆண் குழந்தையை பெற்றபின் ஏழுநாட்கள் தீட்டுள்ளவளாக கருதப்பட்டாள். தொடர்ந்து 33 நாட்கள் தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது.  தூய தலத்திற்குள் வரக்கூடாது. 40 நாட்களுக்கு பின் ஓராண்டு வயதுள்ள செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் கொடுக்க அவர் அவளுக்கு கறை நீக்கம் செய்வார். ஏழையாக இருந்தால் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்களையோ கொண்டு வந்து ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம் போக்கும் பலியாகவும் படைத்து கறை நீக்கம் செய்வார்.

மரியாவின் தூய்மைபடுத்தும் சடங்கு:

உலகனைத்தையும் பாவத்தீட்டிருந்து தூய்மையாக்க வந்தவரைப் பெற்ற தூய்மையே உருவான மரியா தூய்மைப்படுத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, ஏழைகளின் காணிக்கையுடன் நிற்கும் மேன்மையை என்னென்பது?. இதோ! ஆண்டவர் சிறுகுழந்தையாகப் பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார்.
‘அழிக்கவல்ல, நிறைவேற்றவே வந்தேன்‘ என்ற வாக்குக்கு இணங்க சட்டத்தை ஏற்படுத்தியவரே, அதற்குப் பணிந்து நிறைவேற்றுகிறார். அதுபோல தூய்மைபடுத்தும் சடங்கு அன்னை மரியாவுக்குத் தேவையில்லை. அசுத்தம், குறை எதுவும் அவளிடம் இல்லை. ஆனாலும் தம் மகனைப் பின்பற்றி, அவரும் சட்டத்துக்கு பணிந்து நடக்கிறார்.

மெசியா பற்றிய இறைவாக்கு :

யூதச்சடங்குகளின் பெயர் மட்டுமல்ல, தூய ஆவியின் அருட்பொழிவையும், இறை வாக்கினர்களின்  கூட்டம் கூடிவந்து குழந்தை யையும், அதன் தாயையும் சூழ்ந்து கொண்டு  மெசியாவைப் பற்றிய இறைவாக்கு நிறைவுக்கு வந்து விட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் மையப்படுத்துகின்றது. இவர்கள் மூலம் இஸ்ராயேல் மக்களின் வாழ்வின் மையமான எருசலேம் ஆலயத்தில் இறைவன் தன் மெசியாவை அறிமுகப்படுத்துகிறார். சடங்குகளை நிறைவேற்றிய குருக்கள் மெசியாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆவியால் அருட்பொழிவு பெற்ற சிமியோன்  புளகாங்கிதம் அடைகிறார். தன் காலமும் நிறைவடைந்து விட்டதாக கூறி, கடவுளைப் போற்றுகிறார். (லூக் 2 : 28-32) சிமியோனும், அன்னாவும் கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லோரிடமும் குழந்தையைப் பற்றி எடுத்துரைக்கின்றனர்.

இயேசு எதிர்க்கப்படும் அறிகுறி :

இயேசு இஸ்ராயேலின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாகவும், எதிர்க்கப்படும் குறியாகவும், புறவினத்தாருக்கு உண்மையென ஒளிர்விக்கும் ஒளியாகவும் இருப்பார் என விவரிக்கப்படுகிறார். (லூக் 2 : 34) ‘‘ புற இனத்தாரை ஒளிர்விக்கும் ஒளி’’ என்பது எசாயா புத்தகத்தில் ‘‘ஆண்டவரின் ஊழியன்‘‘ பற்றி சொல்லப்பட்ட அருள்வாக்கு. உலகம் முழுவதற்குமே மீட்பராக உள்ளார் என அறிவிக்கப்படுகிறார். (எசா 42 : 6, 49 : 6, 52 : 10)
இயேசு எதிர்க்கப்படும் அறிகுறியாக ஏன் இருக்க வேண்டும்? இறைவன் அன்பே உருவானவர் என அனைவரும் நம்பும் போது அவரை ஏன் எதிர்க்க வேண்டும்? சென்றவிடமெல்லாம் நன்மை செய்த இயேசு ஏன் விரோதிக்கப்பட வேண்டும்? இங்குதான் உண்மை அன்பையும் மனித இனத்தின் முரண்பாடுகiயும் பார்க்கிறோம். குடிப்பழக்கம் உள்ளவனுக்கு மதுபானம் வாங்கி கொடுப்பவன் உயர்ந்த நண்பனாகத் தெரிகிறான். உண்மையான அன்போடும், அக்கறையோடும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனைக் கூறுபவனை பகைக்கிறான்.
இறைவன் நமது வாழ்வில் நேரடியாகவோ பிறர் வழியாகவோ உண்மை அன்பைக் காட்டும் போது அதனைக் காணப் பழக வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது மகிழ்ச்சியளிக்கும் காரியங்களையும் நபர்களையும் உண்மை அன்பையும் வெறுத்து வாழ்வு தடம் புரளும் நிலையடைவோம்.

மரியாளின் இறை நம்பிக்கை :

மரியாவுக்கு ‘‘உமது உள்ளத்தையும் ஒருவாள் ஊடுருவிப்பாயும்‘‘ (லூக் 2 : 35) என்ற இறைவாக்கு அருளப்படுகிறது. இவ்வாக்கால் ஊடுருவப்பட்டு, ‘‘ஆண்டவர் சொன்னவை யாவும் நிறைவேறும்‘‘ என்று நம்பி, பேறுபெற்றவளாய் (லூக் 1 : 45) உயர்ந்து நிற்கிறார். குழந்தை இயேசுவைக் காணிக்கையாக்கும் நிகழ்ச்சியானது மரியா இறை நம்பிக்கையில் உயர்ந்து நிற்பவராக தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. சிமியோனும், அன்னாவும்  குருவர்க்கத்தை சேர்ந்தவர்கள்  அல்லர். இக்காலத்தில் வயதானவர்கள் கோயிலில் கதியாய் கிடந்து செபமாலைச் சொல்லிக் கொண்டிருப்பது போல சிமியோனும், அன்னாவும் தேவாலயத்திலே இருந்து  இறைவனைப் புகழ்ந்தனர். அவர்களது பிரமாணிக்கமுள்ள , உண்மையான, வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்க சித்தமானார். உலக இரட்சகரைக் கண்டு களித்தனர்.
செபம் :
நித்திய பிதாவே ! இயேசு, மரி, சூசையின் தாழ்ச்சி நிமித்தம் எங்களுக்கு தாழ்ச்சியைக் கற்றுத்தாரும். அன்பின் நிர்மலத்தாய் ஏழைகளின் காணிக்கையான இரு வெண்புறாக்களை அளித்ததை நினைத்து எங்களிடத்தில் ஏழ்மை மனநிலையை ஊட்டியருளும். மகா பரிசுத்த கன்னிகையே நாங்கள் வாழ்வின் சட்ட திட்டங்களுக்கும், ஒழுங்கு கிரமத்திற்கும், எங்கள் பணிகளில், வாழ்வு நிலையில் கீழ்படியும் மனப்பான்மையைக் கொண்டு வாழ கிருபை செய்யும் ஆமென்.


சகோ. சிறியபுஷ்பம்,  FIHM
கூத்தப்பாக்கம், 
கடலூர்.
.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குட்டீஸ் பகுதி

நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? இறை இயேசுவின் அருளாலும் அன்னை மரியின் பரிந்துரையாலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாவும் இருப்பீங்கனு நினைக்கிறேன்.
2015 இதோ பத்து மாதம் முடிந்து ஆண்டோட இறுதிக்கு வந்துட்டோம். கடந்த பத்து மாதங்கள்ள எத்தனையோ விஷயங்கள் நாம சந்திச்சிருப்போம். அதில பல அனுபவங்களும் கிடைச்சிருக்கும். சில விஷயங்கள்ள வெற்றி கிடைச்சிருக்கும். சில விஷயங்கள்ள தோல்வி அடைஞ்சிருப்போம். சிலர் பல முயற்சிகள் பண்ணியிருப்பீங்க ஆனா தோல்விய சந்திச்சிருப்பீங்க. என்ன குட்டீஸ் மனம் சோர்ந்திட்டீங்களா? மனம் சோர்வடையவே கூடாது.
ஆங்கிலத்தில இவ்வாறு சொல்வாங்க positive attitude is the key to success. நம்மளோட முயற்சி சரியான இலக்கை அடையனும்னா நம்மளோட அனுகுகுறையும் நேர்மறையா இருக்கனும். இந்த நேர்மறை அணுகுமுறை யால தங்களோட வாழ்க்கையின் இலக்கை எட்டிய மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஒரு வீரன் தன் தோழர்களிடமிருந்து வழி தவறி காட்டில் மாட்டிக்கொண்டான். அந்தக் காட்டை எதிரி நாட்டுப்படையினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சிக்கிக் கொண்டால் அவனது உயிர் அவனிடம் இல்லை. இவன் தப்பிப்பதற்காக அங்குமிங்கும் பார்க்கும்பொழுது ஒரு குகை கண்ணில் பட்டது. உடனே அங்கு சென்று ஒளிந்து கொண்டான். அவன் கடவுள் கிட்ட ஆண்டவனே என்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்று. நான் உம்மை நம்புகிறேன். நீங்க ஏதாவது ஒரு அற்புதம் செஞ்சி என்னைக் காப்பாத்துங்கனு வேண்டிக் கொண்டான். செபித்து விட்டு ஆண்டவரிடமிருந்து உதவி வருமா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் எட்டுக்கால் பூச்சி அந்த குகை வாசலிலே வலை பின்னுவதைப் பார்த்தான். அவன் சிரிச்சிக்கிட்டே நான் கடவுள் கிட்ட எதிர்பார்த்தது ஒரு வலிமையான சுவரை. ஆனால் அவர் அனுப்பியிருப்பது ஒரு சின்ன வலிமையற்ற எட்டுக்கால் பூச்சியை. கடவுளுக்கு நல்ல நகைக்சுவை உணர்வு அப்படினு மனசில சொல்லி அவன் கேலியா சிரிச்சிருக்கான்.
அப்போ அந்த எதிரி வீரர்கள் ஒவ்வொரு குகையா தேடிட்டே வர்றாங்க. ஒரு வீரன் நம்ம கதையின் நாயகன் இருந்த குகைகிட்ட வந்து தேட முயற்சிக்கும் போது தலைமை வீரன் அவனைப் பார்த்து இந்த குகையினுள் தேட வேண்டாம். எதிரி உள்ளே போயிருந்தால் இந்த எட்டுக்கால் பூச்சி கட்டிய வலை அறுந்திறுக்கும். எனவே போக வேண்டாம் என்று தடுத்து விட்டான். வீரனும் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு உடனே விவிலியத்தில் வாசித்த இறைவார்த்தை நினைவுக்கு வருகிறது. ‘‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆண்டவர்’’ (எசா 55 : 8) அவன் உடனே கடவுளிடம், ‘‘ஆண்டவனே என்னை மன்னித்துவிடு. உம்முடைய பார்வையில் இந்த எட்டுக்கால் பூச்சி ஒரு சுவரை விட வலிமையானது’’ என்று செபித்தான். ஆம் அன்பான பிள்ளைகளே சில நேரங்களில் செபம் சூழ்நிலையை மாற்றாது. ஆனால் நமது அனுகுமுறையை அந்த சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிவிடும்.
நாமும்  கூட குழந்தைகளே நமது அணுகுமுறையை சூழ்நிலைக் கேற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். எதையும் ஒரு நேர்மறை கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால இந்த உலகத்தில எத்தனை இடர்கள், இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். இதற்கு உதாரணமா தந்தை பியோவை சொல்லலாம்.
ஒரு கதை சரியா குட்டீஸ். ஒரு கதைன்னு சொன்ன உடனே உங்கள் முகம் சந்தோஷமாகுது, எனக்கும் கூட அப்படித்தான். கதைனா ரொம்ப பிடிக்கும். சரி அடுத்த கதைக்குப் போகலாமா குட்டீஸ். ஒரு மனிதன் காட்டு வழியே வரும்போது மிகுந்த களைப்பிற்குள்ளாகி மயங்கி ஒரு மரத்தினடியில் விழுந்து விட்டான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. அப்பொழுது அந்த வழியே ஒரு குடிகாரன் சென்றான். அவன் அவனைப் பார்த்து பாருடா! ஒரு குடிகாரன் நல்லா குடிச்சிட்டு விழுந்து கிடக்கான் அப்டின்னு சொல்லிட்டே அவனை கடந்து சென்று விட்டான். அடுத்து அந்த வழியே ஒரு விவசாயி சென்றான். அவன் அவனைப் பார்த்து நல்ல உழைப்பாளியா இருக்கனும் அதனால் தான் உழைத்து களைத்துப்போய் படுத்து இருக்கான் அப்படின்னு அவனும் சொல்லிட்டு போயிட்டான். அப்புறம் அந்த வழியே ஒருத்தர் வர்றார். அவர் யாருன்னா தன் பிள்ளைகளால கை விடப்பட்ட ஒரு தந்தை. அவர் பார்த்துட்டு ஐயோ பாவம் இவரை இவரோட பிள்ளைகள் சுமையா கருதி துரத்தி விட்டுட்டாங்க போல. அப்படினு மனசில பரிதாபப்பட்டுட்டே சென்றார். அப்போ அந்த வழியா தந்தை பியோ வருகிறார். அவர் என்ன சொல்லிருப்பாருனு உங்களாள யோசிக்க முடியுதா? ஆமா கண்டிப்பா அவர் அந்த மனிதனை ஒரு துறவியாத்தான் பார்த்திருப்பாரு. ஏன்னா தந்தை பியோ தன்னோட வாழ்விலே எல்லாத்தையும் நேர்மறை அணுகுமுறையாதான் பார்த்தார்.
தந்தை பியோவோட குருத்துவ வாழ்க்கையில எத்தனையோ முறை சாத்தானால் சோதிக்கப்பட்டடபோதும் சரி, கடுமையான நோயால் தாக்கப்பட்ட போதும் சரி அவர் எல்லாத்தையும் கடவுளை தான் அடையக்கூடிய படிக்கற்களாத்தான் நினைச்சார். அது மட்டும் இல்ல இந்த சோதனைகள் கடவுளால் அனுமதிக்கப்பட்டது. அவர் இதிலிருந்து தன்னை நிச்சயம் விடுவிப்பார் என்று பொறுமையோடும் மகிழ்ச்சியோடும் தனது துன்பங்களை ஏற்றுக்கொண்டார். ஐயோ நான் நினைத்தபடி குருத்துவ வாழ்வு இல்லையே என்ற சோர்ந்து போகவில்லை. அதனால்தான் இறைவனால் அவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
அன்புக் குழந்தைகளே ! நாமும் வாழ்வில் வெற்றியோட சிறப்பா வாழ நேர்மறை சிந்தனை நமக்கு மிகவும் தேவை. அதோட இறைவனோட அருளும் தேவை. நம்முடைய முயற்சிகளை  விசுவாசத்தோட இயேசுவின் பாதத்தில் வச்சிட்டு தந்தை பியோவைப்போல நேர்மறையா எல்லா செயல்களையும் எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம். செய்வீங்களா குட்டீஸ். அதுமட்டும் இல்ல இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு இனிமையானதாகவும் புத்தாண்டு வளமாகவும் அமைய என்னோட வாழ்த்துக்கள்.
அன்புடன்
உங்கள் அங்கிள்
ஜோசப்  லியோன், தூத்துக்குடி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்றாட வாழ்விற்காக புனித தந்தை பியோவின் ஆன்மீக வழிகாட்டுதல் ( கடிதங்கள் வழியாக)

தந்தை பியோவின் ஆலோசனைகள் ஆழமானவை. பொறுக்க இயலாத மன வேதனைகளைத் தாங்கிக் கொண்ட இயேசு நம்மை எவ்வாறு மீட்பிற்கு வழி நடத்துகிறார் என்று அவர் வழியாக அறிந்து கொண்டோம். இயேசுவின் மீட்பை நாம் ஏற்க மறுப்பதனால் நன்றி கெட்டதனத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதனால் நன்றியுடையவராக இருத்தல் அவசியம். எதிலுமே கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம். கிறிஸ்துவின் பாடுகளில் நாமும் பங்கு பெறும்பொருட்டு நம் இழிவுணர்ச்சிகளையும் இச்சைகளையும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டோம் என்றால் மீட்பு பெற தகுதி பெற்றவர்களாவோம். இயேசுவின் பாடுகளை உடலில் ஐம்பது ஆண்டுகளாக தாங்கினவரான புனித பியோவின் போதனைகளைப் போன்று ஆழமான போதனைகளைப் பெற்றுகொள்வது எளிதல்ல, அதை புரிந்து கொள்வதும் கடினமாகவே உள்ளது.
சிந்தனை 2/23 :  இறுமாப்பு  குறித்து எச்சரிக்கை.

ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கும், ஆன்மீக வாழ்விற்கு கையளித்தவர்களது ஆன்மாவிற்கும் அளவுக்கு மிஞ்சிய வீண் பெருமை அல்லது இறுமாப்பு உண்மையான எதிரியாக இருக்கிறது. அதன் காரணமாகவே, முழு நிறைவை இலட்சியமாகக் கொண்ட எந்த ஆன்மாவையும் அழித்துவிடும் புழு என்று அதனை சரியாக அழைத்துள்ளாளர்கள்.
இறுமாப்பு எவ்வாறு முழு நிறைவிற்கு எதிரானது என்பதனை இவ்வாறு விளக்கலாம். பேய்களுக்குக் கட்டளையிட்டபோது அவை கீழ்ப்படிந்ததைக் கண்ட சீடர்கள் முழுநிறைவோடும் அளவுக்கு மிஞ்சிய வீண் பெருமையோடும் இருப்பதைப் பார்த்த இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்  (லூக் 10 : 20) என்றார்.
அவர்களது மனதிலிருந்து வெளிப்பட்ட, சாபத்துக்கு ஆளாக்குகிற தீமையின் தீய பாதிப்புகளை வேரோடு பிடுங்கி விடுவதற்காக அவர்கள் மனதில் நயம்பட புகுவதில் வெற்றி பெற்றுவிடாதிருக்க, லூசிபரை கடவுள் உயர்த்தி வைத்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்ததை எடுத்துகாட்டாகச் சொல்லி அவர்களை அவர் நடுக்கமுறச் செய்தார். தான் பெற்ற கொடைகளால் இறுமாப்பு அடைந்ததன் காரணமாக விழுந்ததைச் சொன்னார். ‘வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்.’ (லூக்கா 10 : 18 ) என்றார்.
இந்த தீமை அதிகம் அஞ்சுதற்குரியது, ஏனெனில் அதை எதிர்க்க சரியான எதிர்மதிப்பீடு (virtue to counter) ஒன்றும் இல்லை. ஏனைய எல்லா தீமையையும் எதிர்க்கக் கூடிய சரியான எதிர்மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. கோபம் அதற்கு  எதிரான பொறுமையால் மேற்கொள்ளப்படுகிறது. பொறாமை கொள்வது (envy) இரக்கச்செயல் (Charity) வழியாக, பெருமை தாழ்ச்சி வழியாக இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் மாற்று மதிப்பீடுகள் உண்டு. சுயஇறுமாப்பு அல்லது ஆணவத்திற்கு மாத்திரம் நேரடியாக அதை எதிர்க்கும் படியான மதிப்பீடு கிடையாது செயல்களிலெல்லாம் புனிதமானவற்றிலும் அது மெல்லியதாக ஊடுருவி விடுகிறது. மேலும் அதை அடையாளம் காண இயலாது. அது செருக்குடன் தாழ்ச்சிலும் தனது கூடாரத்தை அடித்துக் கொள்கிறது.
 ((To Fr,agotino of san marco in lamis aug 2, 1913).

சிந்தனை 2/24 :  பாவங்களை அல்ல, சுய இறுமாப்பை மேற்கொள்பவர்களையே சாத்தான் சோதிக்கிறான்.
(இந்த கடிதங்கள் அருட்தந்தை அகுஸ்தினோ யாமிலில் உள்ள சான்மார்கோவைச் சார்ந்தவருக்கு ஆகஸ்டு 2, 1913 அன்று எழுதியது)
அன்பான தந்தையே! காமவெறி கொண்ட ஒரு நபர், மனப்பேராசை கொண்ட ஒரு நபர், ஒரு பாவி இத்தகையோர் பெருமைப்பட்டு கொள்வதைவிட அதிகமாக குழப்பம் அடைந்தவராகவும், அவமானத்தால் முகம் சிவந்தவராகவும் இருக்க வேண்டும் என்று சாத்தானுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அவன், சுய இறுமாப்பினால் அவர்களைச் சோதிப்பதைத் தவிர்த்து விடுகிறான். இத்தகைய போராட்டத்தில் அவர்களுக்கு சாத்தான் ஊறு விளைவிக்காதிருந்தாலும் நல்ல மக்களை அதிலும் நிறைவு பெற்றவர்களாய் வாழும் குறிக்கோளாகக் கொண்டவர்களை அவன் காயப்படுத்தாமல் விட்டு வைப்பதில்லை.
ஏனைய தீய ஒழுக்கங்கள், யாரெல்லாம் அந்த தீய ஒழுக்கங்களால் மேற்கொள்ளவும், அதிகாரம் செலுத்தவும் அனுமதிக்கிறார்களோ அவர்களை மட்டுமே வெற்றி கொள்கின்றான். எப்படியிருந்தாலும் சுய இறுமாப்பானது அதனோடு  போராடி அதனை மேற்கொள்ளும் மக்களுக்கு மட்டுமே எதிராக அதன் தலையை உயர்த்துகிறது. இறுமாப்பின் மீது வெற்றி கொண்டவர்களுக்கு எதிராகப் போராடி, அவர்கள் பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்து விடும்படியாக இறுமாப்பு செயல்படுகிறது. ஒரு போதும் களைப்படையாத எதிரி அது. மேலும் நம் எல்லா செயல்களிலும் அது நமக்கு எதிராகப் போர் தொடுக்கிறது. நாம் அது இருப்பதை உணராவிட்டால் நாம் அதன் ‘பலியாள்’ ஆகிவிடுவோம்.
இதன் காரணமாக மற்றவர்களுடைய புகழ்ச்சியிலுருந்து ஓடி விடுகிறோம். திறந்த வெளியில்  உபவாசம் இருப்பதைவிட பிறர் அறியாமல் மறைவான இடங்களில் உபவாசம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறோம். திற மையான பேச்சைவிட அமைதியையும் முக்கியமாகக் கருதப்படுவதைவிட ஏளனத்திற் குள்ளாவதையும், புகழ் பெறுவதை விட அவமதிப்ப்புக்குள்ளாவதையும் நாம் விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம். அந்தோ, என் கடவுளே, இவ்வாறு காரியங்களை நாம் செய்தாலும், அவர்கள் சொல்லுவதுபோல, சுய-இறுமாப்பு (ளுநடக- ஊடிnஉநவை) அதனுடைய மூக்கை உள்ளே நுழைக்க விரும்புகிறது. மேலும் சுய திருப்தியினால் நம்மைத் தாக்குகிறது.

சிந்தனை 2/25 :  சுய இறுமாப்பை நுழைய விட வேண்டாம். அது நம்மை சேதப்படுத்திவிடும்.
புனித ஜெரோம் சுய இறுமாப்பை ஒரு நிழலுக்கு ஒப்பிடுவது சரியே, ஏனென்றால் ஒரு நிழலானது. அதன் உடல் எங்கு சென்றாலும் அதன் பின்னால் செல்கிறது. அதன் அசைவுகளை அப்படியே திரும்பச் செய்கிறது உடல் ஓடும்போது அதன் நிழலும் தொடர்ந்து ஓடுகிறது. ஏதோ ஒருவர் மெதுவாக சிறுசிறு அடிகளை எடுத்து நடந்து சென்றால் அந்த அடிகளை நிழலும் உறுதி செய்கிறது. ஒரு நபர் உட்கார்ந்தால் அதுவும் அதே வடிவமைப்பையே எடுத்துக் கொள்கிறது.
அதுபோலவே, சுய இறுமாப்பும் நல்லொழுக்கமும் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து செல்லுகிறது. உடல் அதன் நிழலை விட்டு ஒடுவதால் பயன் ஒன்றும் இருக்காது. ஏனென்றால், நிழல் எப்பொழுதும் எங்கும் உடலைத் தொடர்ந்து தான் செல்லும் அதனை விட்டு விலகாதிருக்கும். அது போலவே, யாரெல்லாம் உயர் மதிப்பீடுகளையும் நிறைவையும்  குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையும் சுய இறுமாப்பு தொடர்கிறது. சுய நிறை வைக் கண்டுகொள்ள ஓடும் போதெல்லாம், அது நிழலைப்போல நெருக்கமாக பின்னாலே ஓடிகின்றது.
எனவே எப்பொழுதும் நாம் விழிப்போடிருப்போம். இந்த அஞ்சத்தக்க எதிரி நமது மனங்களுக்குள்ளும் இதயங்களுக்குள்ளும் நுழைந்து, அதன் வழியாக நம்முள் நுழைய அனுமதிக்க வேண்டாம் ஏனென்றால், ஒரு முறை அது நுழைந்தால், அது நமது எல்லா ஒழுக்கப்பண்புகளையும் நாசப்படுதுதம்.
 எல்லா புனித தன்மையையும் கெடுத்துவிடும். எதெல்லாம் நல்லதாகவும் அழகாகவும் இருக்கிறதோ அவற்றையெல்லாம் களங்கப்படுத்துகிறது.
(கூடி குச. ஹபடிவinடி டிக ளுயn ஆயசஉடி in டுயஅளை ஹரப 2, 1913)
அன்பு தந்தை புனித பியோ, அருட்தந்தை அகுஸ்தினோவிற்கு எழுதிய கடிதங்களில் இருந்து இறுமாப்பு குறித்த மிக முக்கியமான தகவல்களை வாசித்தோம். இறுமாப்பைக் குறித்த எச்சரிக்கையை இதயத்தில் பதிப்போம்.
1. புனிதத்தை சேதப்படுத்தும் புழு போன்றது இறுமாப்பு (வீண் பெருமை)
2. லூசிபர் இறுமாப்பினால் வீழ்ந்ததை மனதில் நிறுத்தி, தீய ஆவிகள் அடிபணிவதற்காக மகிழ வேண்டாம் என்று சீடர்களிடம் சொன்னார்.
3. சுய இறுமாப்பிற்கு மாத்திரம் நேரடியாக எதிர்க்கின்ற மதிப்பீடு இல்லை.
4. பாவிகளை, பலவீனர்களை சாத்தான் சுய இறுமாப்பினால் சோதிப்பதில்லை, மாறாக சுய இறுமாப்பை வென்றவர்களையே சோதிக்கிறான்.
5. சாத்தான் நம்மை சோதிப்பதை அறியாவிட்டால் நாம் அதற்குப் பலியாள் ஆகிவிடுவோம்.
6. நல்லொழுக்கமுள்ளவர்களை சுய இறுமாப்பு நிழல்போல் தொடருகிறது. எனவே விழிப்போடிருந்து அது உள்ளே நுழைவதைத் தடுக்கா விட்டால் நம் புனிதத் தன்மையை இல்லாதாக்கிவடும். 
அதனால் தான் நீதிமொழி
‘‘அழிவுக்கு முந்தியது அகந்தை
வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை’’ (நீ.மொ 16 : 18)
என்று எச்சரிக்கிறது. எச்சரிக்கையுடன் உஷாராவோம். இறுமாப்பிலிருந்து காத்துக் கொள்வோம். 
இந்த 5 சிந்தனைகளையும் வாசித்தபிறகு ஏதாவது ஒரு சிந்தனையையாவது மனதில் நிறுத்தி செயல்படுத்த வேண்டும். இந்த இதழிலே சிலுவையை ஏற்கும் பண்பை வலியுறுத்தி கடவுளின் திருவுளப்படி நடக்கவும் ஊனியல்பின் வேரை எடுத்து மாற்றி சிலுவையில் இச்சைகளை அறைந்துவிடவும் இறுமாப்பை களைந்து தாழ்ச்சியோடு செயல்படவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தந்தை பியோவின் சிந்தனை வழியாக அவர் என்ன செய்தி சொல்ல விரும்புகிறாரோ அது மாத்திரம் சென்று சேர வேண்டுமே என்ற ஏக்கத்தோடு இந்தப் பக்தியை எழுதுகிறேன். இதை வாசிக்கும்போது அவரின் ஆன்மா, ஆவியின் ஆற்றலோடு நீங்களும் வாசித்து தியானித்து வாழ்வாக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

தொடரும்....

திருமதி இம்மாகுலேட் பிலிப், 
நாகர்கோவில

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித பியோ ஜெபமாலை இயக்க விழா

புனித பியோ செபமாலை இயக்கத்தின் 3வது ஆண்டு விழாவானது திருவையாறு தூய இதய அன்னை ஆயத்தில் 20.09.2015 ஞாயிறன்று நடைபெற்றது. முந்தின நாள் இரவு ஆன்மீக வழிகாட்டியின் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து இயக்கத்தின் கருத்துக்களுக்காக ஜெபமாலை ஒப்புக் கொடுக்கப்பட்டது. பின்னர் பியோ குரல் ஆசிரியர் குழுவினரின் கலந்துரையாடல் நடைபெற்றது. உறுப்பினர்கள் கடந்த ஒரு வருடமாக புனித பியோ செபமாலை இயக்கத்தில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்றும் இன்னும் இந்த இயக்கத்தை எவ்வாறு மெருகூட்டுவது என்றும் விவாதிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் புனித பியோ வழியாக தாங்கள் பெற்ற குடும்ப சமாதானம் மற்றும் இறை நம்பிக்கையை பகிர்ந்துக் கொண்டார்கள். ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை செல்வராஜ்  அவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் அதிக உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் முடிந்த வரையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உறுப்பினர்கள் மாதம் ஒரு முறையாவது கூடி செபிப்பதற்கு முயற்சி எடுக்குபடியாகவும் கூறினார்.

20.09.2015 ஞாயிறன்று காலை 8.20 மணியளவில் ஆடம்பர செபமாலையுடன் திருப்பலியானது அருட்தந்தை செல்வராஜ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. தனது மறையுரையில் தந்தை பியோ தனது வாழ்வில் எவ்வாறு இயேசுவையும், அன்னை மரியாளையும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார் என்றும் நாமும் எவ்வாறு தந்தை பியோவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வது என்றும் எடுத்துரைத்தார்.

திருப்பலிக்குப் பின்னர் தஞ்சை மாவட்ட செபமாலை இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. இருதயராஜ் அவர்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி டல்சி டி குருஸ் அவர்கள் மற்றும் திருமதி வேணி ஜாண் அவர்களும் திருவையாறு பங்கு மக்களுக்கு புனித பியோ வழியாக தாங்கள் பெற்ற இறை அனுபவத்தையும் பியோவின் அற்புதங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அன்று திருவையாறு பங்கிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மிக ஆவலுடன் புதிய உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஒரு மணி நேர ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தவும் நமது இயக்க விழாவிற்கு வெளியூரிலிருந்து வந்திருந்த விருந்தினர்களை மிக அன்பாக உபசரித்த திருவையாறு புனித தூய இதய அன்னை ஆலய பங்குத் தந்தை அருட்திரு கிறிஸ்து ராஜா அவர்களுக்கு சிறு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெபமாலை, இயக்கப் பிள்ளைகளுக்கு வழங்கியதைப் போலவே இந்த ஆண்டும் வழங்கப்படடது. மஸ்கட்டைச் சார்ந்த திரு. பழனிவேல் சேகர் அவர்கள் இயக்க விழாவை முன்னிட்டு தனது பங்களிப்பாக 1000 செபமாலை அன்பளிப்பாக வழங்கினார்கள். இயக்க விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிங்கப்பூர் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தைச் சார்ந்த திரு. அந்தோணி ஜோசப் அவர்கள் மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நமது ஆன்மீக வழிகாட்டி இத்தாலி சென்றிருந்தபோது ஆன்மீகப்பிள்ளைகளுக்கென்று வாங்கிய தந்தை பியோவின் புனித திருப்பண்டமும் வழங்கப்பட்டது. மேலும் சென்னை திரு.கெவின் அவர்கள் நமது இயக்க விழாவிற்காக தந்தை பியோவின் திருஉருவம் பதித்த கீ-செயின் வழங்கினார்கள். திரு இருதயராஜ் அவர்கள் தந்தை பியோவின் நவநாள் செப புத்தகங்களும், படங்களும் வழங்கினார்கள். திருமதி ராணி ஜெகதீஷ் அவர்கள் தந்தை பியோவின் நவநாள் செபம் தாங்கிய படங்களையும் வழங்கினார்கள். திருவிழாவிற்கு வந்திருந்த இயக்கப் பிள்ளைகளை அருட்தந்தையர்கள் அ.செல்வராஜ் மற்றும் கிறிஸ்து ராஜா அவர்கள் திருப்பயணமாக பூண்டி திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இறுதியாக திருமதி வாசுகி செல்வராஜ் அவர்கள் இயக்க விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூற  அருட்தந்தையர்கள் ஆசீர் வழங்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.

-வாசுகி செல்வராஜ் தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்களுடன்..........

இறை இயேசுவில் அன்பான பியோவின் குழந்தைகளே !
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பான வாழ்த்துக்கள்.

நவம்பர் மாதம் முதல் தேதி புனிதர்கள் அனைவரின் பெருவிழா. அன்பு உறவே மனிதம், புனிதம்,  தெய்வீகம். நம் திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர்கள் அனைவரையும் நமது மூத்த சகோதர, சகோதரிகள் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல், இவர்களை நமது முன்மாதிரியாகக் கொண்டு நெருக்கமாகக் கிறிஸ்துவுக்குச் சேவை செய்ய அழைக்கிறார்.

நவம்பர் 2ம் தேதி இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவுநாள். அன்புறவை கல்லறை அடக்க முடியாது. (தி.பா. 27 : 1) ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு. வாங்கு... பயன்படுத்து....தூக்கியெறி என்று பிறரை ஒரு பொருட்டாகக் கருதாத இயந்திர உலகிலே, இறந்த முதாதையர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காகச் செபித்து நம்முடைய மனிதாபிமானத்தை, அன்பை, நம் இதயக்கல்லறையில் உயிர்ப்பிக்கின்ற உயிர்ப்பு பெருவிழாவாக எண்ணி மகிழ்வோம். உயிரோடு இருக்கின்ற முதியவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு இக்கல்லறைத் திருவிழாவின் போது நம்மால் இயன்றவற்றை செய்து மகிழ்வோம்

நமது பிறப்பு பிறருக்கு வாழ்வு கொடுக்கட்டும். கடவுள் சமயங்களை உருவாக்கவில்லை. மாறாக அவரது சாயலில் மனிதர்களை உருவாக்கினார். இயேசுவின் பிறப்பு இறைவனையும் மனிதரையும் இணைக்கின்ற உறவு. உயிர்  பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் மிகக் கொடுமையானது. இறைவன் இயேசு உறவின் பாலமாக வரலாற்றில் பிறந்துவிட்டார். ஆனால் நம் இதயத்தில் பிறந்துவிட்டாரா? ஆம் சுயநலமற்ற அன்பு, கைம்மாறு கருதாத உதவி, எதிர்பார்ப்பு இல்லாத தியாகம், மன்னிக்கும் மனப்பாங்கு இவையாவும் நம் இதயத்தில் பிறந்துவிட்டால் அதுவே இயேசுவின் பிறப்பு.

இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் ஒருங்கிணைந்து செயல்படட்டும்.  ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கடந்த நாட்களைப் பின்னோக்கிப் பார்த்து தொலைநோக்குப் பார்வையோடு நிகழ்காலத்தில் பயணிக்க நம்மை தயாரிப்போம். இந்நாளில் நம் ஆண்டவர் நம்மை முகமுகமாகப் பார்த்து, கரிசனையோடு தனது ஆசியை வழங்கி, நம்மோடு தனது உடன் பயணிப்பை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே பிறக்க இருக்கும் புத்தாண்டில் பிஞ்சுக் குழந்தை இயேசுவின் நிறைவான ஆசிகளுடன் புதிய ஆண்டினைத் தொடர்வோம். தந்தை பியோவின் உடனிருப்பு என்றும் நம்மோடு.
   
 கிறிஸ்துவில் பிரிய,
சகோ.ஆலிஸ் (ரெஜி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மீக வழிகாட்டியின் கடிதம்

                
Infant Jesus Friary,
W-3/8K, Mariamman Koil St,
230,Vallam, Chengalpat,
Kanchepuram Dt-603003
Cell : 95971 66607
தூய வாழ்வுக்கு வழிகாட்டும் செபமாலை!
                
புனித தந்தை பியோவில் அருமையான ஆன்மீக பிள்ளைகளே!, இயேசு கிறிஸ்துவிலும் அன்னை மரியாவிலும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்! நலமோடு இருக்கின்றீர்களா? கடந்த மாதம் நம் அன்னையின் விழாவையும் தந்தை பியோவின் விழாவையும் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நானும் நமது இயக்கப் பிள்ளைகளோடு திருவையாறு பங்கில் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம். அது ஒரு அற்புதமான மகிழ்ச்சியின் நாளாக இருந்தது. கடவுளுக்கு நன்றி. தந்தை பியோ அழைத்தால் நீங்களும் அடுத்த ஆண்டு வருவீர்கள். சந்திப்போம். இங்கே நம்மோடு ஒருவர் பேசுகிறார், கேட்போமா?
               
  ‘‘என் வாழ்வை மோசமாக மாற்றிக் கொண்டிருந்த குடிப்பிரச்சனையிலிருந்து மாற்றம் வேண்டி, ஒருநாள் இரவில் வேலையிலிருந்து திரும்பி வந்த பிறகு செபமாலை சொல்லிக் கொண்டிருந்தேன். நான் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையோடு இருப்பவன். எனது குடிப்பழக்கத்தை விடவில்லை என்றால் எனது எதிர்காலம் குடியில் நாசமாகிவிடும் என்று உணர்ந்தேன். கவலையோடு இருந்த நான் குடிப்பழக்கத்திலிருந்து மீளமுடிவெடுத்து செபமாலை செபித்துக் கொண்டே தந்தை பியோவின் உதவியைக் கேட்டேன். உடனே வர்ணிக்க முடியாத நறுமணம் அங்கு பரவியதை உணர்ந்தேன். அந்த மகிழ்ச்சியான இனிமை மிகுந்த நறுமணம் என்னை மூடி எனக்குள்ளே ஆழமான பேரமைதியையும் மனதிருப்தியையும் ஏற்படுத்தியது. உடனே அது மறைந்துபோய் விட்டது. சிறிது நேரத்தில் வீட்டை அடைந்ததும் வழக்கம்போல அங்குத் தூங்கிக் கொண்டிருக்கும் எனது குழந்தையைப் பார்க்க சென்றேன். எனது மகனின் அறையில் நுழைந்ததும்  மீண்டும் அந்த நறுமணம் அறைக்குள் பரவியது. பின்னர் மறைந்துபோனது. எனது குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு எனக்கு உதவும்படி தந்தை பியோவின் உதவியை நாடியது என் நினைவிற்கு வந்தது. மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இரவிலிருந்து இதுவரை 20 வருடத்திற்கு மேலாக எந்த ரூபத்திலும் நான் மதுவை விரும்பியதே இல்லை. அதன் பிறகு என் ஜெபம் கேட்கப்பட்டதற்கான பதி லாக தந்தை பியோ நறுமணத்தை அடையாளமாக பயன்படுத்தினார் என்பதை தெரிந்துகொண்டேன்.’’ (பெயர் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது)

                எனது அருமையானவர்களே!, இந்த மனிதர் செபமாலை செபிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்திருந்திருக்கிறார். செபமாலை செபிப்பவர் செபமாலை செபிப்பார், அல்லது அதை விடுத்து பாவத்தில் விழுவார். இதில் ஏதாவது ஒன்றுதான் நடைபெறும். இரண்டும் சேர்ந்து நடைபெறாது. செபமாலை செபிக்கிறவர்கள் அன்னை மரியாவின் உதவியை மட்டுமல்ல மற்ற  புனிதர்களின் உதவியையும் எளிதாகப் பெற்றுவிடலாம். அனைத்து புனிதர்களும் அன்னை மரியாவை அதிகமாக அன்பு செய்தவர்கள். தந்தை பியோ அன்னை மரியாவை விடாமல் பற்றிக் கொண்டிருந்தவர். ஆகவே மேற்கூறப்பட்ட புதுமையில் வரும் மனிதர் அழைத்தவுடனே பியோ தாமதமின்றி உதவி செய்ததை அறிகிறோம். அதன்பின் அந்தமனிதர் பாவத்தை விடுத்து தொடர்ந்து செபித்துக் கொண்டிருப்பவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே செபமாலை செபிக்கும்போது புனித வாழ்வை நாம் தொடங்கலாம். செபமாலை செபிப்போருக்கு என்னென்ன நிகழ்கிறது என தெரியுமா?

1. பாவ சூழலிலிருந்து விடுதலைதரும் செபமாலை

                பாவம் செய்வதற்கான சூழல் அகற்றப்படுமானால் பாவத்திற்கான வழி தடைபட்டுவிடும். செபமாலை தினம்தோறும் செபிக்கும்போது பாவ சூழல்கள் அகன்றுவிடும். ‘‘பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உனையே பரமன்‘‘ என்று அன்னை மரியை நோக்கிப் பாடுகிறோம். அந்த அன்னை பரமனுக்குத் தாயானார். தாய் தன் பிள்ளைக்குத் தீமையேதும் தீண்டாமல் காப்பதுபோல் அன்னை மரியா செபமாலை செபிக்கும் பிள்ளைகளுக்கு பாவ சூழல் ஏற்படாமல் தடுத்துவிடுவார் என்பது உறுதி. அம்மா அம்மா என்றும் அருள் நிறை மரியே என்றும் அன்னை மரியை அழைத்த வண்ணம் இருந்த தந்தை பியோ பாவ சூழலிலிருந்து காக்கப்பட்டவர் என்பதற்கு அவரது தூய வாழ்வே சாட்சி. எனவே பாவ சூழலிலிருந்து விடுபட செபமாலையை கையில் ஏந்தி செபிக்கத் தொடங்குங்கள்.

2. சாத்தானை வெல்லும் செபமாலை

                ஒரு சிலர் சொல்வார்கள், ‘‘ ஃபாதர் செபிக்கத் தொடங்கிய பிறகு தான் எனக்கு பிரச்சனை அதிகரித்துவிட்டது. எனது கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது என்று...’’ உண்மையாக செபிக்கிறவர்களை சுற்றி சுற்றி வருவான் சாத்தான். ஆன்மீக காரியங்களில் முன்னேற முயற்சிக்கிறவர்களை விழத்தாட்டிப் பார்ப்பான் அவன். அவர்களது முயற்சியிலிருந்து அவர்களை பின் வாங்க வைப்பான்.
                சாத்தானுக்கு செவிமடுத்து செபத்தை கைவிட்டால் தோல்வி, பிரச்சனைகளைக் கண்டாலும் மனந்தளராமல் தொடர்ந்து செபமாலை செபித்தால் வெற்றி. ஏசுவையே சோதித்தவன் சாத்தான். சாத்தானின் சதி வேலைகளை முறியடித்து மீட்புத்திட்டத்திற்கு உடன் பணியாளாய் இருந்தாள் அன்னை மரியாள் (தொ. நூ 3 : 15) தந்தை பியோவுக்கு செபமாலை சாத்தானை வெல்லும் ஆயுதமாக இருந்தது. ‘‘சாத்தான் விரட்டப்படுவதற்கும் ஒருவர் தன்னை பாவத்திலிருந்து காத்துக் கொள்வதற்கும் செபமாலை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம்‘‘ என்கிறார் பாப்பு 11ம் பயஸ். ஆகவே செபமாலை செபிக்கும் ஒருவர் சாத்தானைக் குறித்தோ தீய சக்திகளைக் குறித்தோ அஞ்சத் தேவையில்லை..செபமாலை என்னும் ஆயுதம் சாத்தானை ஓட ஓட விரட்டுகின்ற ஆயுதம். மறவாமல் கையிலேந்தி செபமாலை சொல்லுங்கள். சாத்தானை வெல்லுங்கள்.

3. இயேசுவின் பிரசன்னத்தில் நிலைநிறுத்தும் செபமாலை

                செபமாலை ஆன்மீகத்தில் ஒருவர் பாவத்திலிருந்து விடுபடுகின்ற போதும் சாத்தானை வெல்லுகின்ற ஆன்மீக ஆற்றல் பெருகுகின்றபோதும் அவர் இயேசுவின் பிரசன்னத்திற்குள் நிலைப்பெறுகிறார். செபமாலை செபிக்கும் ஒருவர் அன்னை மரியாவின் அடைக்கலத்திலே வாழ்கிறார். அவரது வழிகாட்டுதலில் வாழ்கிறார். இயேசுவை கருவில் சுமந்த தாய் மரியா வோடு நாம் இருக்கும்போது இயேசுவின் பிரசன்னத்தில் நாம் இருக்கிறோம். ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்...’’ (யோவா 2 : 5) என்ற அன்னையின் சொல்லைக் கேட்டு நடக்கும்பொழுது நாம் இயேசுவின் வார்த்தைகளை செயல்படுத்துவோம். இயேசுவின் பிரசன்னம் நம்மை நிரப்பும். அவருக்கும் நமக்கும் உள்ள பிiணைப்பு உறுதியாகும். ‘‘நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்‘‘ (யோவான் 15 : 7 ) என்ற இயேசுவின் வாக்குறுதி நம் வாழ்வில் நடந்தேறும். நாம் அவரது பிரசன்னத்தில் நிலைபெறுவோம். ஜெபமாலை ஜெபிக்கும்போது இயேசுவின் பிரசன்னம் நம்மோடு.

 4. நலம் தரும் செபமாலை

                இறைப்பிரசன்னத்தில் நிலைபெறும் ஒருவர் செபமாலை பக்தியில் ஆழமான ஆன்மீகத்தைக் காண்பார். தந்தை பியோ இறைபிரசன்னத்தில் ஆழ்ந்திருந்ததனால் ஆன்ம நலம் பெற்ற புனிதரானார். ஆன்மா எல்லா வித கறைகளிலிருந்து விடுபடுகிற பொழுது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆன்மா அழுக்காகி சாத்தானுக்கு அடிமையாகிப் போனால் உலகமே தன்னைப் புகழ வேண்டும் என எதிர்பார்க்கும். கடவுள் பயம் இல்லாமல் அவரையும் அவரது செயல்களையும் எதிர்க்கும். பண்பும், பணிவும், தாழ்ச்சியும் போய் தற்புகழ்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கும். தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்கும்போது ஆன்மா, மனம், உடல் அனைத்தும் நலம்பெறும். பிறரை குணமாக்கும் ஆற்றலையும் பெறுவர். ஆம் செபமாலை அனைத்து நலன்களையும் உறுதி செய்யும் அற்புத செபம்.

 5. அமைதியை விதைக்கும் செபமாலை

                உலக அமைதிக்காக தினமும் செபமாலை செபிக்கும்படி அன்னை மரியா பாத்திமாவில் ஆடு மேய்க்கும் குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார். அமைதியின் அரசர் இயேசுவின் தாய் அந்த அரசரின் பிரதிநிதியாக உலகம் சமாதானத்தை பெற வேண்டுமென ஆசிக்கிறார். உள்ளத்திலும் இல்லத்திலும் உலகத்திலும் உண்மையான அமைதி ஏற்பட வேண்டுமென்றால் நம்பிக்கையோடு செபமாலை செபித்தால் போதும். நிறை அமைதி நம்மில் குடிகொள்ளும். கேட்கின்றபோது பெற்றுக் கொள்கிறோம் என்ற மனநிலையோடு செபித்தல் வேண்டும் ‘‘செபமாலை சொல்வதற்கு வெட்கப்படாதீர்கள். ஏனென்றால் இது குடும்பத்தில் உள்ளவர்களிடையே குடும்ப பிணைப்பை மீண்டும் மீண்டும்  தூண்டி பலப்படுத்துகிறது’’ என்கிறார் புனித 2ம் ஜாண் பால். அருள் நிறை மரியே என்ற வாழ்த்து அமைதியை கொணர்ந்த வாழ்த்து. மாலைதோறும் செபமாலை சொல்லும் குடும்பம் எவ்வளவு அழகான குடும்பம் என்கிறார் புனித 2ம் ஜாண்பால். அமைதியை ஏற்படுத்த அழிவு ஆயுதங்களை ஏந்தி போராடுகிறார்கள். பலன் இரத்தம் சிந்தல், காயப்பட்ட உலகம், உயிர் சேதம், பொருள்சேதம் போன்ற அழிவுதான் முடிவாகிறது. அமைதியல்ல. ஒருவர் அமைதி பெற மற்றொருவரை பலியாக்குவது அமைதியாகாது. உலகில் ஒவ்வொருவரும் செபமாலை என்னும் ஆயுதத்தை ஏந்தினால் உலகமே அன்பு, மகிழ்ச்சி, அமைதி என்ற சிங்கார வனத்தைக் காண முடியும்.
                ‘‘உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய்  இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள்.’’ (1 பேது 1 :  15) என்ற புனித பேதுருவின் அழைப்புக்கு ஏற்ப நாம் மாசற்ற தூய வாழ்வு வாழ செபமாலை கைகொடுக்கும் ஊன்றுகோலாகும். தூயவரை பெற்றெடுக்க அமல உற்பவியான கன்னிமரியா எவ்வளவு புனிதத்தின் சிகரமாக உள்ளார். தூயவராம் இயேசுவின் பிறப்பும் எவ்வளவு தூய்மையான புனித நிகழ்வு!.. இவ்விரு விழாக்களையும் வரும் திசம்பர் மாதத்திலே கொண்டாடப்  போகிறோம். நமது வாழ்வு எவ்வளவு தூய்மையாக உள்ளதோ அவ்வளவு மகிழ்ச்சியும் ஆசியும் நிறைந்த விழாக்களாக அவைகள் அமையும்.
                செபமாலையை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். அன்னைக்கு மிகவும் நன்றி நிறைந்தவர்களாய் இருங்கள். காரணம் இயேசுவை நமக்குக் கொடுத்தவர் அவர்தான். என்கிறார் தந்தை பியோ. செபமாலையை நன்றாக செபிக்கும்போது அது இயேசுவுக்கும் மரியாவுக்கும் அதிகமான மகிமையைக் கொடுக்கிறது. அது செபங்களையும் விட மதிப்பு மிகுந்தது என்கிறார் புனித லூயிஸ் டி மான்ஃபோர்ட். செபமாலை முழுமையான நற்செய்தியின் சுருக்கம் என்கிறார் பாப்பு 12ம் பயஸ்.
                ஆகவே செபமாலை நம்மை புனித வாழ்வுக்கு இட்டுச் செல்லும் சிறந்த செபமாக இருக்கிறது. இயேசுவை அடைய நம்மை தூய்மையாக்கி பலப்படுத்தும் மாலைதான் செபமாலை. அது கழுத்தில் அணிந்து கொள்ளும் மாலை அல்ல. கரங்களில் ஏந்தி அருள் நிறைமரியை வாழ்த்தி சாற்றும் செபமாலை. புனிதத்தின் சிகரமாம் புனித அன்னை மரியே, புனித வாழ்வை நோக்கி எம்மை நடத்தும் அம்மா.
                                உங்கள் அனைவருக்கும் புனிதமான கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும் ஆசீரும்!.
                 இயேசுவே, உமக்கு புகழ் ! ! !

-அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS