அழகு குறிப்பு (முகம் ஒளி பெற)


போனேன், போகிறேன், போவேன் என்று முக்காலத்தையும் உணர்த்தினார் ஒரு மங்கை. எங்கே? என்றேன். Beauty parlour என்றார்.
ஏன் என்றேன்.
முகத்தில் வயதை மறைக்க என்றார்.
நானும் தேடினேன் முகத்தை விவிலியத்தில்

நானோ நேர்மையில் நிலைத்து
உமது முகம் காண்பேன்
விழித்தெழும்போது  உமது முகம் கண்டு
நிறைவு பெறுவேன்

ஆண்டவர் எளியோர்க்குத் தன் முகத்தை
மறைக்கவுமில்லை
வறியோருக்குத் தம் முகத்தை
திருப்பவுமில்லை.

ஆண்டவரின் முகம் தீமை செய்வோருக்கு
எதிராக இருக்கிறது.
ஆண்டவரின் முகம் பாவிகளை நோக்கி
இரக்கப் பார்வை பார்க்கிறது.

ஆண்டவரின் வார்த்ததையைக் கேட்டு அதன்படி நடக்காதவர்கள்
கண்ணாடியில் தம் முகம் பார்த்து பின்பு தான் எவ்வாறு இருந்தார்
என்பதை மறந்து விடும் ஒரு சாதாரண மனிதருக்கு ஒப்பாவார்.
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசச் செய்யும்.

இந்த முகம் இறைவனுக்குச் சொந்தம்
என்பதைக் கண்டு கொள்ளச் செய்யும்.
தந்தை பியோவும் இதை உணர்ந்து வாழ்ந்ததால்தான்

இறந்தபின்னும் அவர் முகத்தில் ஒளி.
அவர் முகம் அழியவில்லை.

ஆகவே பியோவின் வழியில் வாழ்ந்து
நமது முகத்தை  ஒளியாக்கவோம்.

எப்படி?
முகத்துக்கு  Beauty Tips  கொடுத்தேனா?

ன்னை மரியா..
சையுடன் பெற்ற மகன்
றப்பின் தருவாயில்...
ட்டியால் துளைக்கப்பட
றைந்து நிற்கின்றாள்
ரார் முகம் எங்கே?
ங்கே போயினரோ?
க்கத்துடனே அவள்
யோ மகனே என்கிறாள்
ன்று சொல்கிறோம்
டுகிறோம் உம் முகம் நோக்கி
தந்தை பியோ வழியாக....

அக்ஸிலியா ஜோசப் லியோன், தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக