புனித தந்தை பியோ திருவிழாவை முன்னிட்டு நவநாள் ஜெபம்

புனித தந்தை பியோ திருவிழாவை முன்னிட்டு நவநாள் ஜெபம் 

முதல் நாள் :

1. அமைதியின் உருவாம் புனித தந்தை பியோவே!
போர்களும் சண்டைகளும், குழப்பங்களும் நிறைந்த இவ்வுலகில் அமைதியும் சமத்துவமும், அன்பும் மேலோங்கி வளர இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாட வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 

ஐந்து காய வரம் பெற்ற முதல் குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே. தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே. இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே. இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றட்டுகளை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும் ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்.
அகிலம் போற்றும் அற்ப்புத தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியை கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். (1 பர, 1 அருள், 1 திரி )

இரண்டாம் நாள் 

2. மக்கள் புனிதர் தந்தை பியோவே!
உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் சுயநலம் தவிர்த்து மக்கள் நலம் பேணி, நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாட வேண்டுகிறோம். (1விண். 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்..........

மூன்றாம் நாள் 

3. அற்புத புனித தந்தை பியோவே!
நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வறட்சி ஆகியவை நீங்கி மக்கள் வளமோடும், நலமோடும்,
நிறைவோடும் வாழத் தேவையான வரத்தை இறைமகன் இயேசுவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.......

நான்காம் நாள் :

4. அற்புத குணமளிக்கும் தந்தை பியோவே!
தீராத நோய்களினால் வேதனைப்படும் உம் மக்களை கண்ணோக்கிப்பாரும். அவர்கள் வேண்டுதல்களுக்கு மனமிரங்கி நல்ல உடல் நலத்தைத் தர இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும்.('விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.......

ஐந்தாம் நாள் :

5.பிசாசுகளை நடுநடுங்கச் செய்யும் புனித தந்தை பியோவே!
மக்களை வாட்டி வதைக்கும் தீய சக்திகளை விரட்டி, அவர்களுக்கு மன நிம்மதியையும். ஆறுதலையையும், மகிழ்ச்சியையும் வழங்கிட இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும். (1விண், 1அருள்,1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

ஆறாம் நாள் 

6. புனித தந்தை பியோவே!
எம் சமுதாயத்தில் வாழும் இளைஞர்கள், தீய வாழ்க்கையையும், சுயநலத்தையும் விட்டுவிட்டு நல்வழிக்கு திரும்பவும், வாழ்க்கையில் முன்னேறவும், தியாக தீபங்களாக மாறவும் வரமருள் இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.....

ஏழாம் நாள் :

7. இறை ஞானம் நிறைந்த தந்தை பியோவே!
எங்கள் குழந்தைகள் ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும், தெய்வ பயத்திலும், கீழ்ப்படிதலிலும் சிறந்து விளங்கி திருச்சபைக்கும்,நாட்டிற்கும் எதிர்காலத் தூண்களாக விளங்க இறைமகன் இயேசுவிடம் தேவையான அருளைப் பெற்றுத் தர உம்மை மன்றாடுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.....

எட்டாம் நாள் :

8. தொழிலாளர்களின் ஆறுதலான தந்தை பியோவே!
எம் நாட்டுத் தொழிலாளர்கள் நிறைய வேலை வாய்ப்பைப் பெற்று, நீதியான ஊதியம் பெற்று, குடும்ப வருமானத்தையும் நாட்டு வருமானத்தையும், பெருக்கி வளமான வாழ்வை அமைத்திடத் தேவையான அருளை இறைமகன் இயேசுவிடம் பெற்றுத்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். (விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

ஒன்பதாம் நாள் :

9. நல்லுறவின் புனித தந்தை பியோவே!
எம் நாட்டு மக்கள் வேற்றுமைகளை அகற்றி ஒற்றுமையை வளர்க்கவும் ஜாதி, மத பேதமின்றி ஒவ்வொருவரையும் சகோதர, சகோதரிகளாக மதித்து ஏற்று அன்பு செய்து சகிப்புத் தன்மையோடு வாழத் தேவையான அருளைப் பெற்றுத் தர இறைமகன் இயேசுவிடம் மன்றாட உம்மை வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

பத்தாம் நாள் 

10. இயேசுவின் துன்பத்தில் பங்கேற்ற புனித தந்தை பியோவே!
உலகமெங்கும் ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை ஏற்று இரத்தம் சிந்தி உயிர் துறக்கின்ற கிறித்துவர்கள் மன வலிமையோடும் முழு விசுவாசத்தோடும் இயேசுவுக்கு சாட்சி பகரவும், கடவுளின் மாபெரும் இரக்கத்தையும் கருணையையும் அன்பையும் பாதுகாப்பையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ள தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் மன்றாட உம்மை வேண்டுகிறோம். (விண், 1.அருள், 1திரி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக