prayer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
prayer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ப்பண வாக்குறுதி சடங்கு

அர்ப்பண வாக்குறுதி சடங்கு 

தூய ஆவியார் பாடல்.

நம்பிக்கை அறிக்கை.

அர்ப்பண வாக்குறுதி ஜெபம் 

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

மீட்பின் வரலாற்றில் இறைவாக்கினர்களையும் திருதூதர்களையும் அழைத்து உம் மக்களை வழிநடத்திட அருள்புரிந்த இறைவா. இன்றும் திருதந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலை தலைவர்களை அழைத்து உமது ஆட்சியை இவ்வுலகில் நிலை பெற செய்துகொண்டிருக்கும் நல்ல ஆயனே. காலத்துக்கேற்ற புனிதர்களை வழங்கி எங்கள் மீது உமது பேரன்பை பொழிந்து கொண்டிருக்கும் எல்லையற்ற இரக்கப்பெருக்கே, என் இதயத்தின் நன்றிகளை உமக்கு காணிக்கையாக்குகிறேன். 

புனித தந்தை பியோவின் அடிச்சுவட்டில், புனித வாழ்வை நோக்கிய பயணத்தில், (பெயர்....), ஆகிய நான் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் பணியாளராக  என்னையே அர்ப்பணித்து கொள்கிறேன். ஜெபத்திலும் முன்மாதிரிகையிலும் சிறந்த கத்தோலிக்க நம்பிக்கையாளராக வாழ முழு முயற்சிகள் எடுப்பேன் என வாக்களிக்கிறேன். எனது அர்ப்பண வாழ்வில், தந்தை பியோவின் மனநிலையில் உம்மிடம் வேண்டுகிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்

குரு : இறைவனின் முன்னிலையில் சகோதர சகோதரிகளின் மத்தியில் நீங்கள் கொடுத்த அர்ப்பணத்தை உறுதி செய்கிறேன். இறைவன் உங்களுக்கு இவ்வாழ்வில் நிறை ஆசீரும், மறு வாழ்வில் நிலை வாழ்வையும் வழங்குவாராக. பதில்: ஆமென்.

ஒருங்கிணைப்பாளர் உத்தரியம் ஆசீர்வதிக்கப்படல் :

இறைவா, புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாளமாக இருக்கும் இந்த புனித பியோ உத்தரியங்களை + ஆசீர்வதித்து புனிதப்படுத்தியருளும். இதை அணிகின்றவர்கள் தமது கடமையை உணர்ந்து செயல்பட்டு உமது அன்புக்கு என்றும் பிரமாணிக்கமாக இருக்கவும் உமது அருளினால் நிரப்படவும் அருள்புரிவீராக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகின்றோம். 
பதில்: ஆமென்.

உ த்தரியத்தை அணிவித்தல் :

குரு : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே இந்த உத்தரியத்தை அணிந்துகொள். 
பதில் :ஆமென் 

*தீர்த்தம் தெளித்தல் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ திருவிழாவை முன்னிட்டு நவநாள் ஜெபம்

இன்று முதல்
புனித தந்தை பியோ திருவிழாவை முன்னிட்டு நவநாள் ஜெபம் 
(20 - 28/09/2025) 

முதல் நாள் :

1. அமைதியின் உருவாம் புனித தந்தை பியோவே!
போர்களும் சண்டைகளும், குழப்பங்களும் நிறைந்த இவ்வுலகில் அமைதியும் சமத்துவமும், அன்பும் மேலோங்கி வளர இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாட வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 

ஐந்து காய வரம் பெற்ற முதல் குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே. தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே. இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே. இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றட்டுகளை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும் ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்.
அகிலம் போற்றும் அற்ப்புத தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியை கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். (1 பர, 1 அருள், 1 திரி )

இரண்டாம் நாள் 

2. மக்கள் புனிதர் தந்தை பியோவே!
உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் சுயநலம் தவிர்த்து மக்கள் நலம் பேணி, நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாட வேண்டுகிறோம். (1விண். 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்..........

மூன்றாம் நாள் 

3. அற்புத புனித தந்தை பியோவே!
நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வறட்சி ஆகியவை நீங்கி மக்கள் வளமோடும், நலமோடும்,
நிறைவோடும் வாழத் தேவையான வரத்தை இறைமகன் இயேசுவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.......

நான்காம் நாள் :

4. அற்புத குணமளிக்கும் தந்தை பியோவே!
தீராத நோய்களினால் வேதனைப்படும் உம் மக்களை கண்ணோக்கிப்பாரும். அவர்கள் வேண்டுதல்களுக்கு மனமிரங்கி நல்ல உடல் நலத்தைத் தர இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும்.('விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.......

ஐந்தாம் நாள் :

5.பிசாசுகளை நடுநடுங்கச் செய்யும் புனித தந்தை பியோவே!
மக்களை வாட்டி வதைக்கும் தீய சக்திகளை விரட்டி, அவர்களுக்கு மன நிம்மதியையும். ஆறுதலையையும், மகிழ்ச்சியையும் வழங்கிட இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும். (1விண், 1அருள்,1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

ஆறாம் நாள் 

6. புனித தந்தை பியோவே!
எம் சமுதாயத்தில் வாழும் இளைஞர்கள், தீய வாழ்க்கையையும், சுயநலத்தையும் விட்டுவிட்டு நல்வழிக்கு திரும்பவும், வாழ்க்கையில் முன்னேறவும், தியாக தீபங்களாக மாறவும் வரமருள் இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.....

ஏழாம் நாள் :

7. இறை ஞானம் நிறைந்த தந்தை பியோவே!
எங்கள் குழந்தைகள் ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும், தெய்வ பயத்திலும், கீழ்ப்படிதலிலும் சிறந்து விளங்கி திருச்சபைக்கும்,நாட்டிற்கும் எதிர்காலத் தூண்களாக விளங்க இறைமகன் இயேசுவிடம் தேவையான அருளைப் பெற்றுத் தர உம்மை மன்றாடுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.....

எட்டாம் நாள் :

8. தொழிலாளர்களின் ஆறுதலான தந்தை பியோவே!
எம் நாட்டுத் தொழிலாளர்கள் நிறைய வேலை வாய்ப்பைப் பெற்று, நீதியான ஊதியம் பெற்று, குடும்ப வருமானத்தையும் நாட்டு வருமானத்தையும், பெருக்கி வளமான வாழ்வை அமைத்திடத் தேவையான அருளை இறைமகன் இயேசுவிடம் பெற்றுத்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். (விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

ஒன்பதாம் நாள் :

9. நல்லுறவின் புனித தந்தை பியோவே!
எம் நாட்டு மக்கள் வேற்றுமைகளை அகற்றி ஒற்றுமையை வளர்க்கவும் ஜாதி, மத பேதமின்றி ஒவ்வொருவரையும் சகோதர, சகோதரிகளாக மதித்து ஏற்று அன்பு செய்து சகிப்புத் தன்மையோடு வாழத் தேவையான அருளைப் பெற்றுத் தர இறைமகன் இயேசுவிடம் மன்றாட உம்மை வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

பத்தாம் நாள் 

10. இயேசுவின் துன்பத்தில் பங்கேற்ற புனித தந்தை பியோவே!
உலகமெங்கும் ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை ஏற்று இரத்தம் சிந்தி உயிர் துறக்கின்ற கிறித்துவர்கள் மன வலிமையோடும் முழு விசுவாசத்தோடும் இயேசுவுக்கு சாட்சி பகரவும், கடவுளின் மாபெரும் இரக்கத்தையும் கருணையையும் அன்பையும் பாதுகாப்பையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ள தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் மன்றாட உம்மை வேண்டுகிறோம். (விண், 1.அருள், 1திரி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ மன்றாட்டு மாலை


புனித தந்தை பியோ மன்றாட்டு மாலை 

ஆண்டவரே இரக்கமாயிரும். கிறிஸ்துவே இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாம் இறைவா-
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட திருமகனாம் இறைவர் - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்.

புனித மரியாயே....
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குடும்பங்களின் பாதுகாவலரான புனித் சூசையப்பரே...
புனித பிரான்சிஸ் அசிசியாரே ..
புனித தந்தை பியோவே...
பிரான்சிஸ்கன் சபையின் மணிமுடியாகிய புனித் தந்தை பியோவே...
பிரான்சிஸ்கன் சபையின் நன்மாதிரியான புனித தந்தை பியோவே....
புனிதர்களுள் புனிதராக விளங்கும் புனித தந்தை பியோவே...
பாவிகள் மனம் திரும்ப தன்னையே வருத்திக் கொண்ட புனித தந்தை பியோவே....
அன்னை மரியாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட புனித தந்தை பியோவே.
இயேசுவின் பாடுகளில் பங்கேற்று ஐந்து காயங்களைத் தன் உடலில் சுமந்த புனித தந்தை பியோவே...
புனித பிரான்சிஸ்குவின் அடிச்சுவட்டில் வாழ்ந்த புனித தந்தை பியோவே...
திருப்பலியில் உம்மையே பலியாக்கிய புனித தந்தை பியோவே...
ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்க பேரார்வம் கொண்ட புனித தந்தை பியோவே...
 சில நாட்கள் திவ்விய நற்கருணையை மட்டுமே உணவாக கொண்டிருந்த புனித தந்தை பியோவே...
இறை பிரசன்னத்தில் அடிக்கடி பரவசமடைந்த புனித தந்தை பியோவே...
அனைவருக்கும் நல்ல ஆன்மீக ஆலோசகரான புனித தந்தை பியோவே...
தன்னை நாடிய உத்தரிக்கின்ற ஆன்மாக்களின் வேதனையைத் தணித்த புனித தந்தை பியோவே...
ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பிய புனித தந்தை பியோவே...
சாத்தானின் சோதனைகளை வென்றவரான புனித தந்தை பியோவே...
ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் வரம் பெற்ற புனித தந்தை பியோவே...
எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரான புனித தந்தை பியோவே...
அடுத்தவர் அறியாமல் நடமாடும் ஆற்றல் பெற்ற புனித தந்தை பியோவே...
திராத நோய்களையும் குணமாக்கும் வல்லவரான புனித தந்தை பியோவே...
வயிற்றில் தோன்றிய கட்டியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கிய புனித தந்தை பியோவே...
இறை ஞானத்தால் தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்கிய புனித தந்தை பியோவே...
பார்வை இழந்தோர்க்குப் பார்வை அளித்த புனித தந்தை பியோவே...
குழந்தைபேறு அற்றவர்க்குக் குழந்தை வரம் அளித்த புனித தந்தை பியோவே...
மருத்துவர்களால் கைவிடப்பட்ட சிறுவனைக் குணமாக்கிய புனித தந்தை பியோவே..
புற்றுநோயாளரை அற்புதமாக குணப்படுத்திய புனித தந்தை பியோவே...
பேய்களை நடுநடுங்கச் செய்தவரான புனித தந்தை பியோவே...
சுய நினைவு இழந்தவர்களை வல்லமையுள்ள செபத்தால் குணமாக்கிய புனித தந்தை பியோவே...
தீயவர்களை மனமாற்றிய புனித தந்தை பியோவே....
இயேசுவின் பிரசன்னத்தை எல்லோருக்கும் உணர்த்திய புனித தந்தை பியோவே...
இறை நம்பிக்கையற்றவர்களை மனம் திருப்பிய புனித தந்தை பியோவே....
தொழிலாளர் நலன் பேணிய புனித தந்தை பியோவே....
எல்லோருக்கும் எல்லாமும் ஆன புனித தந்தை பியோவே....

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே (3)
1. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் 
2. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

மன்றாடுவோமாக:
எங்கள் வானகத் தந்தையாகிய இறைவா! புனித தந்தை பியோவை மக்களின் புனிதராகவும், தேவைகளில் பரிந்து பேசுகிறவராகவும் உம் மக்களுக்கு அளித்தீரே! அதற்காக நாங்கள் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறோம். அவரது அருள் உதவியால் நாங்கள் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைக் கடைபிடிக்கவும். கடமைகளில் தவறாதிருக்கவும், கீழ்ப்படிதலில் சிறந்திருக்கவும் செய்தருளும். எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் எல்லாம் உமது ஆதரவைக் கண்டு உணரவும் செய்தருள்வீராக! எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS