எனது விசுவாச அனுபவம் - 2


எனக்கு 2012 ஆம் வருடம் செப்டம்டர் மாதம் 4 தேதி இருதயத்தில் (மாரடைப்பு) ஏற்பட்டு, மிகவும் மோசமான நிலையில் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடனடியாக இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இருதயத்தில் 4 அடைப்பு உள்ளதாகவும் கூறினார்கள். இரண்டரை லட்சம் உடனடியாக கட்டவும், டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். மகளின் திருமணம் ஒருபக்கம். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில், நான் மாதாவிடமும், இயேசுவிடமும் எனக்கு புது இதயத்தை தரவும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக வேண்டும், (பியோ) தந்தையிடம் வேண்டினேன். தங்களின் பரிந்துரையால் எனக்கு பூரண நலம் கிடைக்கவும், ஜெபமாலையை காலை மாலை என்று விடாமல் ஜெபம் செய்தேன். என்ன ஆச்சரியம் என்றால் என்னை பரிசோதித்த டாக்டர் அவர்கள் அடைப்புகள் சரியாகி விட்டதாகவும், தாங்கள் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். மேலும் மருந்தும், ஓய்வும் அவசியம் என்றார்கள். பியோ தந்தையிடம் என்னால் முடிந்தளவு பியோ தந்தையின் மாதா ஜெபமாலையைப் பரப்புவேன் என்று வேண்டினேன். பூரண நலமடைந்துள்ளேன். இனி எம் நலமுடனிருக்க இறை மகனான இயேசுவிடம், மாதாவிடமும், ஜெபிக்கிறேன். எனது சாட்சியை வெளிப்படுத்துவதால் தந்தையிடம் வேண்டினேன். நன்றி தந்தையே. இயேசுவிற்கே புகழ் ! மாதாவுக்கே எனது அன்பு நன்றிகள்!

இப்படிக்கு

டல்சிடிக்ரூஸ் 
(கோவை)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக