மனைவி:
என்னங்க
சொர்க்கத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து
வாழ முடியாதாமே?
கணவன் : அதனாலதான்டி அது சொர்க்கம்.!!!
###
மனைவி:- நீங்க குடிப்பதை எப்போ நிறுத்தப்போறீங்க?
கணவன்:- நீ சீரியல் பார்ப்பதை நிறுத்தியவுடனே?
மனைவி : "சரி சரி, அளவா குடிங்க ஒடம்பகெடுத்துக்காதீங்க".
####
கணவன்:
இனிமே உன் கூட வாழ மாட்டேனு உங்க அம்மா வீட்டுக்கு போனியே இப்ப எதுக்கு திரும்ப வந்த ..?
மனைவி :
நான் இல்லாம நீ ரொம்ப நிம்மதியா இருக்க'னு எதிர் வீட்ல சொன்னாங்க அதான் திரும்ப வந்தேன்...
###
கிணற்றுக்குள் மாட்டிக்கொண்ட திருடன்
விடிய விடிய காத்திருந்த நிகழ்வு
###
மரணத்தை வென்று இயேசு உயிர்த்தார்! அல்லேலூயா!!
🌹 வெற்றுக் கல்லறை இயேசு உயிர்த்து விட்டார் என அறிவிக்கிறது.
🌹 இயேசுவின் தலைமாட்டில் உள்ள துணியும் இயேசுவை சுற்றி அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட துணியும் அங்கே கிடைக்கிறது. இயேசுவின் உடலை மட்டும் காணோம். கல்லறைக்குள் இருந்து துணிகளும் இயேசு உயிர்த்து விட்டார் என்று உண்மையை அறிவிக்கிறது
🌹 கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் உடலை காணவில்லை என்று மகதல மரியா அப்போஸ்தலர்களுக்கு அறிவிக்கிறார்.
🌹 திருத்தூதர யோவான் மற்றும் பேதுரு விரைந்து வருகிறார்கள். பேதுருவை விட யோவான் வேகமாக ஓடிவருகிறார் வயதில் குறைந்தவர் என்பதனால். கல்லறைக்குள் குனிந்து பார்க்கிறார். சொன்னபடியே உண்மையாக இருக்கிறது. உண்மையை உறுதி செய்ய இரண்டு சாட்சிகள் வேண்டும். ஆகவே பேதுருவுக்காக திருத்தூதர் யோவான் கல்லறைக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். பேதுரு கல்லறையை வந்து அடைந்ததும் உறுதி உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு சொன்னபடியே அங்கு காணப்படுகிறது.
இறந்து மூன்றாம் நாள் உயிர்ப்பேன் என்று இயேசு சொன்னதை நினைவு கூறுகிறார்கள். அதன்படியே கண்டார்கள் நம்பினார்கள்.
இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் அல்லேலூயா.
🌹 இன்றைய முதல் வாசகத்தில் அப்போஸ்தலர் பணியிலே திருத்தூதர் பேதுரு உயிர்த்த இயேசுவுக்காக சாட்சி பகர்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தார் என்றும் உயிர்த்த ஏசு தங்களோடு உண்டு குடித்தார் என்றும் உண்மையாகவே உயிரோடு இருக்கிறார் என்றும் பேதுரு சாட்சி பார்க்கிறார். அவரை நம்பி ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு பாவ மன்னிப்பும் நிலை வாழ்வும் உண்டு என்று போதிக்கிறார்.
🌹 இரண்டாம் வாசகத்திலே கிறிஸ்துவோடு இறந்து உயிர்த்தெழுந்த நீங்கள் மேல் உலகில் உள்ளவற்றையே நாடுங்கள் அங்கே கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் என்று மேல் உள்ளத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளில் நமக்கு கற்பிக்கிறார்.
1. வெற்றுக் கல்லறை போல துணிகளைப் போல இயேசு உயிர்த்து விட்டார் என்பதற்கு சாட்சியாக விளங்க வேண்டும்.
2. மகதல மரியாவை போல திருத்தூதர்கள் பேதுரு மற்ற யோவானை போல இயேசு உயிர்த்து விட்டார் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.
3. அப்போஸ்தலர்கள் போல இயேசு உயிர்த்து விட்டார் என்று மற்றவர்களுக்கும் அறிவித்து சாட்சியாக வாழ வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக