குருத்துவம்



குருத்துவத்தின் மகத்துவம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே நம்புகிறவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்.

பிரான்ஸிஸ் அசிசியாரும் குருத்துவமும் 

குருத்துவம் என்பது ஒரு அழைப்பு

 குருத்துவம் (அருட்சாதனம்)

குருத்துவம் என்பது கடவுளுக்கும், மக்களுக்கும் பணி செய்யும் பொறுப்பை வழங்கும் அருட்சாதனம் ஆகும். 
1. திருப்பலி மற்றும் அருள்சாதனங்களை நிறைவேற்றவும், 
2. நற்செய்தி அறிவிக்கவும், 
3. இறைமக்களை வழி நடத்தி உருவாக்கவும் 
உரிமை அளிக்கிற அருள்சாதனமே குருத்துவம் ஆகும். குருத்துவத்தின் நிறைவு ஆயர்நிலை ஆகும்.

மேலும் காண்க: Catechism of the Catholic Church, 1536–1600

லேவியர் 20:26
எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்.

2ம் வத்திகான் சங்கம் 
ஒரு குருவானவர் மறு கிறிஸ்து

புனித அம்ப்ரோஸ் 
"இயேசு குருக்களை, அவரது அன்பின் பிரதிநிதிகளாக  உருவாக்கினார்." 

புனித ஜான் வியான்னி,
"குருத்துவம் என்பது இயேசுவின் இருதயத்தின் அன்பு. நீங்கள் ஒரு குருவை காணும்போது, நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்." 

அசிசி புனித பிரான்சிசு 
"என் சகோதரர்களே, கேளுங்கள்: புனித கன்னி மரியா மிகவும் மதிக்கப்படுகிறாள், அது சரிதான், ஏனென்றால் அவள் அவரை மிகவும் பரிசுத்த திருவயிற்றில் சுமந்தாள்; புனித திருமுழுக்கு யோவான் 
 நடுங்கி, கடவுளின் தலையை தலையைத் தொடத் துணியவில்லை என்றால்; அவர் சிறிது காலம் படுத்திருந்த கல்லறை மிகவும் போற்றப்படுகிறதென்றால், அவரைத் தன் கைகளால் தொட்டு, தனது இதயத்திலும் வாயிலும் அவரை ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவரைக் கொடுக்கும் நபர் எவ்வளவு பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், தகுதியானவர். இவர் இப்போது இறக்கப் போவதில்லை, ஆனால் நித்தியமாக வெற்றி பெற்று மகிமைப்படுத்தப்படுபவர், தேவதூதர்கள் அவரைப் பார்க்க விரும்புகிறார்கள் (1 பேதுரு 1:12)."

தேவ அழைத்தல்:   குருத்துவ அழைப்பு

தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது அதில் நிலைத்து நிற்கவும் இயலாது. குருவாவதற்கு கிறிஸ்தவராகவும், நல்ல உள்ளம் கொண்டவராகவும் இறைப்பணிசெய்ய ஆர்வமுள்ளவராகவும் நல்ல உடல்நலத்தைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது கல்லூரி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். முதலில் இரண்டு வருடங்கள் தயாரிப்பாகவும் மூன்று வருடங்கள் தத்துவ இயலும் ஒரு வருடம் இடைநிலைப் பயிற்சியும் பின்னர் நான்கு வருடங்கள் இறைஇயலும் பயிலவேண்டும். ஆக மொத்தம் குறைந்தது பத்து வருட தயாரிப்பு தேவை. மேலும் விபங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அனுகலாம்: தக்க விபரம் தருவார்கள். 

"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (மத்தேயு 10 :42) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முற்பட வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக