மாதா பாடல்கள்

1.
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்  2          
தாய் என்று உன்னைத் தான்2 பிள்ளைக்குக் காட்டினேன் மாதா 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமோ– 2                          மேரி உன் ஜோதி கண்டால் விதிமாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2                     கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா 

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2                  
 அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா

#2.
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2)

1. பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின் தாயாரே
பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2)
இப்போதும் நீர் மன்றாடும் எப்போதும் நீர் மன்றாடும் (2)
தீமைகள் நெருங்குகையிலே
பரமனை மன்றாடும்
 மரணம் வருகையிலே எம்மைத் தாங்குமம்மா

2. அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே
மகனும் வாழியவே – 3

#3.


என்ன தவம் செய்தாயோ(Enna thavam Seithaayo)
என்ன தவம் செய்தாயோ மரியே என்ன தவம் செய்தாயோ இம்மான் ஏசு உன்னை அம்மா வென்றழைக்க 
என்ன தவம் செய்தாயோ ....தாயே ....

பெண்களுக்குள் ஆசீர் நிரம்ப பெற்றாய் எம் கண்களுக்கு கருணையை காட்டி விட்டாய்
மங்கலங்கள் பொழிந்தாய் மரியே வாழ்க ....(2)
மண்ணுலகம் எங்கும் உந்தன் புகழ் வாழ்க ....
புகழ் வாழ்க....உந்தன் புகழ் வாழ்க....

என்ன தவம் செய்தாயோ....

மண்ணில் வந்த தேவன் உன்னில் பிறந்தார் அவ்-வின்னோளியின் சுடரின் மணிவிலக்கே
அன்னையென்று உணயே அண்ணல் அவந்தந்தான் (2)
இன்னல் நிறை உலகினில் துணையாக துணையாக நீ வர வேண்டும் ....

என்ன தவம் செய்தாயோ....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக