புகழ் உமக்கே ஆண்டவரே! புகழ் உமக்கே!
படைப்புகள் யாவும் பாடிடும் கீதம்,
புகழ் உமக்கே! புகழ் உமக்கே!

​மிக உன்னதரே, சர்வ வல்லவரே,
உமக்கே புகழ்ச்சி, உமக்கே மகிமை.
சகோதர உணர்வுடன் படைப்புகள் யாவும்
உம் நாமம் போற்றி உம்மைப் பணிகிறோம்.
உமக்கே சொந்தம்! உமக்கே சொந்தம்!
எல்லா வரங்களும் உமக்கே சொந்தம்!


​சகோதரன் சூரியனால் உமக்கே புகழ்!
பகலைத் தந்து எமக்கு ஒளி தருகிறான்;
அழகும் ஒளிவீச்சும் கொண்டவன் அவனே,
உம் மகிமையைத் தாங்கி நிற்கிறான்.
சகோதரி சந்திரனும் நட்சத்திரங்களும்
வானில் பிரகாசமாய் ஒளிரும்
தெளிவான அழகுக்காய் உமக்கே புகழ்!
நன்றி! நன்றி! ஆண்டவரே! 


​சகோதரன் காற்றினால் உமக்கே புகழ்!
மேகங்கள், அமைதியான வானிலை;
படைப்புகள் யாவும் வாழ்கின்றன.
சகோதரி தண்ணீரோ தாழ்மையும் தூய்மையும்;
விலையேறப் பெற்றதாய் இருக்கிறாள்.
சகோதரன் நெருப்பினாலும் உமக்கே புகழ்!
இரவை ஒளியாக்கி, வலிமை தருகிறான்.
உமக்கே புகழ்! உமக்கே நன்றி! 



​சகோதரி தாய் பூமிக்காக உமக்கே புகழ்!
எம்மைத் தாங்கி, வளர்த்து ஆளுகிறாள்;
பலவகை கனிகள், வண்ண மலர்கள் – அவள்
உற்பத்தி செய்யும் மருந்துகள்.
அவளின் கருணைக்காய், செழிப்புக்காய்
மனதார நன்றி செலுத்துகிறோம்;
எங்கள் தேவையெல்லாம் ஈடு செய்கிறாள்.
நன்றி! நன்றி! ஆண்டவரே! 



​உம் அன்பினிமித்தம் மன்னிப்பவர்க்காய் புகழ்!
துன்பம், வேதனை தாங்கி சகிப்பவர்க்காய்;
அமைதியுடன் சகிப்போர் வேறுபெற்றவர்கள்
உம்மாலே மகுடம் சூட்டப்படுவார்கள்.
சகோதரி மரணத்திற்காய் உமக்கே புகழ்!
அதனிடமிருந்து எவரும் தப்ப முடியாது.
உம் திருவுளத்தில் இறப்போர் பேறுபெற்றவர்கள். 
இரண்டாம் மரணமும் அண்டாது.
பணிவுடன் உம்மைப் போற்றுகிறோம்! 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக