songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தூய ஆவியார் பாடல்கள்

"ஓ பரிசுத்த ஆவியே"


 Lyrics: ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே 
உம்மை ஆராதனை செய்கிறேன் - இறைவா 
ஆராதனை செய்கிறேன் (2)


என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும் 
புது வலுவூட்டி என்னைத் தேற்றும் 
என் கடமை என்னவென்று காட்டும் 
அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும் 
என்ன நேர்ந்தாலும் நன்றிதுதி கூறி பணிவேன் என் இறைவா 
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும். 

App Link: https://play.google.com/store/apps/details?id=com.arulvakku.lyrics.app

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாடல்கள்

#1.
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
 
மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

பலவீன நேரம் என் அருள் உனக்கு போதும்
உன் பலவீனத்தில் என்பலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வழ்விலே – இயேசைய்யா

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

#2.
அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க‌நெஞ்சோடு நிததம் அவர் நினைவிருக்க(2)உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார்உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார்- அஞ்சாதே

தீயின் ந‌டுவில் தீமை இல்லைதிக்க‌ற்ற‌ நிலையில் துய‌ர‌ம் இல்லைதோல்வி நில‌யில் துவ‌ண்டு வாழும்துன்ப‌ம் எதுவும் தொட‌ர்ந்திடாதுகாக்கும் தெய்வ‌ம் கால‌மெல்லாம்(2)க‌ர‌த்தில் தாங்கிடுவார்- அன்பின்க‌ர‌த்தில் தாங்கிடுவார்-அஞ்சாதே

தூர‌ தேச‌ம் வாழ்க்கை ப‌ய‌ண‌ம்தேவ‌ நேச‌ம் உன்னைத் தொட‌ரும்பாவ‌ம் யாவும் ப‌ற‌ந்து போகும்ப‌ர‌ம‌ன் அன்பில் ப‌ண்பைப் போல‌வாழும் கால‌ம் முழுதும் உன்னில்(2)வ‌ச‌ந்த‌ம் வீசிடுமே- அன்பின்வ‌ச‌ந்த‌ம் வீசிடுமே -அஞ்சாதே

#3.
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு
 என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் புகழ்வேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் புகழ்கையிலே இயேசையா
உம் அன்பை சுவைக்கையிலே

2. உம் வார்த்தை எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வார்த்தை தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாதா பாடல்கள்

1.
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்  2          
தாய் என்று உன்னைத் தான்2 பிள்ளைக்குக் காட்டினேன் மாதா 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமோ– 2                          மேரி உன் ஜோதி கண்டால் விதிமாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2                     கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா 

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2                  
 அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா

#2.
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2)

1. பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின் தாயாரே
பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2)
இப்போதும் நீர் மன்றாடும் எப்போதும் நீர் மன்றாடும் (2)
தீமைகள் நெருங்குகையிலே
பரமனை மன்றாடும்
 மரணம் வருகையிலே எம்மைத் தாங்குமம்மா

2. அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே
மகனும் வாழியவே – 3

#3.


என்ன தவம் செய்தாயோ(Enna thavam Seithaayo)
என்ன தவம் செய்தாயோ மரியே என்ன தவம் செய்தாயோ இம்மான் ஏசு உன்னை அம்மா வென்றழைக்க 
என்ன தவம் செய்தாயோ ....தாயே ....

பெண்களுக்குள் ஆசீர் நிரம்ப பெற்றாய் எம் கண்களுக்கு கருணையை காட்டி விட்டாய்
மங்கலங்கள் பொழிந்தாய் மரியே வாழ்க ....(2)
மண்ணுலகம் எங்கும் உந்தன் புகழ் வாழ்க ....
புகழ் வாழ்க....உந்தன் புகழ் வாழ்க....

என்ன தவம் செய்தாயோ....

மண்ணில் வந்த தேவன் உன்னில் பிறந்தார் அவ்-வின்னோளியின் சுடரின் மணிவிலக்கே
அன்னையென்று உணயே அண்ணல் அவந்தந்தான் (2)
இன்னல் நிறை உலகினில் துணையாக துணையாக நீ வர வேண்டும் ....

என்ன தவம் செய்தாயோ....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பியோ பாடல்கள்

1.  ஐந்து காய வரம் பெற்ற அற்புதரே

ஐந்து காய வரம் பெற்ற அற்புதரே (2)
எங்கள் ஆன்மாவின் ஒளியுமான தந்தை பியோவே
வரம் வேண்டி நாங்கள் வந்தோம் உம்மிடத்திலே அருள் வரமாகி நீ வருவாய் எம்மிடத்திலே (2)

எண்ணில்லாத துன்பங்களை ஏற்றுக்கொண்டீரே 
இயேசு பிரான் காயங்களைத் தாங்கி நின்றீரே 
மாசில்லாத புனித வாழ்க்கை வாழ்ந்து சென்றீரே(2)
மணம் சொரியும் காயங்களால் மனம் கவர்ந்தீரே 
மக்கள் மனம் கவர்ந்தீரே

தீராத நோய்களெல்லாம் தீர்த்த தந்தையே
 தேவ குமாரன் வழியில் சென்று புதுமை செய்தீரே
மாறாத காயங்களைச் சுமந்த தந்தையே (2) 
ஆன்மாவின் கறைகளை நீர் அகற்றிடுவீரே (2)
     
            ************

2. அருள் நிறை திருச்சபையில்
அற்புதக் குரலாய் ஜொலித்தீரே (2) அண்டி வந்தோருக்கு ஆறுதல் தந்து அன்பில் நெகிழ வைத்தீரே (2) புனித பியோவே (4)

தன்னையே இறையில் தாழ்த்தி
தாழ்ச்சியில் தன்னை உயர்த்தி (2) வார்த்தை வழியில் உறவாடும்
வரலாறாய் வாழ்ந்தவரே (2)
புனித பியோவே (4)

கருணை உள்ளம் கொண்டவரே
புனித அசிசி வழியினரே
காயப்பட்ட திருக்கரத்தால்
கள்வரையும் திருத்திய நல்மருந்தே
புனித பியோவே (4)

வாழ்வதற்குத் தெரியாமல்
வளம் அழித்துக் கொள்வோரின்
துயரங்களைச் சுமந்தவரே
துன்பங்களைத் துடைத்தவரே
புனித பியோவே (4)

                  *********

3.  திரும்பி வாராயோ திருந்தி வாராயோ அன்பனே காத்திருக்கும் ஒரு தந்தையுண்டு -நம் கரம் பிடித்துனை அழைத்தல் கண்டு- 2 (திரும்பி)

உள்ளம் என்னும் புத்தகத்தை ஊடுருவி வாசிக்கும் இறைவனவர் தந்தை தாயுமவர் உள்ளம் என்னும் புத்தகத்தை ஊடுருவி வாசிக்கும் இறைவனவர் தந்தை தாயுமவர் உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னே உண்மை அறிவார் அவர் உன்னைத் தெரிவார் இதயத்தை உனக்கே திறந்துவிடு ... திறந்துவிடு இருப்பதை முழுவதும் அறிக்கையிடு ... அறிக்கையிடு உறவினில் மீண்டும் சேர்ந்துவிடு உவகை நீ நிறைவாய் கண்டுவிடு (திரும்பி)

நன்மையின் வேடத்தில் தீமைதான் வந்தது நினை இழந்தாய் பல தீமை செய்தாய் நன்மையின் வேடத்தில் தீமைதான் வந்தது நினை இழந்தாய் பல தீமை செய்தாய் தீமையின் முகத்திரை கிழிந்தது இப்போது தயங்காதே இனி மயங்காதே
காலங்கள் உனக்காய் நிற்பதில்லை
கடவுளின் கண்களோ அயர்வதில்லை 
இழந்திடும் வாய்ப்புகள் வருவதில்லை 
இனியொரு வாழ்வு இகத்திலில்லை 
இனியொரு வாழ்வு இகத்திலில்லை (திரும்பி)

              **********-
4. புரட்சிப் புனிதரே மக்கள் புனிதரே

புரட்சிப் புனிதரே எங்கள் மக்கள் புனிதரே 
புவியின் புனிதரே எங்கள் வாழ்க்கைப் புனிதரே 
தந்தை பியோவே நின் திருப்புகழ் எங்கும் வாழ்கவே 
தூய பியோவே நின் திருப்பணி எங்கும் வளரவே (புரட்சிப்)

துன்பம் கண்டு துவளாமல் - பிறர் துயரம் துடைக்கத் துணிந்தவரே சன் ஜிவானி ரொத்தந்தோவின் துயர் துடைக்கும் வீடாக 
லாகாசா சொல்லியோ வோதெல்லா செஃப்ரன்ஸா மருத்துவமனையைக் கண்டவரே ஊனமுற்ற பல மாந்தர்க்கு உயரிய நல்வாழ்வு தந்தவரே வேலையற்ற பல மனிதர்க்கு வேலை வாய்ப்புகளைத் தந்தவரே 
மனித நேயம் காத்தவரே

உள்ளம் நுழைந்து அகவாழ்வின் பல உண்மை உரைக்க வந்தவரே உண்மை வழியில் ஊன்றி வாழ என்றும் திருமொழி சொன்னவரே
 நாடி வந்த அருமை இளைஞர்களை 
ஆர்வம் கொண்டு அழைத்தவரே
அன்பு நெறிகாண எங்களுக்கு நண்பராக தினம் திகழ்ந்தவரே சன் ஜிவானி ரொத்தந்தோவில் இளையோர் சமுகம் இன்றும் கூட உம்மை வலம் வர கவர்ந்தவரே (புரட்சி)
               *********

5. என்னோடு தங்கும் ஆண்டவரே

தொகை:

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே நற்கருணை திருவிருந்தே இருளகற்றும் ஒளியமுதே அன்பருக்கு அருளுகின்ற பண்பே பரம்பொருளே 

என்னோடு தங்கும் ஆண்டவரே -4 எனது ஒளியும் நீர் தானே 
எனது வழியும் நீர் தானே (2) உமது சித்தம் அறிவதற்கும் 
உம் குரல் கேட்டு 
உமை நான் தொடர்வதற்கும் (2)

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே

அதிகமாக உம்மை நேசிக்கவும் சுவாசமாக உம்மை சுவாசிக்கவும் அதிகமாக உம்மை நேசிக்கவும் சுவாசமாக உம்மை சுவாசிக்கவும உம்மை வாழ்நாள் முழுவதும் யாசிக்கவும் 
என் உள்ளம் நீர் தங்கும் இல்லமாகவும் 
என்னோடு தங்கும் ஆண்டவரே கேட்டதைத் தருகின்ற ஆண்டவரே 
என் ஆற்றலைப் புதுப்பிக்க வாருமய்யா 
தீர்ப்பும் மரணமும் தடைப்போட்டால் 
எமைக் காக்க உம் துணை தேவையய்யா

என்னோடு தங்கும் ஆண்டவரே
 என்னோடு தங்கும் ஆண்டவரே

ஆறுதலை நான் கேட்கவில்லை அதற்கு எனக்கோர் தகுதியில்லை 
நீர் பிரசன்னமானால் அது போதும் 
அந்த பெருங் கொடையை நீர் தாருமய்யா
மேலும் மேலும் உமை நான் நேசித்திட 
நாளும் பொழுதும் உமைத் தொடர்ந்து வர
 நித்திய காலமும் யாசிக்கிறேன் வேறு எதையும் நான் கேட்கவில்லை (2)

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே

வறட்சியைக் கண்டு வாடுகிறேன் இந்த சிலுவை துன்பத்தில் அஞ்சுகிறேன் (2) சோதனை வேதனை தரும்போது ஓ யேசுவே நீரே துணையாவீர் சோதனை வேதனை தரும்போது ஓ யேசுவே நீரே துணையாவீர் 

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே

6. ஒன்றா இரண்டா புதுமைகள்

ஒன்றா இரண்டா புதுமைகள் செய்தார் தந்தை பியோ 
இந்த உலகம் வியக்கும் 
அற்புதம் புரிந்தார் புனித பியோ தந்தை பியோ எங்கள் புனித பியோ (2) 

தீராத நோயால் வாடிய பலரைப் புனித ஜெபத்தால் காத்தவர் பியோவே
 பார்வை இழந்த பலருக்குப் பார்வை 
அளித்தவர் நமது தந்தை பியோவே 
குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கு
குழந்தை வரமும் அளித்தவர் அவரே 
அழியும் பேய்கள் நடுங்கி ஓடிட கட்டளை இட்டுக் காத்தவர் அவரே 

கண்ணிண் கண்மணி இல்லாத சிறுமிக்கும் கண் பார்வை தந்து அதிசயம் புரிந்தார் (2) எண்ணற்ற நோயால் வாடிய பலரும் 
குணம் பெற நாளும் அருள் மழை பொழிந்தார் (2) 
வீண் பழியாலே மரண தண்டனை பெற்ற பெண்மணியைத் தப்பிக்க வைத்தார் (2) 
தீராத காய்ச்சலால் சுய நினைவிழந்த மங்கை முழுதாய்  குணம் பெற வைத்தார் (2)






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS