அசிசி புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டு - 2026
இத்தாலி நாட்டில் அசிசி நகரை சேர்ந்த பிரான்சிஸ், செல்வந்த வாழ்வைத் துறந்து, ஏழ்மையையும் எளிமையையும் தழுவி இறைப்பணி செய்தவர்.
அனைத்து உயிர்களையும் இயற்கையையும் நேசித்த இவர், 'பிரான்சிஸ்கன்' சபையைத் தோற்றுவித்தார்.
அமைதியின் தூதுவராக வாழ்ந்து, இயேசுவின் ஐந்து திருக்காயங்களை உடலில் தாங்கும் பேறு பெற்றவர்.
இவர் 1226-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறைவனடி சேர்ந்தார். அதன் 800-வது ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை லியோ XIV அவர்கள் 2026 ஜனவரி 10 முதல் 2027 ஜனவரி 10 வரை ஓராண்டு காலத்தை "புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டாக" அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகெங்கும் உள்ள பிரான்சிஸ்கன் சபையினருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும். ஆகவே உலகெங்கும் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஆலயங்களுக்கு சென்று இறை வேண்டுதல் செய்பவர்கள் பரிபூரண பலன் பெற்றுக் கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .
சங்கமம் - பெருகமணி





