புனித தந்தை பியோ தொடக்கவுரை


புனித தந்தை பியோ தொடக்கவுரை
 
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
 
இதயங்களை மேலே எழுப்புங்கள்.
 
நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

ஆண்டவரே, தூயவரான தந்தையே , என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா , எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது, மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும், எங்கள் கடமையும் மீப்புக்குரிய செயலும் ஆகும் .

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மீது பியத்ரெல்சினா, புனித தந்தை பியோவின் இதயம் மிகுந்த அன்பினால் பற்றி எரிந்து, கிறிஸ்துவின் துன்பங்களில் பரிவிரக்கத்துடன் பங்கேற்று  அவர் சிலுவை மரணம் வரை அவரைப் பின்தொடர்ந்தார். இவ்வாறு அன்பினால் அறிவுறுத்தப்பட்ட அவர், உடலாலும் ஆன்மாவாலும் பாதிக்கப்பட்ட அனைத்து துன்புறும் சகோதர சகோதரிகளுக்கும் நம் கடவுளின் எல்லையற்ற கருணையைக் வெளிப்படுத்தினார் .

எனவே , வனத்தூதர்கள்  புனிதர்கள் அனைவரோடும் இணைந்து நாங்களும் புகழ்ச்சிப் பண் இசைத்து முடிவின்றி ஆர்ப்பரிப்பதாவது.

தூயவர்... தூயவர்... தூயவர்... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக