வெள்ளி விழா நாயகன் அருட்திரு எம். அருள்ராஜ் அவர்களை அனைவரும் வாழ்த்த வந்திருக்கிறோம். அவர் பெயரால் கடவுளுக்கு நன்றி செலுத்த வந்திருக்கிறோம். 25 ஆண்டுகள் குருத்துவ வாழ்விலே நிலைத்திருந்து தொடர்ந்து இயேசுவோடு பயணிக்கிற வாழ்வில் உறுதியாக இருக்கிற அருட்திரு எம் அருள்ராஜ் அவர்களுக்கு உங்கள் அனைவர் பெயராலும் வாழ்த்துக்களை ஜெபங்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
Joke
இது பசு இல்ல குதிரை.
நம்ம வெள்ளி விழா நாயகருக்கு கொம்பு இல்ல ஏன்னா அவர் எளிமையானவர்....
அருமையான திருத்தந்தை பிரான்சிஸ் குருத்துவத்திற்கு
இலக்கணமாக வாழ்ந்து விண்ணகம் சென்ற காலக்கட்டம்.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வத்திக்கானில் சிஸ்ட்டைன் ஆலயத்தில் குலுமியுள்ள கர்தினால்கள் நாளில், அருட்திரு. அருள்ராஜ் அவர்களுக்கு குருத்துவ வெள்ளி விழா. கத்தோலிக்க திருச்சபயில் மிக முக்கியமான தருணங்கள்.
1. குருத்துவத்தை போற்றுவோம்!
குருத்துவம் மகத்துவமானது
குருத்துவம் உன்னதமானது
குருத்துவம் பேரழகு மிக்கது
குருத்துவம் பிரம்மாண்டமானது
குருத்துவம் கம்பீரமானது
குருத்துவம் மேன்மையானது
குருத்துவம் ஈடு இணையற்றது
குருத்துவம் தியாகத்தின் சிகரமானது
குருத்துவம் மீட்பு திட்டத்தின் தொடர்ச்சியானது
குருத்துவத்தின் மகத்துவம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே
குருத்துவத்தின் மகத்துவம்
நம்புகிறவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்.
விளங்காத கத்தோலிக்கர்களுக்கு
அது ஒரு பேரிழப்பு.
லேவியர் 20: 26
எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்.
Sepperated you from People .
Set apart for God.
மலாக்கி 2:7
ஒரு குரு படைகளின் ஆண்டவருடைய தூதர்
இரண்டாம் வத்திக்கான் சங்கம்
"ஒரு குரு மறு கிறிஸ்துவாக இருக்கிறார்"
புனித அன்னை தெரசா
"குருக்களே நீங்கள் மறு கிறிஸ்துவாய் இருக்கிறீர்கள்"
இந்த உலகத்தில் அவர்களை எங்கு பணி செய்ய அழைக்கப்பட்டாலும் எங்களுக்கு குரு வேண்டும் என்று சாதித்து பெற்றுக் கொள்வார்கள்.
புனித அம்புரோஸ்
"இயேசு குருக்களை, அவரது அன்பின் பிரதிநிதிகளாக உருவாக்கினார்."
புனித ஜான் மரிய வியாணி
"குருத்துவம் என்பது இயேசுவின் இருதயத்தின் அன்பு. நீங்கள் ஒரு குருவை காணும்போது, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்." -
புனித அகுஸ்தனார்
"குருவானவர் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது வானதூதர்கள் அவரை சூழ்ந்து நின்று அவருக்கு உதவி செய்கிறார்கள்."
இப்பொழுதும் வான தூதர்கள் இங்கே பலிபீடத்தை சூழ்ந்து இருக்கிறார்கள்.
புனித தந்தை பியோ
"அன்னை மரியாள் கல்வாரி சிலுவை அடியிலே நின்று இயேசுவுக்கு உதவி செய்தது போல நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது பலிபீடத்திற்கு அருகில் நின்று
எனக்கு உதவி செய்கிறார்கள்"
கன்னி மரியா குருக்களுக்கு உதவியாளராக
குருக்களின் அன்னையாக இருக்கிறார்.
புனித இரண்டாம் ஜான் பால்
"உலகம் குருவானவரை பார்க்கிற பொழுது அது இயேசுவைப் பார்க்கிறது! கிறிஸ்துவை யாரும் காண முடியாது; ஆனால் ஒவ்வொருவரும் குருவானவரை பார்க்கிறார்கள், அவர் மூலமாக அவர்கள் ஆண்டவரின் தரிசனத்தைக் காண விரும்புகிறார்கள்! ஆண்டவரின் மகத்துவம் மகத்தானது! குருவானவரின் கம்பீரமும் கண்ணியமும் அளப்பரியது!"
அசிசி புனித பிரான்சிஸ்
"இயேசுவை தன் திருவயிற்றில் சுமந்த கன்னி மரியாள் மிகவும் மதிக்கப்படுகிறாள். இயேசுவின் தலையை தொடுவதற்கு கூட புனித திருமுழுக்கு யோவான் நடுங்கினார். மிக சில நாட்களே இயேசு படுத்திருந்த கல்லறை மிகவும் புனிதமாக மதிக்கப்படுகிறது. அந்த இயேசுவை தனது இதயத்திலும் நாவிலும் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் வழங்குகின்ற நபர் எவ்வளவு புனிதமானவர், நீதியுள்ளவர், தகுதியானவர். இம்மையில் அவருக்கு இறப்பில்லை மறுமையில் வெற்றியின் மகிமை அடைவார். அவரைப் பார்ப்பதற்கு
வான தூதர்கள் கூட ஆவலாக இருக்கிறார்கள்."
உரோமையர் 3:22
இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.
ஆக, வானமும் பூமியும் குருவானவரின் முன்பாக பணிந்து நிற்கிறது. ஏனென்றால் அவர் கிறிஸ்துவாக இருக்கிறார்
குருத்துவத்தை போற்றுவோம்
குருத்துவம் அது மகத்துவம்
ஒரே மகனை அருட்திரு. அருள்ராஜ் அவர்களை தற்போது விண்ணகவாசிகளாக இருக்கிற திரு. மதலை முத்து
திருமதி. மாசில்லா அவர்கள் குருத்துவதற்காக கடவுளுக்கு காணிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்பொழுது விண்ணகத்திலிருந்து தன் மகனுக்காக மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். குருத்துவத்தை போற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கடவுள் கண்டிப்பாக நிலைவாழ்வை வழங்கியிருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.
பாடல்
எனதான்மா இறைவனையே ஏற்றியே மகிழ்கின்றது
மீட்பராம் கடவுளையே
என் மனம் புகழ்கின்றது
என்றென்றும் உள்ளது அவர் இரக்கம்
இறைவனின் வல்லமையே இறைவனின் வல்லமையே
2. குருத்துவத்திற்காக நன்றி கூறுவோம் (Gratitude நன்றியுணர்வு)
அதற்காக தான் இன்றைய
விழா கொண்ட்டாட்டம்.
நன்றியோடு உள்ளகங்களை இறைவனிடம் எழுப்புவோம்.
லூக்கா 1:47
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
திருப்பாடல்கள் 138:1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
Fr. Arul Raj
As a priest I am happy and grateful to God for His Grace to share in His ministerial Priesthood.
"ஒரு குருவானவராக அவருடைய பணிக் குருத்துவத்தில் பங்குகொள்ள கடவுள் வழங்கிய அருளுக்காக நான் மகிழ்ச்சியாகவும் நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன்."
Fr. Arul raj குருத்துவ அழைப்பிலே மகிந்திருக்கிரார்.
பெற்ற குருத்துவ வாழ்வில் மனநிறைவோடு உள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.
"கிருஸ்துவில் பணிபுரிய" விருது வாக்கு :
கிறிஸ்துவில் கிறிஸ்துவாகவே பணிபுரிய
இயேசுவின் வாழ்க்கையிலும் போதனையிலும் ஆணித்தரமாக விளங்கிய " தொண்டு ஏற்பதற்கல்ல; தொண்டு புரியவும் பலருடைய மீட்புக்கு ஈடாக தன் உயிரை கொடுக்கவோமே வந்தார்" (மாற்கு 10:45)
கிறிஸ்துவில் இணைந்து கிறிஸ்துவாகவே தொண்டு புரிய உறுதி பூண்டார்.
கிறிஸ்துவ சீடத்துவத்தின் ஒரு அடிப்படை அம்சம் இதுதான்
உரோமையில் தத்துவ இயலில் முதுகலை பட்டப் படிப்பும்
பெல்ஜியம் லூவன் பல்கலை கழகத்தில் Mfld மற்றும் phD பட்டபடிப்பும் முடித்தார்.
25 ஆண்டு கால குருத்துவ வாழ்வில்
3 வருடங்கள் கோத்தகிரி புனித வளனார் மெய்யியல் கல்லூரி அதிபராகவும் 6 ஆண்டுகள் கல்லூரி கல்வி இயக்குநராகவும் பணியாற்றினார். 15 ஆண்டுகளாக குரு மாணவர்களுக்கு மெய்யியல் கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பங்கு பணியாளராக 4 ஆண்டுகள். கடந்த 3 ஆண்டுகள் கள்ளக்குறிச்சி தியாக துருகத்திலும் தற்போது நாமக்கல் சேந்தமங்கலம் பங்கில் பணிபுரிகிறார் சிறப்பாக.
ஜூபிலி கொண்டாட்டம்
ஜூபிலிக்குள் ஜூபிளி
ரெட்டிப்பான கொண்டாட்டம்
Jubilee year of 2025
"எதிர்நோக்கின் திருப்பயணிகள்"
3. குருத்துவதற்காக ஜெபிப்போம்
குறித்து அழைப்பிற்காக ஜெபிப்போம்
குருக்களுக்காக ஜெபிப்போம்
குருத்துவ அழைத்தல் பெருகவெண்டுமென வேண்டுவோம்
திருச்சபைக்கு குருக்களை கொடுங்கள் இறைமக்களே.
இயேசுவின் இறையாட்சி பணி இம்மண்ணுலகில் தொடர்ந்து நடைபெற உங்கள் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை அனுப்புங்கள்.
திருத்தந்தை பிரான்சிசு
"தாராள மனப்பான்மையோடும், அறியப்படாத தியாகங்களோடும் தங்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்கும் அனைத்து நல்ல மற்றும் விசுவாசமான குருக்களுக்காகவும் ஜெபிப்போம்."
Joke
என்னை எவன் புடிச்சு தல்லிவுட்டான்னு தெரியுனும்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக