ஜெபமாலையின் மேன்மை


‘கூடி ஜெபிக்கும்  குடும்பம்  கூடி வாழும் குடும்பம்’

அன்பார்ந்த பியோக்குரல் வாசகர்களுக்கும்,ஜெபமாலை பக்தி முயற்சியில் வளர்கிறவர்களுக்கும்  வாழ்த்தும் வணக்கமும். ஜெபமாலை‘பக்தி’ என்பது விவிலியத்தில் சொல்லப்படாத  ஒன்று  இதை ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை என்று கத்தோலிக்க மறையிலிருந்து பிரிந்த சகோதரர்கள் சொல்கிறார்கள். ஆனால்  கத்தோலிக்கர்களாகிய  நாம்  ஜெபமாலை பக்தியில்  ‘விவிலியம்’ அடங்கியுள்ளது, சிறப்பாக விவிலியம்     தரும் மீட்பின் வரலாறு நிறைந்துள்ளது என்கிறோம். அன்பார்ந்த பக்தர்களே இந்தக் கருத்தை புரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை படித்து உணர்வோம்.மரியன்னையிடம் மன்றாடுகிறார்கள், அன்னையை அதிகம் புகழ்கிறார்கள் என்று சொல்லும் பிரிந்த  சகோதரர்கள் இப்பொழுது  உங்களுக்காக சகோதரர்....  செபிக்க போகிறார் என்றதும் என்ன செய்கிறார்கள் என்பதை  எண்ணிப்பார்க்க வேண்டும்.  ஏன்  செய்கிறார்கள்?  என்பதை   எண்ணிப்பார்க்க  வேண்டும். ஏன்  அவர்களுடைய செபத்தை  எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் புரிய வேண்டும். அந்த  சகோதரரின்   செய்தி,  இந்த  வல்ல  சகோதரரின்   செபம் நேரம் என்று சொல்வதையும் நாம் எண்ணிப் பார்த்து பதில் தர வேண்டும். மரியன்னையிடம் பக்தி  கொள்வது என்பது இறைத்தந்தையின்  திட்டம். ஏனெனில் அவரே ‘வல்லமையுள்ள உபகாரி’. அன்னை மரியாளிடம் அவளவற்ற பற்றுக் கொண்டு ஜெபமாலை பக்தி முயற்சியால் நலமடைந்து ‘நம்பிக்கை நற்செய்தியை குடும்பங்களுக்கு ஜெபமாலை வழியாக  வழங்கிய அருட்பணி பாட்ரீக் பேயீடன் C.S.C

1909 ஜனவரி  9ல்  அயர்லாந்து நாட்டில்  பிறந்தவர்.  தனது  19ம் வயதில்  தன் மூத்த சகோதரன்  டாம் உடன்,  குடும்ப  சூழ்நிலை  நிமித்தம், படிப்பு, வேலைக்காக அமெரிக்கா சென்றவர். படித்து குருவானவாக ஆக வேண்டும்  என்று நினைத்தவர். 1928ம் ஆண்டு பென்சில்வேனியா  நகரில் புனித தனிசுலாஸ்  பேராலயத்தில் காவலாளியாக வேலை  செய்து  தன் சகோதரியின்  வீட்டில் வசித்து வந்தார்.  அவரின்  பக்தியையும், நேர்மைத் தனத்தையும் அறிந்தவர்  பேராலய முதன்மை  குரு உதவியால் 1932ல் குருமடத்தில்  சேர்ந்தார்.   1938ல்  காசநோயினால் பாதிக்கப்பட்டவர். இரத்தவாந்தி  எடுத்து  நுரையீரல் பாதிக்கப்பட்டார். சகோதரியின்  எளிய விசுவாசத் தூண்டுதலால் தங்கள் குடும்பத்தின் வழக்கப்படி அன்னை மரியாளிடம் பக்தி கொண்டு ஜெபமாலை செபிக்க நாளுக்கு நாள்  நோய் நீங்கி குணம் பெற்றார். இவரது உடல்  நலனைக் கண்டு மருத்துவர்கள் வியந்தனர். நோய்  நீங்கி குருமடத்தில் மீண்டும்  சேர்ந்து 1941ல் ஜூன் 15ல் குருவானார்.

மரியாளின் பரிந்துரையால் ஜெபமாலை செபத்தின்  வல்லமையால் குணமாகி குருவானவர் தன் குடும்பம்  கொண்டிருந்த கூடி செபிக்கும் வழக்கத்தை உலகுக்கு கற்றுத்தந்தார்.  ஊடகம்  வளர்ந்த காலத்தில்  வானொலி (ஊடகம்)  மூலம்  நற்செய்தியை   அறிவித்த  முதல் குரு இவர்தான்.  ‘கூடி செபிக்கும்  குடும்பம்  கூடி வாழும்’ என்ற  உண்மை தத்துவத்தை    உலகுக்கு   தந்தவரும்   இவர்தான்.    தனது 29ம்    வயதில் இறந்துபோக  வேண்டியவர்  அற்புதமாக  குணம்  பெற்றவர்.  83  வயது- வரை  வாழ்ந்து 1992ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார் ஜெபமாலை குரு. இந்த  நல்ல  குருவைப்போல் நம்பிக்கை  நற்செய்தியை நாமும் திருச்சபைக்கு  ஜெபமாலை வழியாக   வழங்குவோம். ஜெபத்தில் இணைவோம்.

அருட்தந்தை ம. தெரசுநாதன்.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக