எனது விசுவாச அனுபவம்

அன்பும் பாசமும் நிறைந்த அன்பு இறை யேசுவே,

உமக்காக வாழ்ந்து உமக்காகவே உயிர்விட்ட புனிர்தர்களை அதிகமாக நேசிக்கின்றீர். எங்கள் குடும்பத்திற்குப் புனித பியோ செய்த புதுமைகளை இங்கு நன்றியுடன் வரைகின்றேன்.

எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் முதல் குழந்தை லீனாபெர்பின், 2வது குழந்தை நிஷாபிரபா, 3வது குழந்தை அபிஷாபெர்பினா. முதல் மகள் லீனாவுக்கு 7.1.1999 இல் திருமணம் நடந்தது. 3.11.2000இல் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது மகள் நிஷாபிரபாவிற்கு 21.7.2004இல் திருமணம் நடந்தது. 5வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. மனவேதனையும் கவலையும் எல்லோருக்கும் இருந்தது. புதுமைகள் நடந்து கொண்டு இருக்கும் தேவாலயங்களிலும் நேர்ச்சைகள் நேர்ந்து கொண்டோம். மகள் நிஷா. கணவர் எட்வர்ட்கிபி இருவரும் 25.1.2009இல் வேளாங்கண்ணி தேவாலயத்திற்குச் சென்று இருந்தார்கள். அன்னை வேளை நகரில் தான் புதுமை நடந்தது. தீடீர் என மகள் நிஷா வின் உடல நிலை சரி இல்லாமல் போனது. மருமகன் கிபி ஆலய வளாகத்திலே கன்னியர்களால் நடத்தப்படும்

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடலை பரிசோதனை செய்தசிஸ்டர் எலுஷா காயச்ச்லுககுரிய மருந்தைக் கொடுத்தார்கள். 5ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத விஷயத்தை சிஸ்டர் இடம் சொன்னார்கள். உடனே தந்தை பியோவின் அற்புதங்களை எடுத்துச் சொன்னது

மட்டுமல்லாமல் ஐந்து திருக்காயங்களைக் கொண்ட போட்டோ அவர் ஜெபங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டு தினம் தினம் ஜெபத்தைப் பக்தியுடன் செய்யவும் அடுத்த ஆண்டு வேளை நகருக்கு வரும்போது குழந்தையுடன் ஆலயத்திற்கு வருவீர்கள் என்று நம்பிக்கையுடன் மகளிடம்
கூறினார்கள். அத்துடன் மார்ச் மாதம் நல்ல செய்தி எனக்குத் தெரிவிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லி அனுப்பினார்கள். இறை யேசுவின் அருளாலும் மாதா பரிந்துரையாலும் புனித பியோவின் ஆசிராலும் பிப்ரவரி மாதமே சிஷ்டர் எலுசா அன்னைக்கு சந்தோஷ செய்தி தெரிவித்தோம். 4.11.2009இல் பியோ தந்தையின் முகசாயலில் அழகான ஆண் குழந்தையைக் கடவுள் கொடுத்தார்.

எங்கள் குடும்பம் அனைத்தும் இறையேசுவிற்கும் அன்னை மரியாளுக்கும் தந்தை பியோவிற்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

C. சூசைநாயகம் டென்சலின்
குளச்சல். கன்னியாகுமரி மாவட்டம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக