எனது விசுவாச அனுபவம்


ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதை கட்டுவோரின்உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள்விழித்திருப்பதும் வீணாகும்.   (திரு.   பா.   127- 1) 
என் பெயர் குமார்.   நான் வெளிநாட்டில் வேலைப் பார்க்கிறேன்.   என்சொந்த ஊர் தஞ்சைக்கு அருகில் வல்லம் என்னும் ஊர்.   நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் பொழுது பல கஷ்டமும், பிரச்சினைகளும் இருந்தது.  லோன் கிடைக்காமல் வீடும் கட்ட முடியாமல் ஒரு வருடமாக இருந்தது.  எங்களுக்கு தெரிந்த அருட்சகோதரியிடம் கஷ்டத்தை எடுத்துக் கூறினேன்.  அவர்கள் மேற்கூறிய (திரு.   பா.   127 - 1)  என்கிற வசனத்தைத் தினமும் சொல்லி ஜெபி என்றார்கள்.   நானும் ஜெபித்தேன்.   பிறகு நான் இருக்கும் நாட்டில் என்அம்மாச்சி உள்ளார்கள்.   அவர்கள் பியோ குரல் இதழைக் கொடுத்துப் படி,விசுவாசத்தோடு ஜெபம் செய், ஜெபமாலை சொல் என்றார்கள்.   அவ்வாறே ஜெபித்து வந்தேன்.   நான் என் அம்மாச்சியிடம் என் பிரச்சினைகளும் வீடும்நல்லபடியாக கட்டி முடித்தால் பியோ குரல் இதழில் சாட்சி எழுதுகிறேன்.  பியோ இல்லம் என்ற பெயரும் வைப்பேன் என்றேன்.   நான் இறை வசனத்திலும்அதிக நம்பிக்கையோடும், ஜெபமாலையும் ஒப்புக் கொடுப்பேன்.   எனக்குலோன் கிடைத்தது.   நல்லபடியாக வீடு கட்டி முடித்தேன்.   பிரச்சினைகளும் நீங்கிற்று.   என் விசுவாச ஜெபம் எனக்கு பலன் அளித்தது.   இயேசுவுக்கே புகழ்!மரியே வாழ்க! புனித தந்தை பியோவுக்கு நன்றி நன்றி.  

இப்படிக்கு,

குமார், சிங்கப்பூர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக