இரண்டு சிறுவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நல்ல வசதியான அவருடைய பாட்டி வீட்டிற்கு சென்றார்கள். பேரன்களை பார்த்த பாட்டி எந்த சந்தோஷப்பட்டார். மொட்டையாய் தின்பண்டங்களை செய்து கொடுத்தார். கதைகள் எல்லாம் சொன்னார். இரவு படுக்கப் போகும் போது அவர்களுக்கு படுக்கை அறையை தயார் செய்து கொடுத்தார். அப்பொழுது அவர்களிடத்தில் தூங்க போறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஜெபம் பண்ணனும் என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார். பாட்டி அங்கேயே ஜெபித்துக் கொண்டிருந்தார். பேரன்களை படுக்க வைத்து தூங்க வைப்பதற்காக வந்தார். இந்த இரண்டு சிறுவர்களும் அங்கே ஜெபித்தார்கள். முதலில் பெரியவன் ஜெபித்தான். அடுத்தது அண்ணன் போலவே தம்பியும் அப்படியே கிடைத்தான். இறுதியாக "கடவுளே எனக்கு ஒரு நல்ல ஸ்கூட்டரும் விளையாட்டுப் பொருள்களும் வாங்கி கொடுங்க" என்று சத்தமாக கத்தி ஜெபித்தான். அதற்கு அவனுடைய அண்ணன் சொன்னான். ஏன்டா இப்படி கத்துற கடவுளுக்கு என்ன காது கேட்காதா? என்று கேட்டான். தம்பி சொன்னா "கடவுளுக்கு காது கேட்கும் ஆனா பாட்டிக்கு காது கேட்காதே" அப்படின்னான்
தந்தை பியோ "ஜெபம் நம்மிடம் உள்ள சிறந்த ஆயுதம்; அது கடவுளின் இதயத்தின் திறவுகோல். நீங்கள் இயேசுவிடம் உங்கள் உதடுகளால் மட்டுமல்ல, உங்கள் இதயத்தாலும் பேச வேண்டும்."
"பணிவும், வாழ்க்கையின் தூய்மையும் நம்மை கடவுளிடம் உயர்த்தும் சிறகுகள். நல்ல நோக்கத்துடனும், நல்லெண்ணத்துடனும் செய்யப்படும் ஜெபங்கள் அனைத்தும் நல்லவை."
"ஜெபியுங்கள் நம்புங்கள் கவலைப்படாதீர்கள்" "கவலை பயனற்றது"
பத்ரே பியோ இயேசுவிடம் செய்த பிரார்த்தனை
"உமது நன்மைகளையும், உமது துன்பங்களையும், உமது பரிகாரத்தையும், உமது கண்ணீரையும் என் முழு பலத்தோடு பற்றிக் கொள்கிறேன், இதனால் இரட்சிப்பின் பணியில் நான் உங்களுடன் ஒத்துழைக்க முடியும். உமது வேதனைக்கும், உமது இரத்த வியர்வைக்கும், உமது மரணத்திற்கும் ஒரே காரணமான பாவத்திலிருந்து தப்பிக்க எனக்கு பலம் கொடுங்கள்."
நற்செய்தி: லுக்கா 11: 1-13
# இயேசு ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறார் .
# விடாமுயற்சியுடன் ஜெபிக்க சொல்லுகிறார்.
1. இயேசுவே ஜெபிக்கிறார். இயேசு கடவுளின் மகன் பாவமே இல்லாதவர் தந்தையிடத்திலே ஜெபிக்கிறார். மிகப்பெரிய முன்மாதிரி.
2. சீடர்கள் ஜெபிக்க கற்றுத் தரும்படி கேட்கிறார்கள்.
3. இயேசு அருமையான ஒரு ஜெபத்தை கற்றுக் கொடுக்கிறார்.
# விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே...
# மிக முக்கியமான ஜெபம். இயேசுவே கற்றுக் கொடுத்த ஜெபம்.
# மீட்டரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம் இன்று திருப்படியிலே அனைவரும் நம்பிக்கையோடு ஜெபிப்பதற்கு திருச்சபை அழைக்கிறது. மிக முக்கியமான ஜெபம். உணர்ந்து ஜெபிக்க வேண்டும் நம்பிக்கையோடு ஜெபிக்க வேண்டும்.
4. மூன்று விதமான ஜெபம் ஜெபமாக அமைந்திருக்கிறது.
1) கடவுளை நோக்கிய ஜெபம்
2) தன்னை நோக்கிய ஜெபம்
3) பிறரை நோக்கிய ஜெபம்
# ஒரு முழுமையான ஜெபம் இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்.
5. நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் அந்த நண்பனைப் போல ஜெபிக்க வேண்டும்.
# ஆபிரகாமை போல ஜெபிக்க வேண்டும். (தொ. நூல்18: 20-32)
# கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.......
தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”
நம்மை ஆய்வுக்கு உட்படுத்துவோம்:
1. நாம் ஜெபிக்கிறோமா?
2. நம் ஜெபம் கேட்கப்படுகிறதா?
எபிரேயர் 4:16
எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
மாற்கு 11:24
ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
மாற்கு 11:25
நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்.