அசிசி புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டு
புனித பிரான்சிஸ் 1226-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறைவனடி சேர்ந்தார். அதன் 800-வது ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை லியோ XIV அவர்கள் 2026 ஜனவரி 10 முதல் 2027 ஜனவரி 10 வரை ஓராண்டு காலத்தை "புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டாக" அறிவித்துள்ளார்.
சிறப்பம்சங்கள்
இந்த ஆண்டு உலகெங்கும் உள்ள பிரான்சிஸ்கன் சபையினருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும்.
- திருவுடல் தரிசனம்: இத்தாலியின் அசிசி நகரில், புனிதரின் திருவுடல் (Mortal Remains) 800 ஆண்டுகளில் முதன்முறையாக 2026 பிப்ரவரி 22 முதல் மார்ச் 22 வரை பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
- இறைவனடி சேர்ந்த தினம் (Transitus): புனிதர் மறைந்த 800-வது ஆண்டு நினைவு தினம் 2026 அக்டோபர் 3-4 தேதிகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
- மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதம்: இந்த ஜூபிலி ஆண்டில் உலகெங்கும் இருக்கின்ற பிரான்சிஸ்கன் ஆலயங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறப்பு "முழுப் பலன்" (Plenary Indulgence) வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பிரான்சிஸ்கன் கப்புசின் சபையினர் நடத்தும் ஆலயங்களையும் அசிசி புனித பிரான்சிஸ் பெயர் கொண்ட ஆலயங்களையும் தரிசித்து "முழு பலன்" ஆசீர் பெற்றுக் கொள்ளலாம்.
- திருச்சி: தில்லை நகர் 10வது கிராஸில் உள்ள பதோனி இல்ல சிற்றாலயம் மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப சாலையில் உள்ள அமலாசிரமம் ஆலயம். மாத்தூர், அசிசி புனித பிரான்சிஸ் திருத்தலம்.





