Jokes
1. ஒரு குளம்...
ஒரு செல்வந்தர் ஒரு போட்டி வச்சார்....
2. ஹிட்லர் .... கப்பலின் மேலைத்தளத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு இங்கிலீஷ் கேப்டன் அவர பார்த்து கேட்டார், " நீங்க எப்பவும் எல்லாவற்றயும் வெற்றி பெற்றவராகவே இருக்கிறீங்களே,
அதன் ரகசியம் என்னன்னு கேட்டாரு".....
1959 அகஸ்டு இத்தாலி
எப்பொழுதும் தாய் மரியாவை நாடியவராக இருந்த புனித தந்தை பியோ
🌹யோவான் 19:26 - 27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
அன்பு சீடரை நோக்கி " இவரே உன் தாய்" என்றார். அந்நேரம் முதல் அவரை ஏற்று தம் வீட்டில் ஆதரவு அளித்து வந்தார்
🌹திருத்தந்தை பிரான்சீஸ் அன்னை மரியாவை சார்ந்து வாழ்ந்த அன்பு மகன் :
தனது 12 ஆண்டுகால திருத்தந்தையாக திருச்சபையை வழிநடத்தும் பணியிலே பணியிலே 126 தடவைகளுக்கு மேல் ரோமையில் உள்ள மேரி மேஜர் பெருங் கோயிலை சந்தித்து ஜெபித்தவர் .
திருத்தூது பயணங்களை மேற்கொள்ளுகின்ற பொழுதும் பயணங்கள் முடிந்து திரும்பி வருகின்ற பொழுதும் மேரி மேஜர் பெருங்கோவில் அன்னை மரியாதையை சந்தித்து ஜெபிப்பது வழககம்.
இறுதியாக விண்ணக வாழ்வுக்கு அழைக்கப்பட்ட போதும் கூட அன்னை மரியாவின
அரவணைப்பிலே இளைப்பாற விருப்பம் கொண்டார் .
திருத்தந்தை பிரான்சிஸ்
"அவள் இயேசுவை தன் வயிற்றில் சுமந்து அவரைப் பெற்றெடுத்ததால் மட்டுமல்ல, அவருடைய இடத்தை ஆக்கிரமிக்காமல் அவரை ஒளிக்குள் கொண்டு வருவதாலும் அவள் ஒரு தாய்."
🌹 மரியன்னையின் காட்சிகள் அனைவருக்கும் தாயாக நம்மை பின் தொடர்ந்து வழி நடத்துகிறார்
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை
பிரான்ஸ் நாட்டில் புனித பாத்திமா அன்னை
போர்ச்சுக்கல் நாட்டில் புனித லூர்து அன்னை.
உலகெங்கும் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட அன்னை மரியாவின் காட்சிகள் 44
🌹ஜெபமாலையில் தந்தை பியோவின் 5 சிந்தனைகள்:
எல்லாவற்றிலும் எல்லாரிலும் வெற்றி பெற்றவர்களாக இருக்க உங்களுக்கு விருப்பமா?
புனித தந்தை பியோ எப்போதும் தனது ஜெபமாலை மணிகளை விரல்களால் உருட்டிக்கொண்டே காணப்பட்டார், மேலும் ஜெபமாலையின் பிரியராக அறியப்பட்டார்.
இந்த பக்தியையும், அது யாரிடம் செலுத்தப்படுகிறதோ அந்த ராணியையும் அவர் ஐந்து முறை குறிப்பிட்டார்:
1. சாத்தானே போய்விடு
சாத்தான் இந்த ஜெபமாலை என்னும் ஜெபத்தை அழிக்க விரும்புகிறான், ஆனால் இதில் அவன் ஒருபோதும் வெற்றி பெறமாட்டான். ஜெபமாலை என்பது எல்லாவற்றையும், எல்லாரையும் வென்றவர்களின் ஜெபம்.
ஜெபமாலைக் கொண்டு சாத்தானை வென்றெடுத்தார் புனித தந்தை பியோ. சாத்தான் அலறுகிறான். மைக்கேல் அதிதூதரை விட இந்த கிழவனை பார்த்தால் தான் எனக்கு கோல நடுங்குது அப்படின்னு சொல்றான். இயேசு நமக்கு "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்னும் ஜெபத்தை கற்றுக் கொடுத்தது போலவே, நாம் தாய் மரியா இந்த ஜெபமாலை ஜெபத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
2. அம்மாவின் கையைப் பற்றிக்கொள்.
இருள் சூழ்ந்த நேரங்களில், ஜெபமாலையைப் பிடிப்பது உங்கள் புனித கண்ணி தாயின் கையைப் பிடிப்பது போன்றது. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபியுங்கள். மரியாளின் கைகளில் உங்களை விட்டுவிடுங்கள். அவள் உங்களை கவனித்துக்கொள்வாள்.
3. அம்மாவின் அருகில் இருங்கள் .
உங்கள் கவனம் கன்னி தாய் மரியாவை வாழ்த்தும் "அருள் நிறைந்த மரியே" என்ற வாழ்த்து மீதும் நீங்கள் தியானிக்கும் மறைபொருளின் மீதும் இருக்கட்டும். அவள் எல்லா மறை பொருள்களிலும் இருக்கிறாள், அவள் எல்லாவற்றிலும் அன்புடனும் வேதனையுடனும் பங்கேற்றாள்.
4.எப்போதும் அடிக்கடி
நமது அன்னையை அன்பு செய்து அவளை அன்பு செய்ய செய்யுங்கள்; எப்போதும் ஜெபமாலையை ஜெபியுங்கள், முடிந்தவரை அடிக்கடி அதைச் சொல்லுங்கள். Love our Lady and make her loved; always recite the Rosary and recite it as often as possible.
5. அன்னை மரியாளிடம் தந்தை பியோவின் வேண்டுதல்
என் மீது இரக்கம் காட்டுமம்மா! உமது இரக்கமுள்ள பார்வை என்னை உயிர்ப்பித்து, என்னைத் தூய்மைப்படுத்தி, கடவுளிடம் உயர்த்தட்டும்; இந்த உலகத்தின் அழுக்கிலிருந்து குப்பையில் இருந்து என்னை எழுப்பி, என்னைப் படைத்தவரிடம் செல்லவும், பரிசுத்த ஞானஸ்நானத்தில் என்னை மீண்டும் உயிர்ப்பிக்கவும், பாவம் அதிகமாக மாசுபடுத்திய என் வெள்ளை நிற மாசற்ற இதயத்தை எனக்குத் திருப்பித் தாரும். அன்புள்ள அம்மா, நான் இயேசுவை நேசிக்க செய்யும்.
Jokes
1. கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு..
ஏன் பாப்பா அப்படி வேண்டுறே?
ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.
2. டேய்... வாடா... எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு. பாத்துட்டு வரலாம் "
வேணாம்டா... அப்பா கூட இருக்காரு. நீ பாத்துட்டு வந்து சொல்லு -
சரிடா... பாத்துட்டு போன் பண்றேன்...
ஒரு சப்ஜெக்ட்ல பெயில்ன்னா, எனக்கு குட்மார்னிங் சொல்லு. ரெண்டுல பெயில்ன்னா, என் அப்பாவுக்கும் குட்மார்னிங் சொல்லு. நான் புரிஞ்சிக்கிறேன்....
நான் போய் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் பாத்துட்டு கொஞ்ச நேரத்துல போன் பண்ணுனான்
..ஹலோ...
சொல்றா அப்படின்னா...
உன்னோட குடும்பத்துக்கே குட்மார்னிங்டா....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக