அசிசி புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டு

அசிசி புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டு - 2026

 இத்தாலி நாட்டில்  அசிசி நகரை சேர்ந்த பிரான்சிஸ், செல்வந்த வாழ்வைத் துறந்து, ஏழ்மையையும் எளிமையையும் தழுவி இறைப்பணி செய்தவர்.

​அனைத்து உயிர்களையும் இயற்கையையும் நேசித்த இவர், 'பிரான்சிஸ்கன்' சபையைத் தோற்றுவித்தார்.

​அமைதியின் தூதுவராக வாழ்ந்து, இயேசுவின் ஐந்து திருக்காயங்களை உடலில் தாங்கும் பேறு பெற்றவர்.

இவர் 1226-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறைவனடி சேர்ந்தார். அதன் 800-வது ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை லியோ XIV அவர்கள் 2026 ஜனவரி 10 முதல் 2027 ஜனவரி 10 வரை ஓராண்டு காலத்தை "புனித பிரான்சிஸ் ஜூபிலி ஆண்டாக" அறிவித்துள்ளார்.

​இந்த ஆண்டு உலகெங்கும் உள்ள பிரான்சிஸ்கன் சபையினருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும். ஆகவே உலகெங்கும் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஆலயங்களுக்கு சென்று  இறை வேண்டுதல் செய்பவர்கள் பரிபூரண பலன் பெற்றுக் கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் . 

சங்கமம் - பெருகமணி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS