கன்னி மரியே, தூயவளே,
கடவுள் உன்னைக் கண்டார்;
அன்பின் ஒளியாய் இருந்ததால்
அவர் உன்னைத் தேர்ந்தெடுத்தார்.

அஞ்சேல், மரியே, அஞ்சேல் என்றார்;
தூதர் காபிரியேல் வந்தார்;
இறை மகனை சுமக்கும்
பேறு உனக்கே என்றார்.

எப்படி நடக்கும் இதுவோ?
நான் கன்னியாகவே இருக்கிறேனே!
கற்பனைக் கெட்டா  ஒரு காரியம்
கண்முன்னே நடக்கிறதே.

தூய ஆவியால் உனக்குள்
புனிதக் குழந்தை உண்டாகும்;
உன் பனித்துளி கருவில்
உலகை மீட்கும் இறைமகன் பிறப்பார்.

மகிழ்வுடனும் பணிவுடனும்
"உமது சித்தமே ஆகட்டும்!" என்றாய்;
உன் கீழ்ப்படிதலின் மூலம்
உலகம் மீட்சி கண்டது.

நன்றி, மரியே, நன்றி!
உன் கீழ்ப்படிதலுக்கு நன்றி!
தேவ சித்தம் உன் வாழ்வானது;
அது எங்கள் வாழ்விற்கும் ஒளியானது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

August 24, 2025

அமெரிக்காவில் வெள்ளைநிறக் குழந்தைகள் சிகப்புநிற பச்சைநிற, ஊதாநிறப் பலூன்களைப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புநிற நீக்ரோ குழந்தைகள் வெள்ளை நிறக் குழந்தைகளைப் பார்த்து, "கறுப்புநிறப் பலூன்கள் மேலே பறக்குமா?" என்று கேட்டனர். அதற்கு வெள்ளைநிறக் குழந்தைகள் கூறினர்: "நிச்சயமாகப் பறக்கும்; ஏனெனில் பறப்பது வெள்ளைநிறமோ, பச்சைநிறமோ, கறுப்புநிறமோ இல்லை;மாறாக, பலூன்களில் உள்ள காற்றுதான்  பலூன்களை உயரப் பறக்கச் செய்கின்றது."

அவ்வாறே, மனிதர்களை விண்ணகத்துக்குக் கொண்டு செல்வது அவர்களது மதங்கள் அல்ல; மாறாக, கடவுள்மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையுமாகும்.

 இவ்வுண்மையை பேதுரு  தெளிவாகக் கூறியுள்ளார்: "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை... எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒருவர் கேட்கிறார்: "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" இக்கேள்வியைக் கேட்டவர், ஒருசிலர்தான் மீட்படைவர் என்ற குறுகிய மனநிலையைக் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.
 யூத இனத்தார் மட்டுமேமீட்புப்பெறுவர். பிற இனத்தவர் மீட்படையமாட்டார்கள் என்ற எண்ணம் யூதர்களுடைய மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறுகிறார்: "பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்" (லூக் 13:28-30).

ஒரு பங்குத்தந்தை மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களிடம், "நரகத்திற்குப் போகிறவர்கள் கையை உயர்த்துங்கள்" என்றுகேட்டபோது, ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான். பங்குத்தந்தை அவனிடம், "ஏண்டா நீ ஒருவன் மட்டும் நரகத்துக்குப்போக விரும்புகிறாய்? " என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: "சாமி! நீங்கத் தனியாகப் போக வேண்டாம்; உங்களுக்குத் துணையாக நானும் வருகின்றேன்." ஆம், சாதாரண மக்கள் விண்ணகம் செல்ல, பங்குத்தந்தை நரகத்துக்குச் செல்லலாம். மற்ற மதத்தினர் விண்ணகம் செல்ல, கிறிஸ்தவர்கள் நரகத்துக்குச் செல்லலாம். 

புனித அகுஸ்தினை மேற்கோள் காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது; "திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது, உள்ளத்தாலன்றி, உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை" (திருச்சபை, எண் 14). 
திருமுழுக்குப் பெற்றவர்கள் அன்புவாழ்வு வாழவில்லை என்றால், அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்: உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல; அத்தகையவர் மீட்படைவதில்லை.

மீட்பு என்பது கடவுளின் கொடை, ஆனால் அதே நேரத்தில் மீட்படைய உழைக்க வேண்டும்.

 திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலி 2:12).

 "உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள் உன்னையன்றி உன்னை மீட்கமாட்டார்" (புனிதஅகுஸ்தின்).
 மீட்படைய நாம் என்ன செய்ய வேண்டும்? 'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்திச் செல்ல முயலுங்கள்" (லூக் 13:24) என்கிறார் கிறிஸ்து.

 இடுக்கமான வழி இயேசு சென்ற வழி, 
அதுதான் சிலுவையின் வழி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24).

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் "(எபி12:6). 
எனவே, துன்பத்தைச் சாபமாகக் கருதாமல் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருத வேண்டும். கடவுள் நம்முடைய இம்மைநலன்களில் மட்டுமல்ல, மறுமை நலன்களிலும் அக்கறை கொண்டவர். 
எனவேதான் நிலையற்ற இவ்வுலக இன்பங்களைப் பற்றிக்கொண்டு நிலையான விண்ணக வாழ்வை நாம் இழந்து விடாமல் இருக்க, துன்பங்கள் வழியாக நம்மைத் தூய்மைப்படுத்தி விண்ணக வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார்.

"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் அம்மாவை வாங்கமுடியுமா? " என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, "காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா? என்று கேட்கிறார்.

 "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார்? (மத் 16:26). "மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன? காட்டுக்குச் சென்று அனைவரும் அழிவீர்கள்" (லூக் 13:3) என தவம் செய்வது தவம் இல்லை.

 மாறாக, ஒருவர் தமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும்தான் தவம் என்கிறார் வள்ளுவர்.

"உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு" (குறள் 261)

நமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் சில துன்பங்கள் நம் உடலில் தைத்த முள்ளைப் போன்று வருத்தலாம்; நாம் செருக்குறாதபடியும் கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்கும்படியும் கடவுள் அத்துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பவுல் அடிகளார் போன்று புரிந்துகொள்ள வேண்டும்.

 மேலும் பிறர்க்கு நாம் முற்பகல் தீமை செய்தால், பிற்பகல் அதே தீமை நம்மைத் தாக்காமல் விடாது.

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் நமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்" (குறள் 319)

எனவே. இடுக்கமான வாயில் வழியில் செல்வோம். தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவோம். மீட்படைவோர் எவ்வளவுபேர்? என்று கேட்காது. நாம் மீட்படைவோமா? என்று கேட்போம். நம்மில் நற்செயலைத் தொடங்கிய கடவுள் அதை நிறைவு செய்வாராக (பிலி 1:6).

இறை அடியார்  ஃபுல்டன்ஷீன் ஆயர் சொல்லும் விண்ணகத்தில் மூன்று ஆச்சரியங்கள்: 
1. நாம் எதிர்பார்க்காதவர்கள் அங்கே இருப்பார்கள் அது ஒரு ஆச்சரியம். 
2.  நாம் எதிர்பார்த்தவர்கள் அங்கே இருக்க மாட்டார்கள். ஆச்சரியம் 
3. நாம் விண்ணகத்திற்கு வந்தது ஒரு ஆச்சரியம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கன்னி மரியாவின் கீழ்படிதல்

ஒரு அடர்ந்த காடு. அதில் ஒரு மலை. இந்த மலையின் அடிவாரத்தில்  ஒரு குகை. அந்த குகையில் ஒரு ஆண் சிங்கமும் ஒரு பெண் சிங்கமும் வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இரண்டு குட்டிகள். ஒரு நாள் இந்த ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் இரைதேட செல்ல திட்டமிட்டன. அப்பொழுது தங்களுடைய குட்டிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கொடுத்தன. "இங்க பாருங்க, நாங்க போயி, இறை தேடிட்டு வந்து உங்களுக்கு கொடுப்போம். ஆகையினால நாங்க வர்ற வரைக்கும், நீங்க இந்த குகையை விட்டு வெளியே போகக்கூடாது" என்று கூறின. இப்படி ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் வெளியே சென்றவுடன். இந்த குட்டிகளில் மூத்த குட்டி இளைய குட்டியை பார்த்து சொன்னது, "என்ன நம்ம இங்கேயே முடங்கி கிடக்க வேண்டி தா இருக்கு, தம்பி வா நம்ம வெளியே போயிட்டு வரலாம்" என்று அழைத்தது. அதற்கு இளைய குட்டி சொன்னது "அம்மா அப்பா சொன்னத நான் மீற மாட்டேன். நான் வரமாட்டேன் "என்று சொல்லியது. ஆனால் மூத்த குட்டி அம்மா அப்பா உடைய அறிவுரையை புறக்கணித்துவிட்டு தனியாக, வெளியே சுதந்திரமாக சென்றது. அப்படி தனியாக அலைந்து திரிந்த இந்த சிங்கக் குட்டியை ஒரு வேடன் பிடித்து விட்டான். பிறகு அதை ஒரு விலங்கியல் பூங்காவிலே ஒப்படைத்து விட்டு, அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு போய் விட்டான். அந்தக் குட்டியை விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு கூண்டுக்குள் போட்டு பூட்டி விட்டார்கள். பாவம் அந்த குட்டியோ அந்த கூண்டில் இருக்கிற ஜன்னல் கம்பியை கடித்து கடித்து வேதனையோடு வெளியே போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. கீழ்ப்படியாமல் போனதால் இப்படி  ஒரு பெரிய ஆபத்து அதற்கு நேர்ந்தது. கீழ்ப்படிந்த  இளைய சிங்கக்குட்டி சந்தோஷமாக அம்மா அப்பாவோட வாழ்ந்தது

👑கீழ்படிதல் என்பது கிறிஸ்தவ வாழ்வில் ஒரு அடிப்படைப் பண்பாகும், மேலும் மரியாள் இந்த நற்பண்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அன்னை மரியாள் தன்னையே முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்து இறைவனின் திட்டப்படி வாழ்ந்த காரணத்தினால், கடவுள் அவரை உயர்த்தினார்.

 👑மரியாவின் கீழ்படிதல் ஒரு தனிப்பட்ட நற்பண்பாக மட்டுமல்லாமல், அது ஒரு ஆழமான இறையியல் கருத்தாகவும் விளங்குகிறது. 

👑அவரது கீழ்படிதல் மனிதகுலத்தின் மீட்புக்கும், நிறைவான வாழ்வைப் பெறுவதற்கும் அடிப்படையாக இருந்தது. 
இது அவரது தனிப்பட்ட புனிதத்தன்மைக்கு அப்பால், உலகளாவிய மீட்பின் தாக்கங்களைக் கொண்டுள்ளது. மரியாவின் கீழ்படிதல் அவரது தாழ்ச்சி, தூய்மையான வாழ்வு, மற்றும் ஆழமான இறைநம்பிக்கை போன்ற பிற நற்பண்புகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இந்த நற்பண்புகள் அனைத்தும் அவரது கீழ்படிதலுக்கு வலுவூட்டி, கடவுளின் அருளைப் பெற வழிவகுத்தன.



2. கீழ்படிதலின் இறையியல் அடிப்படைகள்:

👑கிறிஸ்தவத்தில்  கீழ்படிதல் என்பது இறைவனின் சித்தத்திற்கு நம்மை முழுமையாக ஒப்படைப்பதாகும். இது வெறும் கட்டளைகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், இறைவனின் திட்டத்தில் நம்பிக்கை வைத்து, நமது சொந்த விருப்பங்களை ஒதுக்கி வைப்பதாகும். 

👑பொதுவாக, கீழ்படிதல் என்பது பெற்றோருக்கும் பெரியோருக்கும், ஆசிரியர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் துறைகளுக்கும் அவசியமானதாகும். 

👑இது ஒழுக்கம், அறிவு, ஞானம், மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. அன்னை மரியாள் சிவில் சட்டங்களுக்கும், சமயச் சட்டங்களுக்கும் கீழ்படிந்த ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 

👑ஆனால், அன்னை மரியாளின் கீழ்படிதல் தனித்துவமானது, ஏனெனில் அது மனிதகுலத்தின் பாவத்தில் இருந்து மீட்பு பெற்று நிறைவான வாழ்வைப் பெற்றுக்கொள்ள அடிப்படையாக அமைந்தது. 

👑அவர் தனது மகனான இயேசுவின் திருவுளத்திற்கு முழுமையாகப் பணிந்தார், 
பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"(யோவான் 2:5) என்று கூறினார். இது கீழ்படிதலின் ஆழமான பரிமாணத்தைக் காட்டுகிறது.

👑ஏவாளின் கீழ்படியாமைக்கு எதிரான மரியாவின் கீழ்படிதல்:

 "புதிய ஏவாள்இறையியல்

கிறிஸ்தவ இறையியலில், அன்னை மரியாள் "புதிய ஏவாள்" என்று அழைக்கப்படுகிறார். முதல் தாயான ஏவாள் கடவுளின் கட்டளைக்கு கீழ்படியாமல் பாவம் செய்து சாத்தானுக்கு அடிமையானார், இதன் விளைவாக பாவம் உலகிற்குள் வந்தது. இந்த கீழ்படியாமை மனிதகுலத்திற்கு மரணத்தையும், கடவுளுடனான உறவில் பிளவையும் கொண்டு வந்தது. 

👑மரியாளின் கீழ்படிதல் ஏவாளின் கீழ்படியாமையின் விளைவுகளை மாற்றியமைத்தது. 
புனித இரேனியுஸ் (Irenaeus) போன்ற ஆரம்பகால திருச்சபைத் தந்தையர்கள், "ஏவாளின் கீழ்படியாமையின் முடிச்சு மரியாளின் கீழ்படிதலால் அவிழ்க்கப்பட்டது" என்று குறிப்பிடுகிறார்கள். 

 👑ஏவாள் அவநம்பிக்கையால் கட்டியதை, மரியாள் விசுவாசத்தால் விடுவித்தார். இந்த ஒப்புமை, ஆதாம் மற்றும் இயேசுவின் (புதிய ஆதாம்) ஒப்பீட்டுக்கு இணையாகக் காணப்படுகிறது. ஆதாமின் கீழ்படியாமையால் பாவம் உலகிற்குள் வந்தது போல, புதிய ஆதாமான இயேசுவின் கீழ்படிதலால் மீட்பு வந்தது. அதேபோல், ஏவாளின் கீழ்படியாமையின் விளைவுகளை புதிய ஏவாளான மரியாள் தனது கீழ்படிதலால் மாற்றியமைத்தார்.

👑மரியாள், கபிரியேல் தூதரின் வார்த்தைகளை நம்பி, இறைவனின் திட்டத்திற்கு "ஆகட்டும்" என்று பதிலளித்ததன் மூலம், மனிதகுலத்தின் மீட்புக்குக் காரணமாக அமைந்தார்.

👑இந்த இறையியல் பார்வை, மரியாவின் கீழ்படிதல் ஒரு தனிப்பட்ட செயல் மட்டுமல்ல, அது மீட்பின் வரலாற்றில் ஒரு அத்தியாவசியமான, செயலில் பங்கு கொண்ட ஒரு நிகழ்வு என்பதைக் காட்டுகிறது. 
அவரது கீழ்படிதல், பாவத்தின் பிணைப்புகளை அவிழ்த்து, மனிதகுலத்திற்கு புதிய வாழ்வை அளிக்கும் கடவுளின் திட்டத்தை செயல்படுத்தியது.

👑மரியாவின் "ஆகட்டும்" (Fiat) - இறைவனின் திட்டத்திற்கு முழுமையான ஒப்புவிப்பு. 
மங்கள வார்த்தை அறிவிப்பின்போது மரியாள் கூறிய "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1:38) என்ற வார்த்தைகள்  அவரது கீழ்படிதலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். 

👑இந்த "ஆகட்டும்" என்பது வெறும் சம்மதம் அல்ல, 
மாறாக இறைவனின் சித்தத்திற்கு ஒரு மகிழ்ச்சியான ஒப்புவிப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பாகும். 
இது ஒரு செயலற்ற சரணாகதி அல்ல, ஆனால் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆழமான அன்பின் வெளிப்பாடு.

👑மரியாள் முழுமையாகப் புரிந்து கொண்டதால் அல்லது அவரது எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்ததால் "ஆம்" என்று சொல்லவில்லை.
மாறாக, அவர் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் "ஆம்" என்று சொன்னார். 
இது நிச்சயமற்ற சூழ்நிலைகளிலும் கடவுளின் அழைப்பிற்கு பதிலளிக்கும் விசுவாசத்தின் ஆழமான மாதிரியை வழங்குகிறது. உண்மையான கீழ்படிதல் என்பது முழுமையான புரிதல் இல்லாதபோதும், குழப்பம், கவலை அல்லது பயம் ஏற்பட்டபோதும் கடவுளின் சித்தத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.

👑மரியாவின் இந்த முதல் "ஆம்" என்பது அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த ஒரு அர்ப்பணிப்பாகும். 

👑உதாரணமாக, கடவுளின் திட்டத்திற்குப் பணிந்து நடந்த அவரது பாதை, இறுதியில் அவரை சிலுவையின் அடிக்கு இட்டுச் சென்றது, அங்கு அவர் தனது மகனின் துன்பங்களில் தனது தாய்மை அன்பால் பங்கேற்றார.

இந்த கீழ்படிதல் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, மாறாக வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம், தொடர்ச்சியான சரணாகதி மற்றும் தியாகத்தை உள்ளடக்கியது என்பதைக் காட்டுகிறது.

3. மரியாவின் கீழ்படிதலின் வெளிப்பாடுகள்: 

விவிலிய மற்றும் மரபுவழி நிகழ்வுகள்

அன்னை மரியாளின் கீழ்படிதல் அவரது வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகளில் வெளிப்பட்டது, இவை ஒவ்வொன்றும் ஆழமான இறையியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
1) மங்கள வார்த்தை அறிவிப்பு
லூக்கா நற்செய்தி 1:38 இல் பதிவாகியுள்ளபடி, வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை அறிவித்தபோது, மரியாள் தனது கன்னிமை குறித்த தயக்கத்தை வெளிப்படுத்தினாலும் , உடனடியாக "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று பதிலளித்தார். இது இறைவனின் திட்டத்திற்கு அவர் அளித்த முழுமையான மற்றும் துணிச்சலான "ஆம்" ஆகும், இது கடவுள் மனுஉரு எடுத்தலின்  ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

2) பெத்லகேம் பயணம் மற்றும் இயேசுவின் பிறப்பு
அகுஸ்து சீசரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டளைக்குக் கீழ்படிந்து, மரியாள் கர்ப்பிணியாக இருந்தபோதிலும், யோசேப்புடன் பெத்லகேமுக்கு சுமார் 70 மைல் தொலைவு கடுங்குளிரில் பயணம் மேற்கொண்டார். 
இது சிவில் சட்டங்களுக்கு அவர் காட்டிய கீழ்படிதலைக் காட்டுகிறது, மேலும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

3) கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

மோசேயின் சட்டத்தின்படி, இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றியதன் மூலம் மரியாள் சமயக் கடமைகளுக்குக் கீழ்படிந்தார். இது இறைவனின் சட்டங்களுக்கும், மரபுகளுக்கும் அவர் காட்டிய மரியாதையை வெளிப்படுத்துகிறது.

4) கானா திருமண நிகழ்வு

கானா திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோனபோது, மரியாள் பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறினார். 
இது இறைவனின் சித்தத்திற்குப் பணிந்து நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 
இந்த நிகழ்வில், இயேசுவும் தனது தாயின் சொற்களுக்குக் கீழ்படிந்து முதல் அற்புதத்தைச் செய்தார். 
இந்த சம்பவம் கீழ்படிதலின் ஒரு தனித்துவமான பரஸ்பர தன்மையை வெளிப்படுத்துகிறது. 
மரியாள் பணியாளர்களை இயேசுவுக்குக் கீழ்படியுமாறு அறிவுறுத்துகிறார், அதே சமயம் இயேசு தனது தாயின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கிறார்.
 இது தெய்வீக திட்டத்திற்குள் கீழ்படிதலும் அதிகாரமும் பல திசைகளில் செயல்பட முடியும் என்பதையும், மரியாவின் தனித்துவமான பங்கு தெய்வீக செயலை அவரது பரிந்துரை மற்றும் அறிவுறுத்தல் மூலம் எளிதாக்குகிறது என்பதையும் காட்டுகிறது.

5) சிலுவையின் அடியில்:

கல்வாரிப் பயணத்தில் இயேசுவின் உண்மைச் சீடராக உடன் நடந்தது முதல், சிலுவையின் அடியில் அவரது துன்பங்களில் பங்கேற்றது வரை, மரியாள் இறைவனின் திட்டத்திற்கு முழுமையாகக் கீழ்படிந்தார். 
இது அவரது கீழ்படிதலின் இறுதி மற்றும் மிகவும் வேதனையான வெளிப்பாடாகும். 
அவரது கீழ்படிதல் ஒரு தொடர்ச்சியான, ஆழமான அர்ப்பணிப்பாகும், இது அவரது வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் சவால்களிலும் வளர்ந்தது. 
இது சிலுவையின் அடியில் உச்சக்கட்டத்தை அடைந்தது, அங்கு அவர் தனது மகனின் துன்பங்களில் பங்கேற்றார், 
இது உண்மையான கீழ்படிதல் பெரும்பாலும் நீடித்த தியாகத்தையும் துன்பத்தையும் உள்ளடக்கியது என்பதைக் காட்டுகிறது.

👑இயேசுவின் உண்மைச் சீடராக மரியாள்

அன்னை மரியாள் இயேசுவுக்குத் தாயாக இருந்தாலும், அவர் இயேசுவின் உண்மைச் சீடராகத் திகழ்ந்தார். கருவில் சுமந்தது முதல் கல்வாரிப் பயணத்தில் உடன் நடந்தது வரை, அவர் இயேசுவின் போதனைகளைக் கேட்டு அதன்படி நடந்தார், துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார். 
இது கீழ்படிதல் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட உறவு மட்டுமல்ல, அது ஒரு வழிகாட்டியின் போதனைகளைப் பின்பற்றுவதையும், அதன் மூலம் ஏற்படும் சவால்களை ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்கியது என்பதைக் காட்டுகிறது. 

நமது வாழ்க்கைக்கான செய்தி:
1. வாழ்க்கை சூழலில் கீழ்படிதல்

இங்க ஒரு கதை இருக்கு, கேளுங்க.
ஒரு கணவன், மனைவி ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. சண்டை எதனாலனு தெரியல. வழக்கமா நடக்குறதுதான்.
சண்டை முத்தினதும், மனைவி கோபமா, "எல்லா சண்டையிலேயும் நான் மட்டும் ஏன் உங்களுக்குப் பணிஞ்சு போணும்?"னு கேட்டாங்க.
கணவனோ அமைதியா, "பணிஞ்சு போறதுல நீதான் பெரிய ஆளுன்னு ஒத்துக்கறேன்"னு சொன்னாரு.
இதைக்கேட்டதும் மனைவிக்கு கோபம் வந்ததோ, சந்தோஷம் வந்ததோ, அவங்க "என்ன கிண்டல் பண்றீங்களா?"னு கேட்டாங்க.
அதுக்கு கணவன், "இல்ல, நிஜமாவே சொல்றேன். ஏன்னா, நான் ஒரு சண்டையிலதான் ஜெயிப்பேன்னு நினைக்கிறேன். நீயோ எல்லா சண்டையிலேயும் பணிஞ்சு போய், கடைசியில எல்லா சண்டையிலயும் ஜெயிச்சுடுற"னு சொன்னாரு.
இதைக் கேட்டு மனைவி சிரிச்சுட்டாங்க. அப்புறம் சண்டை நின்னு போச்சு.
- கணவன் மனைவி ஒருவர் பற்றவருக்கு பணிந்து வாழுகின்ற போது குடும்பம் பலப்படும் குடும்ப உறவு மேம்படும்
- பிள்ளைகள் பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குருக்களுக்கும் கீழ்படிந்து வாழ்கின்ற பொழுது கன்னி மரியாவை போல மிக உயர்ந்தவர்களாக மாற முடியும். 

2. தண்ணி மரியாவை போல கடவுளை நம்புவோம். 

எண்ணிக்கை 20:12
ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், 
“இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்” என்றார்.

தொடக்க நூல் 19: 24 - 26
கடவுளுக்கு கீழ்படியாத லோத்துவின் மனைவி உப்பு சிலையாக மாறிப் போனால்

3. ஜெபமாலை சொல்லுங்கள் அன்னையின் பிள்ளைகளாக வாழுங்கள். 

ஜெபமாலையில் :

ஏழு தனிப்பட்ட மணிகள் 7 திருவருட்ச சாதனங்களை குறிக்கிறது 

முதல் மூன்று மணிகள் மூவரு கடவுளை குறிக்கிறது

 10 மணிகள் பத்து கட்டளையை குறிக்கிறது 

சிலுவை மீட்பை குறைக்கிறது

 அருள் நிறைந்த மரியே என்று ஜெபத்தை ஜெபமாலையில் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிற பொழுது இயேசுவையும் மாதாவையும் சந்திக்கிறோம் 

ஜெbaமாலை ஜெபிக்கிறவர்கள் மாதாவை அன்பு செய்கிறவர்கள்

ஜெபிப்போம்:
​"அன்பின் ஆண்டவரே, உம்முடைய அன்னை மரியாவின் கீழ்ப்படிதலை நாங்கள் இன்று தியானித்தோம். 'உமது சித்தப்படியே ஆகட்டும்' என்று அவர் சொன்ன வார்த்தை, எங்கள் வாழ்க்கையிலும் எதிரொலிக்கட்டும். நாங்களும் உமது விருப்பத்திற்கு முற்றிலும் அடிபணிந்து, உம்மைப் பின்பற்றி வாழ எங்களுக்கு உதவிசெய்யும். ஆமென்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றி உணர்வு gratitude

திருப்பாடல்கள் 146:2
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.

சகோ. சாந்தி ஆரோக்கிய மரி

🌹Thirukkural 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (108)

 ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு அல்ல; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.
மனிதன் செய்யும் நன்மையையே மறக்கக்கூடாது என சொல்லும்போது நன்மையே உருவான கடவுளை நான் மறக்கலாமா.

🌹நன்றி உள்ளவர்கள் புகழப்படுகிறார் 
நன்றி கெட்டவர்கள் இகழப்படுகிறார்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு பெரிய ஹோட்டலில் உணவருந்த சென்றார்...

☝️ஒருவருக்கு நன்றி சொல்லும் போது அவரை மதிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் என்பது பொருள்

இயேசு 
லூக்கா 10:21
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார்.

🌹 பத்து பேரும் குணம் பெறவில்லையா கடவுளுக்கு நன்றி சொல்ல இந்த அந்நியனைத் தவிர வேறவரும் வரவில்லை. 

லூக்கா 17:16 -18
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

மரியா

லூக்கா 1:47
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

புனித இரண்டாம் ஜான் பால்

கடந்த காலத்தை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்கள். நிகழ்காலத்தை உற்சாகத்துடன் வாழுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குங்கள். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்


1 தெசலோனிக்கர் 5:16
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.

1 தெசலோனிக்கர் 5:17
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.

1 தெசலோனிக்கர் 5:18
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

நன்றி உணர்வின் பயன்கள்: 

நன்றியுணர்வு கடவுளைப் பார்க்க நமக்கு உதவுகிறது.

 நன்றியுணர்வு நம் ஆன்மீகக் கண்களைத் திறக்கிறது. ...

 நன்றியுணர்வு நம்மை கடவுளின் சித்தத்தில் நேரடியாக வைக்கிறது. ...

 நன்றியுணர்வு அமைதியைக் கொண்டுவருகிறது. ...

 நன்றியுணர்வு நம்மை கடவுளிடம் ஈர்க்கிறது. ...

 நன்றியுணர்வு மனநிறைவைக் கொண்டுவருகிறது. ...

 நன்றியுணர்வு நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. ...

 நன்றியுணர்வு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. ...

 நன்றியுணர்வு சாத்தானின் பொய்களை புறக்கணிக்கிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித விண்ணேற்பு அன்னை திருவிழா




1. அன்னை மரியாவை போல் நாமும் விண்ணக மகிமையை அடைவோம். 
2. அன்னை மரியாவை போல ஆண்டவரை அன்பு செய்வோம் 
3. அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகளாக வாழ்வோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்புங்கள் ஜெபியுங்கள்

இரண்டு சிறுவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நல்ல வசதியான அவருடைய பாட்டி வீட்டிற்கு சென்றார்கள். பேரன்களை பார்த்த பாட்டி எந்த சந்தோஷப்பட்டார். மொட்டையாய் தின்பண்டங்களை செய்து கொடுத்தார். கதைகள் எல்லாம் சொன்னார். இரவு படுக்கப் போகும் போது அவர்களுக்கு படுக்கை அறையை தயார் செய்து கொடுத்தார். அப்பொழுது அவர்களிடத்தில் தூங்க போறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஜெபம் பண்ணனும் என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார். பாட்டி அங்கேயே ஜெபித்துக் கொண்டிருந்தார். பேரன்களை படுக்க வைத்து தூங்க வைப்பதற்காக வந்தார். இந்த இரண்டு சிறுவர்களும் அங்கே ஜெபித்தார்கள். முதலில் பெரியவன் ஜெபித்தான். அடுத்தது அண்ணன் போலவே தம்பியும் அப்படியே கிடைத்தான். இறுதியாக "கடவுளே எனக்கு ஒரு நல்ல ஸ்கூட்டரும் விளையாட்டுப் பொருள்களும் வாங்கி கொடுங்க" என்று சத்தமாக கத்தி ஜெபித்தான். அதற்கு அவனுடைய அண்ணன் சொன்னான். ஏன்டா இப்படி கத்துற கடவுளுக்கு என்ன காது கேட்காதா? என்று கேட்டான். தம்பி சொன்னா "கடவுளுக்கு காது கேட்கும் ஆனா பாட்டிக்கு காது கேட்காதே" அப்படின்னான்

தந்தை பியோ 

"ஜெபம் நம்மிடம் உள்ள சிறந்த ஆயுதம்; அது கடவுளின் இதயத்தின் திறவுகோல். நீங்கள் இயேசுவிடம் உங்கள் உதடுகளால் மட்டுமல்ல, உங்கள் இதயத்தாலும் பேச வேண்டும்."

"பணிவும், வாழ்க்கையின் தூய்மையும் நம்மை கடவுளிடம் உயர்த்தும் சிறகுகள். நல்ல நோக்கத்துடனும், நல்லெண்ணத்துடனும் செய்யப்படும் ஜெபங்கள் அனைத்தும் நல்லவை."

"ஜெபியுங்கள் நம்புங்கள் கவலைப்படாதீர்கள்" "கவலை பயனற்றது" 

பத்ரே பியோ இயேசுவிடம் செய்த பிரார்த்தனை

"உமது நன்மைகளையும், உமது துன்பங்களையும், உமது பரிகாரத்தையும், உமது கண்ணீரையும் என் முழு பலத்தோடு பற்றிக் கொள்கிறேன், இதனால் இரட்சிப்பின் பணியில் நான் உங்களுடன் ஒத்துழைக்க முடியும். உமது வேதனைக்கும், உமது இரத்த வியர்வைக்கும், உமது மரணத்திற்கும் ஒரே காரணமான பாவத்திலிருந்து தப்பிக்க எனக்கு பலம் கொடுங்கள்."

நற்செய்தி: லுக்கா 11: 1-13

# இயேசு ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறார் .
#  விடாமுயற்சியுடன் ஜெபிக்க சொல்லுகிறார்.

1. இயேசுவே ஜெபிக்கிறார். இயேசு கடவுளின் மகன் பாவமே இல்லாதவர் தந்தையிடத்திலே ஜெபிக்கிறார். மிகப்பெரிய முன்மாதிரி.

2. சீடர்கள் ஜெபிக்க கற்றுத் தரும்படி கேட்கிறார்கள்.

3. இயேசு அருமையான ஒரு ஜெபத்தை கற்றுக் கொடுக்கிறார். 
# விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே...
# மிக முக்கியமான ஜெபம். இயேசுவே கற்றுக் கொடுத்த ஜெபம்.

# மீட்டரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம் இன்று திருப்படியிலே அனைவரும் நம்பிக்கையோடு ஜெபிப்பதற்கு திருச்சபை அழைக்கிறது. மிக முக்கியமான ஜெபம். உணர்ந்து ஜெபிக்க வேண்டும் நம்பிக்கையோடு ஜெபிக்க வேண்டும். 

4.  மூன்று விதமான ஜெபம் ஜெபமாக அமைந்திருக்கிறது. 
1) கடவுளை நோக்கிய ஜெபம் 
2) தன்னை நோக்கிய ஜெபம் 
3) பிறரை நோக்கிய ஜெபம்
# ஒரு முழுமையான ஜெபம் இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம். 

5. நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் அந்த நண்பனைப் போல ஜெபிக்க வேண்டும். 
# ஆபிரகாமை போல ஜெபிக்க வேண்டும். (தொ. நூல்18: 20-32)

# கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.......
தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

நம்மை ஆய்வுக்கு உட்படுத்துவோம்: 
1. நாம் ஜெபிக்கிறோமா? 
2. நம் ஜெபம் கேட்கப்படுகிறதா?

எபிரேயர் 4:16
எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

மாற்கு 11:24
ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
மாற்கு 11:25
நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நற்கருணை ஆராதனை 27/07/2025

புனித தந்தை பியோ
# நற்கருணை ஆராதனை செய்வோரின் பாதுகாவலர்.

# அவரை காணவில்லை என்று தேடவே தேவையில்லை. நற்கருணை பேழை இருக்கும் இடத்தில் போய் பார்த்தால் அவர் அங்கு தான் இருப்பார்.

# பல மணி நேரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தில் மூழ்கி இருப்பதே அவருக்கு அலாதி இன்பம்.

#1920 களில் பியோவைப் பற்றிய விளம்பரத்தைக் குறைக்க வத்திக்கான் ஆரம்பத்தில் கடுமையான தடைகளை விதித்தது: அவர் பொதுவில் திருப்பலி செய்யவோ, மக்களை ஆசீர்வதிக்கவோ, கடிதங்களுக்கு பதிலளிக்கவோ, தனது ஐந்து காயங்களை பொதுவில் காட்டவோ, அவரது ஆன்மீக இயக்குநரான பத்ரே பெனடெட்டோவுடன் தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டது.

# பத்ரே பியோ உயிருடன் இருந்தபோது அதிகாரப்பூர்வ திருச்சபையால் சோதனைகள் மற்றும் தண்டனைகளை அனுபவித்தார் . 1922 ஆம் ஆண்டில், OFM இன் பாதிரியார் அகோஸ்டினோ ஜெமெல்லி, பத்ரே பியோவின் ஐந்து காயங்களை ஆராய்ந்து அவை ஒரு மோசடி என்று கூறினார். வத்திக்கான் திருப்பீடம் பத்ரே பியோவிற்கு எதிராக முறையே 1923, 1924 ஆம் ஆண்டுகளில் நான்கு ஆணைகளையும், 1926 ஆம் ஆண்டில் இரண்டு ஆணைகளையும் வெளியிட்டது.

# தந்தை பியோ நற்கருணை ஆண்டவரின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். அவர் சொல்கிறார், " இயேசு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறார். அவருடைய பிரசன்னம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அவருக்காக நான் என்ன செய்ய முடியும் என்பது எனக்கு ஒரே குழப்பமா இருக்கிறது. "இயேசுவே என் ஆன்ம உணவே" என்று மீண்டும் மீண்டும் சொல்லி அழுகிறேன். 

# ஒவ்வொரு முறையும் நற்கருண பெற்ற பிறகு
 எப்படி உணர்ந்தார் என சொல்லுகிறார். "இந்த உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதையே நான் மறந்துவிடுகிறேன். என் மனமும் இதயமும் வேறு எதையுமே விரும்புவதில்லை. சில சமயம் எனக்கு வேற ஏதாவது வேணுமா அப்படிங்கிறதையே என் மனதுக்கு வராது" 
அதுதான் தந்தை பியோ நற்கருணை ஆண்டவரின் கொண்டிருந்த ஒன்றிப்புக்காண சிறப்பான அருள்.

கொலோசியர் 2: 13-14
"நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்."

திருப்பாடல் 138: 7-8

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; 
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். 

ஜெப உதவி:

1. சகாயராணி 

2. ஆரோக்கிய மீனு பர்வதம் தேர்வில் வெற்றி பெறவும் குழந்தை பாக்கியத்திற்காகவும்

3. மகன் விரைவில் பணமாற்றமடைந்து தன்னிடம் வரவும் விரைவில் திருமணம் நடைபெறவும் வேண்டி.

4. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியசாமி விரைவில் சுயநினைவு பெற்று குணம் பெற வேண்டி.
 
5. அருட் சகோதரி ஜுடித் 
அருட் சகோதரி ஜோஸ்பின் மொறாய்ஸ்
அருட் சகோதரி டென்னிஸ்

6. சகோதரி கரோலின் உடல் நலத்திற்காக. 
6. பிரேமா உடல் நலத்திற்காக 
7. நிர்மலா உடல் நலத்திற்காக

8. சில்வஸ்டர் வேலை வாய்ப்புகள் வேண்டி
பிள்ளைகளால் கைவிடப்பட்டு 

9. விரட்டி அடிக்கப்படுகின்ற வயது முதிர்ந்த பெற்றோர்களுக்காக முதியவர்களுக்காக

10. Fr. அருள்தாஸ் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS